Day: April 10, 2025

பாரதிய பாஷா விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எனக்கு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்திய அளவில் சிறந்த இலக்கிய வாதிகளைத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. 2025ம் ஆண்டிற்கான விருதிற்கு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றேன்.  இது எனது வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ 1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. விருது வழங்கும் விழா 01.05.2025 …

பாரதிய பாஷா விருது Read More »

பிறந்த நாள் கொண்டாட்டம்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 13 ஞாயிறு காலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நண்பர்கள் ஒன்று கூடும் விழா நடைபெறுகிறது. இதில் எனது மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன பிரையில் வடிவில் தபால்பெட்டி எழுதிய கடிதம் நூல் வெளியாகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு ரஷ்ய காதல் கதைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறேன். வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறுகிறது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்