எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கான அறிமுகவிழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது

தூய மரியன்னை கல்லூரியின் தமிழ்துறையும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வாசிப்பு மன்ற பொறுப்பாளர் ரவி இதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.




சலூன் நூலகம் மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், ஆ. மாரிமுத்து, ப.சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



இந்த நிகழ்வில் ஆரோக்கியபுரம் தபால்காரர் காளிமுத்து கௌரவிக்கபட்டிருக்கிறார்.

நிகழ்வில் இருபது மாணவர்கள் தபால் பெட்டி எழுதிய கடிதம் குறித்த தங்களின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நூலை வாசித்து முடித்த 100 மாணவர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகம் படித்துப் பாராட்டுக் கடிதம் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிகழ்வு சிறக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.