ஆளுமை

உலகம் சுற்றிய மனிதர்.

அறிவியல் மேதை ஜி டி நாயுடு எழுதிய நான் கண்ட உலகம் என்ற பயணக்கட்டுரை நூலை வாசித்தேன். இணையத்தில் தரவிறக்கம் செய்யும்படி கிடைக்கிறது. இலங்கையிலிருந்து கிளம்பி ஒராண்டு காலம் உலகம் முழுவதையும் சுற்றிவந்திருக்கிறார் ஜி.டி நாயுடு. இது போல நான்கு முறை வேறுவேறு பயணங்கள். ஒவ்வொன்றும் பலமாத காலங்கள். இந்தப் பயணத்தில் தனக்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சுவாரஸ்யமான பயணநூல். குறிப்பாக அவர் இலங்கையிலிருந்து பயணம் செய்த பிரெஞ்சு கப்பல் பாதிக்கடலில் …

உலகம் சுற்றிய மனிதர். Read More »

கசாக்கின் நினைவில்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஒ.வி. விஜயன் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறிய பசுமையான கிராமம். அந்த ஊரினை மையமாகக் கொண்டு தான் விஜயன் தனது புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம் நாவலை எழுதியிருக்கிறார். அந்த நினைவைக் கொண்டாடும் விதத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைச் சிற்பங்களாகவும் ஒவியமாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊரின் நுழைவாயிலில் வழியம்பலம் என நாவலில் ரவி வந்து இறங்குமிடம் அழகான வளைவு கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் …

கசாக்கின் நினைவில். Read More »

இடக்கை – பவா பெருங்கதையாடல்

எனது இடக்கை நாவல் குறித்து நண்பர் பவா.செல்லத்துரை மதுரையில் சிறப்பான கதைசொல்லுதலை  நிகழ்த்தியிருக்கிறார். நாவலின் முக்கியப்புள்ளிகளைத் தொட்டுப் பேசி கேட்பவர்களை இந்நாவலை வாசிக்கும்படி தூண்டியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. நவீன கதைசொல்லியாக பவா தமிழ் இலக்கியத்தின் முக்கியச் சிறுகதைகள், நாவல்கள் குறித்து பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கதை சொல்லும் விதம் ஒரு நண்பன் நேரில் நம்மிடம் பேசுவது போல அத்தனை நெருக்கமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் பவா. நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த நண்பர் …

இடக்கை – பவா பெருங்கதையாடல் Read More »

எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார். நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற …

எழுத்தாளனின் உலகம் Read More »

என் வாழ்க்கைப் போர்

தமிழ் அறிஞர் சி.இலக்குவனார் அவர்களின் சுயசரிதையான என் வாழ்க்கைப் போர் என்ற நூலை வாசித்தேன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் இலக்குவனார். இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருஷங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன. கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதன் சாட்சியமாகவுள்ளது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த இலக்குவனாரின் தந்தை ஒரு நாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்.. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு வந்தால் இறந்து போய்விடுவார்கள் என்ற பயம் …

என் வாழ்க்கைப் போர் Read More »

செசானும் எமிலி ஜோலாவும்

வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும். சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். …

செசானும் எமிலி ஜோலாவும் Read More »

கைக்கடிகாரமெனும் சிற்பம்.

Watchmaker Masahiro Kikuno – In Tune with Time என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். சர்வதேச அளவில் கைக்கடிகாரங்களை வடிவமைப்பு செய்யும் மசஷிரோ கிகுனா என்ற இளைஞரின் உலகை ஆவணப்படுத்தியுள்ளது இப்படம். ஜென் துறவி ஒருவர் கைக்கடிகாரம் செய்ய முற்படுவது போல அத்தனை நிதானமாக, ஆழ்ந்த புரிதலுடன் அசாத்தியமான கலைத்திறமையுடன் கிகுனா கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறார். இந்த ஆவணப்படம் கடிகாரம் தயாரிப்பதை மட்டும் காட்சிப்படுத்தவில்லை. காலத்தை நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம். எப்படிக் கையாளுகிறோம். காலம் என்பதை …

கைக்கடிகாரமெனும் சிற்பம். Read More »

பனியில் ஒரு யாத்திரை

1974 ஆம் ஆண்டு இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்குப் பாரீஸில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் அவரது நண்பரான லோட்டே ஐஸ்னர் என்ற எண்பது வயது பெண்மணி மரணப் படுக்கையில் இருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் இறந்து போய் விடுவார் என்று தகவல் தெரிவிக்கபட்டது தனது தோழி சாகக் கூடாது. அவரைச் சாக விடமாட்டேன் என்று லோட்டே ஐஸ்னரைக் காண ம்யூனிச் நகரிலிருந்து பாரீஸிற்கு பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டார் இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். (WernerHerzog). கடுங் …

பனியில் ஒரு யாத்திரை Read More »

கவிஞர் ஆசை

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கவிஞர் ஆசையின் வலைப்பக்கத்திலுள்ள அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வாசித்து வருகிறேன். (https://writerasai.blogspot.com/2017/06/blog-post.html) அற்புதம். மிகச்சிறந்த கட்டுரைகள். மொழிபெயர்ப்புகள். வியந்து ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளை இவர் அளவிற்குச் சிறப்பாக யாரும் மொழியாக்கம் செய்திருப்பார்களா எனத்தெரியவில்லை. தி இந்து நாளிதழில் இவரது மொழியாக்க கட்டுரைகள் வெளியான போது வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. இணையத்தில் ஒரு சேர இவற்றை வாசிக்கும் போது ஆசையின் எழுத்துலகின் விரிவையும் வலிமையையும் …

கவிஞர் ஆசை Read More »

குல்சாரின் நினைவுகள்

1940ம் வருடம் பழைய டெல்லியிலுள்ள ரோஷனாரா பாக். அங்கே  ஒரு ஸ்டோர் ரூம். மின்சார வசதி கிடையாது. அதில் பனிரெண்டு வயது சிறுவன் இரவில் தனியே இருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலே அவனது அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு புகைப்படம் கூட கிடையாது. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக குடியேறியிருந்தது. பஜாரில் துணிப்பைகள் மற்றும் தொப்பி …

குல்சாரின் நினைவுகள் Read More »