பதாகை

எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கான பதாகை ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது

இணைய இதழ்களில் பதாகை குறிப்பிடத்தக்க ஒன்று. சிறந்த கவிதைகள், மொழியாக்கங்கள், கதைகளை வெளியிடுகிறார்கள்.

இதில் உள்ள நாஞ்சிலின் பேட்டி மிகச்சிறப்பாக வந்துள்ளது. அவரது பன்முகப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவடன் இயல்பான செறிவான கருத்துகளைக் கொண்டிருக்கிறது. இது போலவே நாஞ்சிலோடு பழகிய அனுபவம் குறித்த அம்பை மற்றும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன. சுரேஷ் கண்ணனின் கட்டுரையும், சிவானந்தம் நீலகண்டன் கட்டுரையும் எனக்குப் பிடித்திருந்தன.

தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்காகச் சிறப்பிதழை வெளியிட்ட பதாகையைப் பாராட்டுகிறேன்

https://padhaakai.com/

0Shares
0