சென்னை புத்தக் கண்காட்சியின் இரண்டாம் நாளுக்கான எனது பரிந்துரைகள்.
மிச்சக் கதைகள்

கி.ராஜநாராயணன்
அன்னம் – அகரம் பதிப்பகம்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் தனது 98வது வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பு.
••
மறக்க முடியாத மனிதர்கள்
வண்ண நிலவன்

காலச்சுவடு
இலக்கிய ஆளுமைகள் குறித்த வண்ணநிலவனின் நினைவுக்குறிப்புகள்.
••
ராஜாஜி வாழ்க்கை வரலாறு

ராஜ்மோகன் காந்தி
தமிழில்:கல்கி ராஜேந்திரன்
வானதி பதிப்பகம்
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விவரிக்கும் இந்த நூல் தமிழக அரசியல் வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் துல்லியமாக விவரிக்கிறது.
•••
இந்து மாக்கடல்
சஞ்சீவ் சன்யால்

மொழிபெயர்ப்பாளர் : சா. தேவதாஸ்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
பக்கங்கள் : 372
இந்தியப் பெருங்கடலினை முன்வைத்து இந்தியா வரலாற்றைப் புதிய கோணத்தில் ஆராய்கிறது இந்நூல்.
••
யாத் வஷேம்
கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்
நேமிசந்த்ரா

தமிழில் : கே. நல்லதம்பி
எதிர் வெளியீடு
இரண்டாம் உலகப்போரின் காரணமாக பெங்களூரில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த யூதக்குடும்பங்களின் வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது இந்த நாவல்.
••