Day: November 17, 2023

தூத்துக்குடியில்

நவம்பர் 19 ஞாயிறு மாலை தூத்துக்குடியில் நடைபெறும் தேசிய நூலக வாரவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இதனை நூலக மனிதர்கள் இயக்கமும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

விசித்திரக் கனவு

சத்யஜித் ரேயின் நாயக் படத்தில் மறக்க முடியாத காட்சி ஒன்றுள்ளது. சினிமா நடிகரான அரிந்தமின் கனவது. கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயில் பயணத்தின் போது அந்தக் கனவு வருகிறது. கலையா அல்லது பணம் சம்பாதிப்பதா என்று இரண்டு பாதைகள் நாடக நடிகரான அரிந்தமின் முன்னால் இருந்தன. அவன் பணம் சம்பாதிப்பதைத் தேர்வு செய்கிறான். புகழும் பணமும் கிடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். தனது குருவின் ஆணையை மீறி சினிமாவிற்குச் செல்கிறான். அவன் ஆசைப்பட்டது போலவே பெரும்புகழும் பணமும் …

விசித்திரக் கனவு Read More »