அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள்.
மாணவர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்குவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்வது பெருமையளிக்கிறது.
நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் வறுமையான குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களில் சிலர் காலை உணவு கிடைக்காமல் அல்லது போதுமான உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவார்கள். பாடம் நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் மயங்கி விழுவதைக் கண்டிருக்கிறேன். மதிய உணவுத்திட்டம் பல்லாயிரம் மாணவர்களின் பசியைப் போக்கி கல்வியில் சாதனை செய்ய வைத்தது என்பதே வரலாறு.
இன்று அந்த நற்செயலின் அடுத்த கட்டமாக காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஒரு சரித்திர சாதனையாகவே கருதுகிறேன்.
ஏழை எளிய மாணவர்களின் பசியைப் போக்கும் இந்த அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக முதல்வரை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.