Month: April 2013

தெலுங்கில்

எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே தெலுங்கில் வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர், மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற திருப்பதி பாலாஜி,  விசால ஆந்திரா 7ம் தேதியிட்ட வார இணைப்பில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.

செம்மீன்

நேற்று திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த போது கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மதுவைச் சந்தித்தேன், தனியே அமர்ந்து வார இதழ் ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது புன்சிரிப்புடன் தமிழ் மக்கள் எனது படங்களை நேசிக்கிறார்களா எனக்கேட்டார்,  செம்மீனைப் பிடிக்கும் என்று சொன்னேன், செம்மீன் ஒரு நல்ல படம் என்று சொல்லிவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டார், பிறகு வேடிக்கையான குரலில் சொன்னார், அது கருத்தம்மாவின் படம், ஷீலாவைத் தமிழ் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, …

செம்மீன் Read More »

கால்முளைத்த ஆசை

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பில் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சொர்ணவேல் இயக்கிய கால்முளைத்த ஆசை என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் வெளியானது,  திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு வார காலம் இந்த ஒரு கதை ஒளிபரப்பபட்டது, இதனை அப்படியே தனி ஒரு டெலிவிஷன் திரைப்படமாக வெளியிடுவது என்ற முனைப்புடன் இது உருவாக்கபட்டது. அதன் காணொளி பிரதிகள் எதுவும் என் வசமில்லை,  தற்போது எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி அவர்களால் இத்தொடர் மூன்று …

கால்முளைத்த ஆசை Read More »

பிரெஞ்சு படத்தில்

பிரபல பிரெஞ்சு இயக்குனரான Michel Spinosa வின் இயக்கத்தில் உருவான Son épouse ( “His wife”) என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நான் பணியாற்றி உள்ளேன், இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கபட்டுள்ளது, இந்தப் பகுதியின் திரைக்கதை உரையாடலை நான் எழுதியிருக்கிறேன், மிஷேல் ஸ்பினோசா நான்கு முக்கிய பிரெஞ்சுத் திரைப்படங்களை உருவாக்கியவர், அவரோடு இணைந்து பிரெஞ்சு திரைப்படத்தில் பணியாற்றியது சந்தோஷம் தரும் அனுபவமாக அமைந்திருந்தது, இரண்டு மாத காலம் பாண்டிச்சேரி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் …

பிரெஞ்சு படத்தில் Read More »