admin

இடக்கை பேசும் நீதி.

கவிஞர் க.வை. பழனிச்சாமி ‘இடக்கை’ நாவலின் மையம் எது? நாவலின் திறவுகோல் எங்கே இருக்கிறது? தூமகேது தான் நாவலின் திறவுகோல். இரண்டாவது அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது…..”முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் இறந்துபோன இரண்டாம் நாள், சத்கரில் ஆட்டுத்தோல் பதப்படுத்துபவனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையும் இடக்கைப் பழக்கம் கொண்டவனும் வறியவனுமான தூமகேது திருட்டுக் குற்றம் சுமத்திக் கைது செய்யப்பட்டான்.அதே இரவில் ஒளரங்கசீப்பின் அந்தப்புர பணியாளரும் அரவாணியும் மஹல்தாருமான அஜ்யா பேகம் அஹமது நகர் அரண்மனையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள்.” …

இடக்கை பேசும் நீதி. Read More »

ஈரோடு புத்தகத் திருவிழாவில்

நேற்று மாலை ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்திருந்தது. பெரியசாமி தூரன் மற்றும் ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாவல்கள் குறித்தும், காந்தியரான ரொனால்டு டங்கன் பற்றிய அறிமுகத்தையும் உரையில் வழங்கினேன். மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் குணசேகரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்வில் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் சிறந்த பதிப்பாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மழைக்குள் நடக்கும் திருமணம்.

அகிரா குரோசாவாவின் கடைசித் திரைப்படமான ட்ரீம்ஸில் நரியின் திருமண ஊர்வலக் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனை ஒரு சிறுவன் ரகசியமாக ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறான். வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் பொழுதினை நரிக்குக் கல்யாணம் நடப்பதாகச் சொல்லும் நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. எனது சிறுவயதில் நரிக்கும் காகத்திற்கும் கல்யாணம் நடக்கும் நாளில் இப்படி வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் எனக் கேள்விபட்டிருக்கிறேன். அந்தக் கல்யாணத்தினை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மழை பெய்கிறது என்பார்கள். இதே நம்பிக்கை ஜப்பானிலும் இருக்கிறது. அதையே …

மழைக்குள் நடக்கும் திருமணம். Read More »

பால் செசானின் மனைவி

ஓவியர் பால் செசான் தனது மனைவி மேரி-ஹோர்டென்ஸ் ஃபிகெவை மாடலாகக் கொண்டு 29 ஓவியங்கள் வரைந்திருக்கிறார். எந்த ஓவியத்திலும் அவரது மனைவி புன்னகைக்கவில்லை. தீவிரமான முகபாவத்துடன் காணப்படுகிறார். பல்வேறு ஒவியர்களுக்கு மாடலாக விளங்கிய மேரி ஹோர்டென்ஸ் பாரீஸில் உள்ள ஒரு கலைப்பள்ளியில் செசானை முதன்முறையாகச் சந்தித்தார். அபபோது அவரது வயது 19. செசான் அவரை விட 11 வயது மூத்தவர். மேரியைக் காதலிக்கத் துவங்கிய செசான் அவருடன் இணைந்து வாழத் துவங்கினார் 1871 இல் பிராங்கோ-புருஷியன் போர் …

பால் செசானின் மனைவி Read More »

2026 – கோவை புத்தகத் திருவிழாவில்

இந்த முறை புத்தகத் திருவிழாவிற்காக ஐந்து நாட்கள் கோவையில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் புதிய வாசகர்களுடன் சந்திப்பு. உரையாடல், என மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது. குறிப்பாக இருபது வயதிற்குள் இருக்கும் இளம்வாசகர்கள் நிறைய வந்திருந்தார்கள். அவர்கள் ஆசையாகப் புத்தகங்களை வாங்கிப் போனது சந்தோஷம் அளித்தது. தேசாந்திரி பதிப்பகத்திற்கு வாசகர்கள் அளித்த ஆதரவிற்கு மிகுந்த நன்றி. எனது புத்தகங்களை வாங்கி விற்பனை செய்யும் புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கல்லூரி மாணவர்கள். ஆய்வாளர்கள். பேராசிரியர்கள். மென்பொருள்துறையில் பணியாற்றுகிறவர்கள். மருத்துவர்கள். …

2026 – கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

கோவை புத்தக திருவிழாவில்

இன்று 25:07:26மாலை கோவை புத்தக திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு: ஒளிரும் வார்த்தைகள் . மாலை ஆறு மணிக்கு புத்தக திருவிழா அரங்கில் உரை நடைபெறுகிறது.

திரைக்கதையின் திறவுகோல்

அகிரா குரோசேவாவின் சுயசரிதை அவரது திரைப்பட வாழ்வின் துவக்கத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. ஆனால் “லாங் டேக்’“ குரோசாவாவின் எழுத்துக்கள், எழுத்தாளர் இனோயே ஹிசாஷி மற்றும் இயக்குநர் யமடா யோஜி ஆகியோருடனான அவரது உரையாடல்கள், மற்றும் அவரது மகள் குரோசாவா கசுகோவின் கட்டுரைகள் கொண்டதாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் செவன் சாமுராய் திரைக்கதை உருவாக்கத்தினைப் பற்றி விவரிக்கும் போது டால்ஸ்டாயைக் குறிப்பிடுகிறார் “செவன் சாமுராய் திரைக்கதையின் மையப்பகுதியாக டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும் (War and Peace ) நாவல் …

திரைக்கதையின் திறவுகோல் Read More »