Month: April 2023

ஆரஞ்சு தோட்டக் குரங்குகள்

செசானின் நிலக்காட்சி ஓவியங்களைத் தியானம் என்று அழைத்தால் ரூசோவின் வனவாழ்வைச் சித்தரிக்கும் ஓவியங்களை மௌனவிழிப்புணர்வு என்று அழைக்கலாம். கையில் ஆரஞ்சு பழங்களுடன் உள்ள குரங்குகளை ஹென்றி ரூசோ மிக அழகாக வரைந்திருக்கிறார். ஆரஞ்சு தோட்டத்திலுள்ள அந்தக் குரங்குகளின் ஒளிரும் கண்களும் விநோத முகபாவமும் கனவுலகின் காட்சி போல உணரச் செய்கின்றன. சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர் ரூசோ. ஒவியப்பள்ளிகளில் பயிலாத ஓவியர்களைப் பிரெஞ்சு அகாதமி ஒதுக்கி வைத்திருந்த காலமது. ஆகவே ரூசோவின் ஓவியங்களை அகாதமி அங்கீகரிக்கவில்லை. …

ஆரஞ்சு தோட்டக் குரங்குகள் Read More »

ரூமியும் லம்யாவும்

பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட அனிமேஷன் திரைப்படம் Lamya’s Poem. சிரியாவில் வாழும் பனிரெண்டு வயதான லம்யாவின் பகல் கனவில் துவங்குகிறது படம். மின்மினிப்பூச்சிகள் பறக்கும் உலகைக் கனவு காணுகிறாள். அதில் மின்மினிப்பூச்சிகள் பறந்து வந்து அவளது கையில் அமர்கின்றன. அதன் வசீகர ஒளியும் பறத்தலும் அவளைச் சந்தோஷப்படுத்துகின்றன. விநோதமான கற்பனையிலிருந்து அவள் விழிப்படையும் போது சாதாரணப் பள்ளி மாணவியாக வெள்ளை உடையில் தோன்றுகிறாள். வீட்டில் …

ரூமியும் லம்யாவும் Read More »

முகமது அலியின் கையெழுத்து

புதிய சிறுகதை. (உயிர்மை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது) அவனுக்கு முப்பது வயதிருக்கும். தூக்கமில்லாத கண்கள். கலைந்த தலையும் வெளிறிய உதடுகளும் கொண்டிருந்தான். அரைக்கை சட்டை. அதுவும் சாம்பல் நிறத்தில். அதற்குப் பொருத்தமில்லாது ஊதா நிற பேண்ட் அணிந்திருந்தான். காலில் ரப்பர் செருப்பு அதன் ஒரங்கள் தேய்ந்து போயிருந்தன. கையில் ஒரு துணிப்பை. அதற்குள் அரிய பொருள் எதையோ வைத்திருப்பவன் போல மடியில் கவனமாக வைத்திருந்தான் தாலுகா அலுவலகத்தில் இப்படியானவர்களை அன்றாடம் காண முடியும் என்பதாலோ என்னவோ …

முகமது அலியின் கையெழுத்து Read More »

உலகப் புத்தக தினம்.

உலகப் புத்தக தினவிழாவினை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொதுநூலகம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் பதினெட்டு நூலகங்களில் கூட்டங்கள் நடத்துகிறார்கள். இதில் நூறு பேர் உரையாற்றுகிறார்கள். புத்தக தினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது பாராட்டிற்குரியது. நூலகங்களைப் பண்பாட்டு மையங்களாக மாற்றும் இந்தச் செயல்பாடு முன்னோடியானது. சென்னை தேவநேய பாவாணர் மாவட்ட மையநூலகத்தில் முழு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது இதில் நான் கலந்து கொண்டு உலகின் முதற்புத்தகம் என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றுகிறேன். நேரம் …

உலகப் புத்தக தினம். Read More »

வெயில் அறிந்தவன்

புதிய குறுங்கதை. கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டு அவன் ஊர் திரும்பினான். நூறுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட கரிசல் கிராமமது. அவனைச் சுற்றும் ஈக்கள் கூட இனி என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வியைக் கேட்டன. வேப்பஞ்செடி போல நான் இந்த மண்ணில் வேரூன்றி வளர விரும்புகிறேன் எனக்கு வேறு இடமில்லை என்றான். தாயும் அக்காவும் அவனை நினைத்துக் கலங்கினார்கள். விவசாயியான தந்தை தனது கோபத்தை விறகு பிளப்பதில் காட்டினார். அவன் தன்னை நேசிப்பவர்களை வெறுத்தான். உலர்ந்த நத்தைக்கூடினை …

வெயில் அறிந்தவன் Read More »

சைபீரியப் பனியில் சில காலடிகள்

அகிரா குரோசாவாவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கி அவரது திரைப்படங்களின் தயாரிப்பு உதவியாளர் வரையான பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் டெருயோ நோகாமி அகிரா குரசோவாவின் 19 படங்களில் பணியாற்றியிருக்கிறார். குரோசாவாவின் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இவர் தனது திரையுலக அனுபவங்களை Waiting on the Weather: Making Movies with Akira Kurosawa என்ற நூலாக எழுதியிருக்கிறார். அவர் திரைப்பட உலகிற்கு அறிமுகமான விதம் மற்றும் குரசோவாவின் படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, …

சைபீரியப் பனியில் சில காலடிகள் Read More »

டாக்டர் ஷிவாகோ

போரிஸ் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவரது புகழ்பெற்ற நாவலான டாக்டர் ஷிவாகோ டேவிட் லீனால் படமாக்கபட்டு ஐந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது. போரிஸ் பாஸ்டர்நாக்கின் வாழ்க்கை மற்றும் ஷிவாகோ நாவலுக்குப் பின்னுள்ள உண்மைகளை விளக்கும் விதமாகப் பிபிசி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. The Real Doctor Zhivago என்ற இந்த ஆவணப்படம் அவரது கால அரசியல் மற்றும் இலக்கியச் சூழலை தெளிவாக விளக்குகிறது

சாந்தி சிவராமன்

சாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது சஞ்சாரம் நாவலை வாசித்த சாந்தி சிவராமன் தனக்கு மிகவும் பிடித்துப்போகவே அதை முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டார்.  எனது தொடர்பு கிடைக்காத காரணத்தால் தகவலைத் தெரிவிக்க இயலவில்லை. இவரது மகன் சத்யா சிவராமன் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். சாந்தி சிவராமன் முன்னதாக அசோகமித்ரனின் இன்று, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார். 2016 …

சாந்தி சிவராமன் Read More »