தபால்துறை- சிறப்பு விழா

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் பற்றி நான் எழுதிய தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதற்பதிப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவிலே விற்றுத் தீர்ந்துவிட்டது. நிறைய விமர்சனப்பதிவுகளும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இந்நூல் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நூலைக் கௌரவிக்கும் விதமாக தபால்துறை சிறப்பு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 6 வியாழன் காலை பத்துமணிக்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் 100 தபால்காரர்களுக்கு இந்த நூல் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்விற்கு முக்கியக் காரணமாக உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி

0Shares
0