Month: August 2022

நேற்றின் நிழல்கள்

அபராஜிதோ என்ற தலைப்பைக் கேட்டதும் சத்யஜித்ரேயின் புகழ்பெற்ற திரைப்படமே நினைவிற்கு வரும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அபராஜிதோ (Aparajito 2022) சத்யஜித்ரேயைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கி, பதேர் பாஞ்சாலி உருவான அனுபவத்தை விவரிக்கிறது. இப்படத்தை அனிக் தத்தா இயக்கியுள்ளார். சத்யஜித்ரேயாக நடித்துள்ள ஜீது கமல் அப்படியே இளவயது ரேயின் தோற்றம் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும் துல்லியமாக ரேயைப் பிரதிபலிக்கிறது. அவரது தேர்ந்த நடிப்பு மற்றும் சுப்ரதிம் போலின் ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பாகும். சாந்திநிகேதனில் ஓவியம் பயின்று விளம்பர நிறுவனத்தில் …

நேற்றின் நிழல்கள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து யானைகள்

A translation is not a caterpillar crawling from left to right, a translation always emerges from the whole. Do you understand? One has to make the text entirely one’s own. The Germans say “internalised” Svetlana Geier ரஷ்ய இலக்கியங்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் ஸ்வெட்லானா கேயர். தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து பெரிய நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இதற்காக 20 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். அந்த மொழிபெயர்ப்புகளை “ஐந்து …

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து யானைகள் Read More »

கவிதையின் நிலவெளி

கவிஞர் Robert Bly தினமும் காலையில் ஒரு கவிதை எழுதும் பழக்கம் கொண்டிருக்கிறார். அவை தொகுக்கப்பட்டு Morning Poems என வெளியிடப்பட்டிருக்கின்றன இந்த நேர்காணலில் தனது கவிதைகள் மற்றும் கவிதையின் ஆதார விஷயங்கள் பற்றிச் சிறப்பாகப் பேசியிருக்கிறார்.

இருநூறு ஆண்டுகாலக் கதை

“யாமம்” வாசிப்பனுபவம் இர. மௌலிதரன். ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனை தான் நாம் கேட்க வேண்டும். ஏனெனில் அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும், அனுபவித்தும், தனக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருப்பான். இப்படி ஒரு கிராமமோ, ஒரு நகரமும் ஒருவன் நினைவில் இருந்தால் அது சாத்தியம். ஆனால் அதுவே ஒரு நாடு முழுவதும் ஒருவன் இப்படித் தனக்குள் வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறான் என்றால் அது அசாதாரணம். அப்படி …

இருநூறு ஆண்டுகாலக் கதை Read More »

ஹெமிங்வேயும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனின் துரோகம் என்றொரு சிறுகதையை ஆதவன் எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இருவர், எழுதி என்ன பயன், எதற்காக எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள். அதில் எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன் என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்குப் போஷாக்குத் தரமுடியாது என்கிறது ஒரு கதாபாத்திரம். யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கேள்வியை நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட எல்லாப் பதில்களும் தற்காலிக சமாதானமே. கதையின் மையப்பகுதி இது. ‘புகழும் பணமும் இருந்தும் …

ஹெமிங்வேயும் புதுமைப்பித்தனும் Read More »

டானென்பாம் சொல்கிறார்

கோவிட் லாக்டவுன் காலத்தில் பதிப்பகங்கள் மற்றும் புத்தகக் கடைகள் மிகவும் பாதிப்படைந்தன. மக்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய போதும் கடைகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்க முடியவில்லை. பல மாதங்களாக மூடப்பட்டதால் புத்தகக் கடைகள் பெரிய பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தன. சில கடைகளால் இன்று வரை அதிலிருந்து மீள முடியவில்லை. தேசாந்திரி பதிப்பகமும் லாக்டவுன் காலத்தில் இது போன்ற பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் தானோ என்னவோ “Hello, Bookstore“ என்ற ஏ.பி. ஜாக்ஸ் இயக்கியுள்ள ஆவணப்படத்தைக் …

டானென்பாம் சொல்கிறார் Read More »

உரையாட விரும்புகின்ற நாவல்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் குறித்த வாசிப்பனுபவம். க.வை. பழனிசாமி  தமிழ் இலக்கியத்தில் முக்கியமானப் புத்தகம் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. வாசிக்கத் தொடங்குகிறபொழுதே அதை உணர்ந்துவிடுகிறோம். வாசகனிடம் அதிகமாக உரையாட விரும்புகின்ற நாவல். உரையாடல்தான் இந்த நாவலின் பலம். உரையாடல் பன்முகத் தன்மையில் இருக்கிறது. பழக்கமான நாவல்களிலிருந்து வேறானது என்பதை இதன் கதையாடல் சொல்லிவிடுகிறது. இந்தப் புரிதல் தோன்றியதுமே நாவல் மீதான அக்கறை கூடிவிடுகிறது. டால்ஸ்டாயை மையமாகக்கொண்டு ரஷ்ய சூழலில் எழுதப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே இதிலிருக்கும் புதுமையா? ரஷ்ய …

உரையாட விரும்புகின்ற நாவல் Read More »

குளிர்மலையின் வெண்மேகம்

தாங் பேரரசைச் சேர்ந்த கவிஞர் ஹான்ஷான் குளிர்மலை(COLD MOUNTAIN) என்ற பெயரிலே அறியப்படுகிறார். உலகின் பரபரப்பிலிருந்து ஒதுங்கி குளிர்மலை எனும் மலையுச்சியினைத் தேடிச் சென்று தனிமையில் வாழ்ந்திருக்கிறார் ஹான்ஷான். அவர் வசித்த குகை இன்றைக்குமிருக்கிறது. ஹான்சானின் கவிதைகள் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுவதுடன் இயற்கை தரும் நிகரில்லாத மகிழ்ச்சியினையும் பாடுகின்றன. இக் கவிதைகள் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றாலும், மாறாத ஞானத்தையும் உண்மையையும் கொண்டு வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன மொழிபெயர்ப்பாளர் ரெட் …

குளிர்மலையின் வெண்மேகம் Read More »