புதுமைப்பித்தன் வாழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய நாடகத்தைக் கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கிறார். கூத்துப்பட்டறையின் முக்கிய நடிகர்கள் இதில் பங்கேற்கிறார்கள். டாக்டர் ரவீந்திரன் ஒளியமைப்பு செய்கிறார்.


நவீன நாடக உலகில் தனிச்சிறப்பு மிக்க நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படும் கே.எஸ்.கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை முன்னதாக இயக்கியிருக்கிறார்.
எழுத்தாளர் ந.முத்துசாமி அவர்களால் நவீன நாடகப் பயிற்சி பள்ளியான கூத்துப்பட்டறை 1977ல் துவங்கப்பட்டது. மிகச்சிறந்த நவீன நாடகங்களைக் கூத்துப்பட்டறை நிகழ்த்தியிருக்கிறது.
கூத்துப்பட்டறை சார்பில் நடைபெறும் இந்நாடகம் மார்ச் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் தினமும் மாலை 6 45க்கு கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெறுகிறது.
அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
நடைபெறும் இடம் :
கூத்துப்பட்டறை
16/58, 3rd Main Road, Sri Ayyappa Nagar, Virugambakkam, Chennai 92