Month: August 2023

தோற்றம் சொல்லாத உண்மை

The Return of Martin Guerre 1982 ல் வெளியான பிரெஞ்சு திரைப்படம். இது டேனியல் விக்னே இயக்கியது, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்குப் பிரான்சில் கதை நடக்கிறது. சின்னஞ்சிறிய பிரெஞ்சு கிராமமும் அதன் எளிய மக்களும் கண்முன்னே விரிகிறார்கள். ஃப்ளெமிஷ் ஓவியர் பீட்டர் ப்ரூகலின் ஒவியங்களைப் போன்று ஒளிரும் காட்சிகள். அபாரமான ஒளிப்பதிவு. அந்தக் கால வீடுகள். மக்களின் உடை, அவர்களின் தோற்றம், வீடுகளில் உள்ள இருளும் ஒளியும் என நாம் காலத்தின் பின்னே …

தோற்றம் சொல்லாத உண்மை Read More »

சிறிய கண்டுபிடிப்பாளன்

புதிய சிறுகதை அசோக் ராஜன் இன்றைக்கும் பத்திரிக்கையாளர்களை வரவழைத்திருந்தார். மாதம் ஒருமுறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லி பத்திரிக்கையாளர்களின் கேலிக்கு ஆளாவது அவரது வழக்கம். ஆனால் அதனால் அவர் மனச்சோர்வடைவதில்லை. உற்சாகமாகப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்துவிடுவதுண்டு. அன்றைய சந்திப்பிற்கு ஆறு பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அசோக் ராஜன் தானே தயாரித்த தேநீரை அவர்களுக்கு வழங்கினார். தேநீரை அருந்தியபடியே ஒரு பத்திரிக்கையாளர் “ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையைத் தொடர்ந்து செய்கிறீர்கள்“ என்று கேட்டார் அதற்கு ராஜன் புன்சிரிப்போடு“ …

சிறிய கண்டுபிடிப்பாளன் Read More »

விழித்திருப்பவனின் இரவு

ஹாரிஸ் வாசிப்பின்/மீள் வாசிப்பின் போது எந்த ஒரு புத்தகம் எத்தனை வருடங்கள் சென்ற பின்னும் புதிய அனுபவத்தை அல்லது அன்றைய நிகழ்வுகளை படிப்பது போல் உணர வைக்கிறத்தோ அதுவே சிறந்த புத்தகம் என்பது எனது அபிப்பிராயம்.  எஸ் ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு கட்டுரை தொகுப்புகளும்  அவ்வகையானவையே…. விழித்திருப்பவனின் இரவு தொகுப்பை (மீள்)வாசித்து கொண்டிருக்கின்றேன்.  Dracula பற்றிய கட்டுரை – இப்போது கூட Dracula untold என்று ஒரு படம் வந்துள்ளது… எத்தனை வருடங்கள் கடந்தாலும் சிறந்த புத்தகங்கள் obsolete …

விழித்திருப்பவனின் இரவு Read More »

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம்

கணேஷ்பாபு. சிங்கப்பூர் குறுங்கதைகள், அதிகதைகள், மாய யதார்த்தக் கதைகளை அல்லது பொதுவாகப் பின்நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதற்கு வாசகன் மனதளவில் சில தீர்மானங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில், முன்முடிவற்று இப்பிரதிகளை வாசிக்கப் பழக வேண்டும். ஆங்கிலத்தில் “Wilful suspension of disbelief” என்பார்கள். வாசகன் இவ்வகை அதிகதைகளை வாசிக்கையில் தனது நம்பிக்கையின்மையை அல்லது அவநம்பிக்கையை அல்லது தர்க்க அறிவை பிரக்ஞைபூர்வமாக ரத்து செய்துவிட்டு பிரதிக்குள் நுழைய வேண்டும். ஒரு விலங்கு எப்படிப் பேசும், குரங்கு எப்படிக் கடலைத் தாவும் …

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம் Read More »

உப பாண்டவம் புதிய பதிப்பு

மலையாளத்தில் கே.எஸ் வெங்கிடாசலம் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள உப பாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

ருகெண்டாஸின் ஓவியங்கள்

An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன் ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை …

ருகெண்டாஸின் ஓவியங்கள் Read More »