குறுங்கதை 65 கர்னலின் நாற்காலி.
அந்த மரநாற்காலி கர்னல் ஜேம்ஸ் ஃபார்லாங்கிற்காகவே செய்யப்பட்டது. அவர் ஆறடிக்கும் அதிகமான உயரம் என்பதால் அவரது உடலமைப்பிற்கு ஏற்ப தேக்கு மரத்தில் நாற்காலி செய்து கொடுத்தார் பெருமாள் ஆசாரி. 19வது படைப்பிரிவின் தலைவராகவும் நிலக்காட்சி ஓவியராகவும் இருந்த ஜேம்ஸ் ஃபார்லாங் தான் பயணம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வருவதற்காகவே சவரிமுத்துவை நியமித்திருந்தார்கள். அவன் நாற்காலியின் இருபக்கமும் கயிறுகள் போட்டு அதை முதுகில் சுமந்தபடியே வருவான். ஏற முடியாத மலைப்பகுதியாக இருந்தால் நாற்காலியில் ஜேம்ஸ் …