இருளும் யானையும்
மனுஷ்யபுத்திரனின் இருளில் நகரும் யானை கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன் எட்வர்டு மஞ்ச் வரைந்த “The Scream” என்ற ஒவியம் நினைவில் வந்து போகிறது. ஒலமிடும் அந்த மனிதனின் முகம் மறக்கமுடியாதது. அது சுயவருத்தத்தில் உருவான ஒலமில்லை. தன் கண்முன்னே உலகம் அழிவுறுவதன் அலறல். தன் இயலாமையை, தவிப்பை, இழப்பை அடையாளப்படுத்தும் குரல். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளும் இதையே செய்கின்றன எளிய நம்பிக்கைகளே மனிதர்களின் பிடிமானம். அவை பொய்யென உணர்ந்த போதும் கூட அவற்றைப் பற்றிக் கொண்டே மனிதர்கள் வாழ்ந்து …