Month: April 2013

பைனாக்குலர்

ஆன்டன் செகாவின் படிப்பு அறையில் எப்போதுமே ஒரு பைனாக்குலரை வைத்திருப்பார், அது எதற்காக என அவரிடம் ஒரு நாடக நடிகை  கேட்ட போது செகாவ் சிரித்துக் கொண்டே சொன்னார் இது தான் என்னைக் காப்பாற்றும் தேவதை” “எப்படி?”  என்று  அந்தப் பெண் கேட்டாள் “ஒன்றும் பிரமாதமில்லை. யாராவது இங்கே வந்து, சம்பந்தமில்லாமல் , தங்கள் கெட்டிக்காரத்தனதை கொட்டி உளற ஆரம்பித்தால், நான் இந்த பைனாக்குலரை எடுத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகில் போய் நின்று கொள்வேன், திடீரென ஆழ்ந்த …

பைனாக்குலர் Read More »

நடிப்பு என்றாலும்

மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்திற்குச் சென்றிருந்தேன், அது ஒரு தனி உலகம், சுவரில் வரிசை வரிசையாகத் தொங்கும் நடிகர் நடிகைகளின் தேதி கேட்டுப் பதியும் அட்டைகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் சென்றிருந்த நேரம் கிராமத் திருவிழாவில் வள்ளிதிருமணம் நாடகம் போடவேண்டும் என்பதற்காக மேலூர் அருகில் உள்ள கிராமத்தவர்கள் வந்திருந்தார்கள், இன்றைக்கும் மேடைநாடக உலகிற்கென தனிப்புகழ் கொண்ட நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களின் தேதி கிடைப்பது குதிரைக்கொம்பு தான் என்பதை அவர்களது  பேச்சில் அறிந்து கொண்டேன், அப்போது …

நடிப்பு என்றாலும் Read More »

பேட்ரிக் ரோசாரியோ

ரஷ்ய எழுத்தாளர் கொரலங்கோ கண்தெரியாத இசைஞன் என்றொரு குறுநாவலை எழுதியிருக்கிறார், அதில் பார்வையற்ற ஒரு இசைக்கலைஞனின் உலகம் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியான ஒரு அரிய இசைக்கலைஞர் சென்னையிலே வசிக்கிறார், அவரது இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள், மறக்கவே முடியாது என்று இசை ரசிகரான எனது நண்பர் கார்த்திக் ஒரு முறை தெரிவித்தார், பேட்ரிக் அலெக்சாண்டர் ரோசாரியோ. ஒரு அகார்டியன் இசைக்கலைஞர், இவரது இசை நிகழ்ச்சியினை எழுத்தாளர் ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவின் போது ஒரு முறைக் கேட்டேன், …

பேட்ரிக் ரோசாரியோ Read More »

சத்ரபியின் காமிக்ஸ் உலகம்

மர்ஜானே சத்ரபியின் (Marjane Satrapi) சிக்கன் வித் பிளம்ஸ் கிராபிக் நாவலை சென்ற ஆண்டு டெல்லி புத்தகக் கண்காட்சியின் போது வாங்கி வாசித்தேன்,  தற்போது அது திரைப்படமாக வெளியாகி உள்ளது, வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் விலகி மாறுபட்ட உருவாக்கதில் வெளியாகியுள்ள இப்படம் காமிக்ஸ் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடியது. இப்படம்  நஸர் அலி கான் என்ற தோல்வியுற்ற இசைக்கலைஞரைப் பற்றியது, தனது வயலின் உடைந்து போனதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறார், படக்கதை அவரது காதலை, …

சத்ரபியின் காமிக்ஸ் உலகம் Read More »

காதலின் நிழல்கள்

நான் குருதத்தின் ரசிகன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது படங்களைத் திரும்பப் பார்க்க பிடிக்கும், Kaagaz Ke Phool எனக்கு மிகவும் விருப்பமான படம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியுற்ற இந்தப் படம், இந்திய சினிமாவின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக பலராலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, குருதத்தின் மாஸ்டர் பீஸ் இதுவே. குருதத் படங்களின் அடிநாதம் காதலின் துயரம், உணர்ச்சிகளின் கொந்தளிப்பை குருதத் காட்சிப்படுத்தும் விதம் மிகவும் கவித்துவமானது, வி.கே.மூர்த்தி என்ற அற்புதமான ஒளிப்பதிவாளர் குருதத் படங்களுக்கு எனத் …

காதலின் நிழல்கள் Read More »

மகாபாரதம் படிப்பது எப்படி

மகாபாரதம்  முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார், இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன் மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் …

மகாபாரதம் படிப்பது எப்படி Read More »

கார்வரும் செகாவும்

உலக அளவில் சிறுகதை எழுத்தில் பெரும்சாதனை புரிந்தவர் ஆன்டன் செகாவ், அவரது பாணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று புதிய பாய்ச்சலை  நிகழ்த்தியவர் ரேமண்ட் கார்வர், (Raymond Carver) கச்சிதமான சிறுகதை என்பதற்கு அடையாளமாக கார்வரின் சிறுகதைகளைச் சொல்லலாம், அமெரிக்கச்சிறுகதை ஆசிரியர்களில் கார்வரே முதன்மையானவர், செகாவ் பாணி சிறுகதைகளின் முக்கிய அம்சங்கள், குறைவான வார்த்தைகளில் கதை சொல்வது, தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்குவது, துல்லியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, இந்த மூன்றுடன் கதையின் போக்கில் சட்டென  நிகழும் ஒரு பரவசம், …

கார்வரும் செகாவும் Read More »

அஞ்சலி

எனது விருப்பத்திற்குரிய பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்தேன், ஆனந்தவிகடனில் வெளியான விரும்பிக்கேட்டவள் என்ற எனது சிறுகதையை வாசித்துவிட்டு தொலைபேசி செய்து என்னை மிகவும் பாராட்டினார் பிபிஎஸ், அதன் ஒருவாரத்தில் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி அழைத்தார், சந்தித்த நாளில் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னை மிகவும் கௌரவப்படுத்திவிட்டீர்கள் என்று உணர்ச்சி ததும்பப் பேசி என்னை ஆசிர்வாதம் செய்தார் கடந்த சில மாதங்களில் பலமுறை மணிக்கணக்காக அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் …

அஞ்சலி Read More »

புல்லினைக் கடக்கும் காற்று

ஒனா நோ கோமாச்சி (Ono no Komachi) எனும் ஜப்பானியப் பெண் கவிஞரின் பெயரை ஒரு அரிசிக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விபட்டேன், தானியம் ஒன்றுக்குக் கவிஞரின் பெயரை வைத்திருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன், ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் பொருத்தமான கௌரவம் அதுவெனத் தோன்றியது கோமாச்சி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர்,  பேரழகி, இன்றும் ஜப்பானில் ஒப்பற்ற அழகு கொண்ட பெண்ணைக் கோமாச்சியாக இருக்கிறாள் என்றே குறிப்பிடுகிறார்கள், ஒனா நோ கோமாச்சி பற்றிய சுயவிபரக்குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை, ஆனால் …

புல்லினைக் கடக்கும் காற்று Read More »

பிறந்தநாள்

இன்று எனது பிறந்த நாள், வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **