அஞ்சலி

அன்பிற்குரிய நண்பர் கருப்பு கருணா மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய தோழன். திருவண்ணாமலை என்றாலே கருணாவும் பவாவும் தான். நானும் கோணங்கியும் எந்த இரவிலும் வந்து சேருவோம். அன்பு காட்டி ஆதரவு கொடுத்த தோழமைகள். எத்தனை நிகழ்வுகளை கருணாவும் பவாவும் நடத்தியிருக்கிறார்கள். மறக்க முடியாத நினைவுகள். கண்ணீர் கசிகிறது. அன்பின் நண்பன் கருணா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

0Shares
0