கவிஞனும் கவிதையும் 2 இரண்டு புகார்கள்
ஐம்பது ஆண்டுகளில் எழுதப்பட்ட ஸ்பானியக் கவிதைகள் தொகுப்பில் ஏஞ்சல் கோன்சலஸின் (Ángel González) கவிதை ஒன்றை வாசித்தேன். கரப்பான்பூச்சி பற்றிய வியப்பூட்டும் கவிதையது. என் வீட்டிலுள்ள கரப்பான் பூச்சிகள் புகார் செய்கின்றன நான் இரவில் படிப்பதால் ஏற்படும் வெளிச்சம் மறைவிடங்களை விட்டு அவர்களை வெளியேற தூண்டுவதில்லை. அறையைச் சுற்றிவரும் வாய்ப்பை இழக்கிறார்கள் என அக்கவிதை நீள்கிறது. அதில் கரப்பான்பூச்சி இந்தத் தொந்தரவு குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் உண்மையில் இந்தக் கரப்பான்பூச்சிகள் எந்தத் தேசத்தில் வாழ்கின்றன. …