என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
வான்கோ, பிகாசோ டாலி , ரெம்பிராண்ட், பால்காகின், பிரைடா காலோ என நவீன ஒவியர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் பத்தி தீராநதியில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
வாசகபர்வம்
எஸ். ராமகிருஷ்ணன் தான் சந்தித்த எழுத்தாளர்களையும் அவர்களது ஆளுமையையும் விவரிக்கும் இந்தப் பத்தியை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்
ஆதலினால்
குங்குமம் வார இதழில் நம்மைச் சுற்றிய எளியமனிதர்களின் இயல்புலகை விவரிக்கும் இந்தப் பத்தி இடம் பெறுகிறது.
கர்ணமோட்சம்
எஸ்.ராமகிருஷ்ணன் கதைவசனம் எழுதியுள்ள இந்தக் குறும்படம் தமிழக அரசின் மூன்று விருது உளளிட்ட பல முக்கிய திரைப்பட விருதுகளைப் பெற்றிருக்கிறது. திருவனந்தபுரம் ஆசிய திரைப்பட விழா. ஹைதராபாத் உலகத் திரைப்பட விழா, திருச்சூர் திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. திரைப்படக்கல்லுரியை சேர்ந்த மாணவரான முரளி மனோகர் இதை இயக்கியுள்ளார். இப்படத்தை காண்பதற்கு.
2007 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த புத்தங்களுக்கான விருது எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள அரவான் என்ற நாடக நுலிற்கு கிடைத்துள்ளது.
The Tenth Rasa
பெங்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள The Tenth Rasa என்ற இந்தியாவின் சிறந்த பகடிவகையை சேர்ந்த கதைகளின் தொகுப்பில் எஸ். ராமகிருஷ்ணனின் ராமசாமிகளின் வம்ச சரித்திரம் சிறுகதை இடம் பெற்றுள்ளது.
தமிழில் யூனிகோட்டில் எழுத உதவும் இலவச மென்பொருள்கள்