கவிஞனும் கவிதையும் 3 கவிதையின் ரசாயனக்கூடம்
மிரோஸ்லாவ் ஹோலுப் செக்கோஸ்லோவாகியாவின் புகழ்பெற்ற கவிஞர். தி.ஜானகிராமன் பாரீஸ் சென்ற போது ஹோலுப்பை சந்தித்து உரையாடியிருக்கிறார். விஞ்ஞானத்தையும் கவிதையினையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதைப் பற்றி ஹோலுப் பேசியதை ஜானகிராமன் நினைவுகொண்டு எழுதியிருக்கிறார். ஹோலுப் தலைசிறந்த விஞ்ஞானி. நோய்குறியியல் துறையில் பணியாற்றியவர். அவரது கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. கவிதையும் ஒரு சோதனைக்கூடம் தான் அங்கே சொற்கள் மூலகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளே என்னை வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன என்கிறார் ஹோலுப் ஹோலுப் சொல்வது உண்மையே. …