Day: June 16, 2013

ஹெமிங்வேயின் காளைச்சண்டை

‘’காளைச்சண்டை என்பது ஒரு விளையாட்டல்ல, அது ஒரு மூன்று அங்கங்கள் உள்ள துன்பவியல் நாடகம். அதை ஒரு நடனத்தைப் பார்ப்பது போலத் தான் நாம் ரசிக்கவேண்டும். சாவை மிகுந்த நெருக்கத்தில் சந்தித்து அதன் முகத்தை ஆராய்வது தான் காளைச்சண்டை என்று கூடச் சொல்லலாம். உண்மையில் காளைச்சண்டையில் காளையை அடக்க வரும் வீரன் ஒரு கணித ஆசிரியர் கரும்பலகையின் முன்னால் நின்று கொண்டு தனது தியரத்தை விளக்கி சொல்வது போலச் சாவின் அறியப்படாத புதிரை கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறான். …

ஹெமிங்வேயின் காளைச்சண்டை Read More »

இயக்குனர் மணிவண்ணன்

இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் மறைவு தாங்கமுடியாத இழப்பு, தீவிர இலக்கியங்களை தேடித்தேடி வாசித்த படிப்பாளி அவர், ஈழத் தமிழ் மக்களின் மீது தீவிர அக்கறை கொண்ட உணர்வாளர்,  எப்போது சந்திக்கும் போதும் என்ன படித்தீர்கள் என்று தான் முதலில் கேட்பார், சிற்றிதழ் படைப்பாளிகள் பலருக்கும் அவர் உதவி செய்திருக்கிறார், 1998ல் போர்ஹே பற்றிய புத்தகம் ஒன்றினை பதிப்பிக்க வழியின்றி நானே வெளியிட்டிருந்தேன், விருதுநகரில் இருந்த எனது இல்லமுகவரிக்கு மணிவண்ணன் தொடர்பு கொண்டு அதை தான் வாங்கி படித்து …

இயக்குனர் மணிவண்ணன் Read More »

கி.ராஜநாராயணன் தபால்தலை

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கொண்டாடப்படும், தமிழின் மூத்த படைப்பாளி கி.ராஜநாராயணன் அவர்களின் தபால்தலை வெளியிடும் நிகழ்வு ஜுன் 14 மாலை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது, இதில் நேசத்திற்குரிய தோழர், ஆர்.நல்லகண்ணு,  அவர்கள் கி.ராஜநாராயணன் தபால் தலையை வெளியிட்டார், அதை நான் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. கரிசல் எழுத்தாளர்கள் சங்கமம் என்ற இந்த நிகழ்வில் கி.ராஜநாராயணனின் இலக்கியப் பங்களிப்பு குறித்து உரை நிகழ்த்தினேன், தமிழின் முன்னோடி படைப்பாளிக்கு கிடைத்த இக்கௌரவம் எழுத்தாளர்கள் அனைவரும் …

கி.ராஜநாராயணன் தபால்தலை Read More »