குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள்
மலைநகரம் ஒன்றில் வசித்த நான்கு நண்பர்கள் தான் முதலில் அதைத் துவக்கினார்கள். ஆனால் மெல்ல ஒவ்வொருவராக ஆர்வம் காட்டவே அது முப்பது பேர் கொண்ட நடைக்குழுவாக மாறியது. அதில் ஆறு பெண்களும் இருந்தார்கள் அவர்கள் வாரம் சனிக்கிழமை இரவு நடக்கத்துவங்குவார்கள். முழு இரவும் நடப்பார்கள். விடியும் போது எந்த ஊரை அடைகிறார்களோ அங்கே அறை எடுத்துத் தங்கிவிடுவார்கள். மறுநாள் பகல் முழுவதும் உறக்கம். திரும்பி வரும் போது பேருந்தில் பயணம் மேற்கொள்வார்கள். பகலில் நடப்பது போன்றதில்லை இரவில் …