புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் இரவு 7 மணிக்கு தான் அரங்கில் பார்வையாளர்கள் அனுமதிக்கபட்டார்கள். முதல்வர் வருகையை முன்னிட்டு காவல்துறையின் அதிக கெடுபிடி. பாதுகாப்பு சோதனைகள். ஏதோ சர்வதேச விமான நிலையத்திற்குள் போவது போலிருந்தது.
நண்பர் பா.ராகவனின் யதி நாவலை தினமணி பினாகிள் பதிப்பக அரங்கில் வெளியிட்டேன். நண்பர்கள் அகரமுதல்வன். லட்சுமி சரவணக்குமார் ஹரன் பிரசன்னா போன்றவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். தேசாந்திரி அரங்கில் இருந்து ஸ்ருதி டிவி சிறிய நேரலை ஒன்றை செய்தது. நன்றி கபிலன்.
தேசாந்திரி அரங்கு எண் 220, 221 இரண்டாவது வரிசையின் துவக்கத்தில் உள்ளது.
எல்லா நாளும் மாலை 4 மணி முதல் அரங்கில் இருப்பேன்.