கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற சிந்தனை முற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை ,திண்டுக்கல், சேலத்திலிருந்தும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.








சக்தி நர்சிங் கல்லூரி மற்றும் சிறகுகள் எப்எம் தலைவர் சிதம்பரம் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக உபசரித்தார்.
நூலகர் சிவகுமார் கரூர் மாவட்ட மைய நூலகத்தினை முன்மாதிரி நூலகமாக உருவாக்கியுள்ளார். குளிர்சாதனவசதி கொண்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
நூலகப்பணிக்கு நிறையக் கொடையாளிகள் முன்வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் நான் கலந்து கொள்ள முக்கிய காரணியாக இருந்து உதவிய நண்பர் மணிகண்டனுக்கு நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து அது குறித்த செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள். ஊடக நண்பர்கள். நூலக வாசகவட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
நிகழ்வில் தீபம் கலர்லேப் சங்கர், ஆசிரியர் முரளி, மற்றும் பரணி கல்வி குழுமம் ராமசுப்ரமணியன் ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கரூரின் தொன்மை மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினேன். நிகழ்வின் இறுதியில் வாசகர்களுடன் உரையாடல் நடைபெற்றது. நல்ல கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக டாக்டர் ரமேஷ் எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது.