திரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை. நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள். பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை. விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன்
••