உலக இலக்கியம் குறித்த பேருரைகளின் ஏழாம் நாளில் இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் குறித்து உரை நிகழ்த்தினேன்
ஏழு நாட்களும் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி
இந்தப் பேருரைகளைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்கள். தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
புத்தாண்டில் இப்படி ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்திய ஸ்ருதி டிவிக்கு எனது அன்பும் நன்றியும்
இந்தப் பேருரைகள் ஸ்ருதிவிடி யூடியூப் பக்கத்திலும் தேசாந்திரி யூடியூப் பக்கத்திலும் நிரந்தரமாக இருக்கும். ஆகவே எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.