ஹெமிங்வேயின் காளைச்சண்டை
‘’காளைச்சண்டை என்பது ஒரு விளையாட்டல்ல, அது ஒரு மூன்று அங்கங்கள் உள்ள துன்பவியல் நாடகம். அதை ஒரு நடனத்தைப் பார்ப்பது போலத் தான் நாம் ரசிக்கவேண்டும். சாவை மிகுந்த நெருக்கத்தில் சந்தித்து அதன் முகத்தை ஆராய்வது தான் காளைச்சண்டை என்று கூடச் சொல்லலாம். உண்மையில் காளைச்சண்டையில் காளையை அடக்க வரும் வீரன் ஒரு கணித ஆசிரியர் கரும்பலகையின் முன்னால் நின்று கொண்டு தனது தியரத்தை விளக்கி சொல்வது போலச் சாவின் அறியப்படாத புதிரை கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறான். …