சாய்ந்தாடும் குதிரை மதிப்புரை
இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எனது சாய்ந்தாடும் குதிரை சிறுகதைத் தொகுப்பிற்கான மதிப்புரை வெளியாகியுள்ளது. தேவதாசன் இதனை எழுதியுள்ளார். நன்றி : தேவதாசன் தி இந்து தமிழ் திசை
இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எனது சாய்ந்தாடும் குதிரை சிறுகதைத் தொகுப்பிற்கான மதிப்புரை வெளியாகியுள்ளது. தேவதாசன் இதனை எழுதியுள்ளார். நன்றி : தேவதாசன் தி இந்து தமிழ் திசை
மாக்ஸ் ஓஃபுல்ஸ் (Max Ophuls) இயக்கிய ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேடம் டி… திரைப்படம் 1953 ல் வெளியானது. இதன் கதை வியன்னாவில் நடக்கிறது. 1951-ல் வெளியிடப்பட்ட லூயிஸ் டி வில்மோரின் குறுநாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது ஜெனரல் ஆண்ட்ரேயின் மனைவியான லூயிசா தனது சூதாட்டக் கடன்களை அடைப்பதற்காகக் கணவனிற்குத் தெரியாமல் விலை மதிப்புமிக்க வைரக் காதணிகளை ரகசியமாக விற்பனை செய்கிறாள். இந்தக் காதணிகளின் பயணமே படத்தின் மையக்கதை ஆண்ட்ரே தனது மனைவிக்குத் திருமணப் பரிசாக …
லியோ டால்ஸ்டாயின் வண்ணப்புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் செர்ஜி ப்ரோகுடின்-கோர்ஸ்கி (Prokudin-Gorsky). தனது வாழ்வில் டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட ஒரே வண்ணப்புகைப்படம் இதுவே. ப்ரோகுடின்-கோர்ஸ்கி ஜெர்மனிக்குச் சென்று வண்ணப்புகைப்படக்கலையைக் கற்று வந்தவர். ரஷ்யாவின் வண்ணப்புகைப்படக்கலை முன்னோடியாகக் கொண்டாடப்படுகிறார். டால்ஸ்டாயின் மனைவியான சோபியா புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் கோடாக் பெல்லோஸ் பிளேட் கேமிரா ஒன்றை விலைக்கு வாங்கித் தனது குடும்பத்தினர் மற்றும் பண்ணை வாழ்க்கையைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவரது நாட்குறிப்பும் புகைப்படங்களும் இணைந்ததாக Song Without Words …
ஆல்பெர் காம்யுவின் அந்நியன் நாவல் (L’Étranger ) இதுவரை 75க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் திரைப்பட வடிவத்தை விஸ்காண்டி இயக்கியிருக்கிறார். 1967ல் வெளியான The Stranger திரைப்படத்தில் மார்சலோ மாஸ்ட்ரோயானி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். நாவலின் அடர்த்தியில்லாத மேலோட்டமாக உருவாக்கபட்ட படம். பெரிய வெற்றியைப் பெறவில்லை. சென்ற ஆண்டு இதே நாவலின் புதிய திரைவடிவம் வெளியாகியுள்ளது. THE STRANGER என்ற இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்சுவா ஓசோன். …
புதிய சிறுகதை மே 18 2026 “என்னோட நீம் டூத்பேஸ்டை எடுத்து வச்சிக்கிட்டேன். உன் பேஸ்டை வச்சிட்டயா“ என மனைவியிடம் கேட்டார் தீர்த்தகிரி. “நான் ஹெர்பல் பொடில பல் தேய்க்கிறேன். அதை மாற்ற முடியாது. ஒரு டப்பா எடுத்து வச்சிருக்கேன். போதும்லே“ எனக்கேட்டாள் பவானி. அவர்கள் மும்பையில் உள்ள மகனின் வீட்டிற்குச் செல்வதற்கான பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷ் பிளைட் டிக்கெட் அனுப்பி வைத்தவுடன் பயணம் போக வேண்டியது தான். அறுபத்தியெட்டு வயதான தீர்த்தகிரி முந்திய நாளே …
எனது நடைத்துணை சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு உதயினி இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர், இக்கதை நிறையப் பாராட்டுகளைப் பெற்று வருவதாக பாஸ்கர் தெரிவித்தார். அவரது மொழியாக்கத்தில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. கதையின் இணைப்பு.
புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமலே வைத்திருப்பதைக் குறிக்கும் ஜப்பானியச் சொல் சுண்டோகு (Tsundoku ). வாசிக்கப்படாத புத்தகங்கள். பாதி வாசிக்கபட்டுக் கைவிடப்பட்ட புத்தகங்கள். ஒன்றிரண்டு பக்கங்கள் மட்டுமே புரட்டப்பட்ட புத்தகங்கள். திரும்பத் திரும்ப வாசிக்கபடும் புத்தகங்கள். தேவையில்லாமல் வாங்கிய புத்தகங்கள், மின்புத்தகங்கள், பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள். நகலெடுக்கபட்ட புத்தகங்கள் என நிறைய வகைகள் இருக்கின்றன. எனது நூலகத்தில் ஒரு புத்தகம் எங்கேயிருக்கிறது எனத் தேட முடியாமல் அதன் இன்னொரு பிரதியை கடையிலிருந்து வாங்கி விடுவேன். தேடிய புத்தகம் அதன் …
2009ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஹெர்டா முல்லர் தனது நோபல் சொற்பொழிவில் தனது அன்னை கேட்கும் ஒரு கேள்வியைக் குறிப்பிடுகிறார். ஹெர்டா முல்லர் வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஒவ்வொரு காலையிலும் வீட்டுவாசலில் நின்று கொண்டு அவரது அம்மா “உன்னிடம் கைக்குட்டை இருக்கிறதா? “ என்ற கேள்வியை எழுப்புவார். ஹெர்டாவிடம் கைக்குட்டை இருக்காது. உடனே வீட்டிற்குள் திரும்பிச் சென்று தனது கைக்குட்டையை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார். அம்மாவின் இந்த நினைவுறுத்தல் அவரது அன்பின் மறைமுக வெளிப்பாடாகும். …
புதிய சிறுகதை. மே 10 2026 ராஜாராமன் அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டார். சில நாட்களாகவே பழைய சினிமா பாடல் ஒன்றின் வரிகள் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. குளிக்கும் போதும், நடைப்பயிற்சியின் போதும், சலூனில் காத்திருக்கும் போதும், பால்கனியிலிருந்தபடி காகங்களை வேடிக்கை பார்க்கும் போதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டார். அப்படி முணுமுணுக்கும் போது அது யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் மீன்குஞ்சினைப் போல எதற்காக அந்தப் பாடல் …
ஒரு மழை நாளில் தேவாலயத்தின் வெளியே உள்ள அறிவிப்பு பலகையிலிருந்து துவங்குகிறது ஜான் ஹூஸ்டன் இயக்கிய ‘தி நைட் ஆஃப் தி இகுவானா’ திரைப்படம். பாதிரியார் ஷானான் பிரசங்கத்திற்காகத் தயாராகிறான் பதற்றமான, முகம் மற்றும் தயக்கமான குரல். சபையினை வழிநடத்துவதில் அவனுக்கு ஏதோ பிரச்சனையிருக்கிறது. குடிகாரன் என்று குற்றம்சாட்டப்பட்ட ஷானன் தனது பிரசங்க மேடையில் திடீரென மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது திருச்சபையினரைத் தேவாலயத்திலிருந்து கோபமாகத் துரத்தும் அதிர்ச்சியான காட்சியுடன் படம் தொடங்குகிறது, இந்நிகழ்வைத் தொடர்ந்து அவன் …