admin

பேச்சின் வாலைப் பிடித்தபடி..

எங்காவது போய் பேசிக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி பலவருடமாக என்னை இலக்கற்று ஏதேதோ இடங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், தோழர்கள், பேராசிரியர்கள், எளிய மனிதர்கள் என்று பலருடனும் பேசி விவாதித்து சண்டையிட்டு கழித்த பகலிரவுகள் என்னளவில் மிக முக்கியமானவை. இன்று அந்த இடங்களைக் கடந்து செல்கையில் இங்கே நின்று கொண்டு தானா அத்தனை மணி நேரம் பேசியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இடம் சூழல் பசி மறந்து பேசிய பொழுதுகளும் மனிதர்களும் சிதறிப்போய்விட்டார்கள். …

பேச்சின் வாலைப் பிடித்தபடி.. Read More »

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும்.

        நேற்றிரவு சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தைப் பார்த்தேன். சந்திரபாபுவின் நகைச்சுவை எனக்கு விருப்பமானது. அவரது பாடல்களையும் தொடர்ந்து கேட்கக் கூடியவன். சந்திரபாபுவின் குரல்  அலாதியானது. தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை சில வருசங்களுக்கு முன்பாக ஒரு முறை தொலைக்காட்சியொன்றில் பார்த்திருக்கிறேன். பாதியில் இருந்து பார்க்கத் துவங்கிய போது யார் இதை இயக்கியது என்று வியப்பாக இருந்தது. பிறகு அது சந்திரபாபு இயக்கிய படம் என்று தெரிய வந்ததில் இருந்து படத்தை …

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும். Read More »

இல்மொழி

 – குறுங்கதை சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு.  வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள். கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் …

இல்மொழி Read More »

கணிதமேதை வாழ்ந்த வீடு

            கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் நினைவில்லத்திற்கு சென்றிருந்தேன்.  கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெருவில்  உள்ள ராமானுஜம் வாழ்ந்த வீடு தன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. சொருகு ஒடுகள் வேய்ந்த தாழ்வான வீடு. சிறிய திண்ணையும் ரேழியும் தெரு பார்த்த ஜன்னல் கொண்ட படுக்கையறையும் காலத்தின் கறைபடிந்த கட்டிலுமாக உள்ளது குனிந்து செல்ல வேண்டிய அளவு மிக தாழ்வான கூரையமைப்பு. சிறிய சமையல் அறை, பூஜை …

கணிதமேதை வாழ்ந்த வீடு Read More »

சாலை திறந்து கிடக்கிறது.

      சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா? நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள். அப்படி சாலையில் மாட்டிக் கொண்டு உதவி வாகனத்தை பிடித்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் …

சாலை திறந்து கிடக்கிறது. Read More »

குற்றாலத்து சிங்கன் சிங்கி.

              குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே  குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளது. கானகக்குறத்தி வருகிறாள். அவளது எழிலும் குரலும் அதில் வெளிப்படும் காட்டுவாழ்வின் நுட்பங்களும், மழை பெய்யும் மேகமும், அடர்ந்த விருட்சங்களும், …

குற்றாலத்து சிங்கன் சிங்கி. Read More »

ஹென்றி கார்த்தியே பிரஸான்

          – நூற்றாண்டுவிழா. A photograph is not a painting, a poem, a symphony, a dance. It is not just a pretty picture, not an exercise in contortionist techniques and sheer print quality. It is or should be a significant document, a penetrating statement, which can be described in a very simple …

ஹென்றி கார்த்தியே பிரஸான் Read More »

படித்ததும் பிடித்ததும் 2

வலைப்பக்கங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான கட்டுரைகள் செய்திகள் வெளிவருகின்றன. அப்படி என் கவனத்தை கவர்ந்தது இக்கட்டுரை. இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய் பணம் தருவது. அதை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறது இந்தக் கட்டுரை.   சின்ன கவுண்டர் படத்தில் இப்படியொரு மொய்விருந்து காட்சியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை. ** மொய்விருந்து     நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?………….. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் …

படித்ததும் பிடித்ததும் 2 Read More »

நூறு உலகத் திரைப்படங்கள்

எனது வலைத்தளத்தை பார்வையிடும் பலரும் உலகசினிமாவில் எதைத் தேர்வு செய்து பார்ப்பது என்ற விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பிய போதும் இதே சந்தேகம் தொடர்வதால் தற்போது எனக்கு விருப்பமான நூறு படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறேன். இவை மட்டுமே உலகத்திரைப்படங்கள் அல்ல. இவை என் விருப்பத்தின் படி முக்கியமான நூறு திரைப்படங்கள். இதற்கு நான்கு வருசத்தின் முன்பாக உலகசினிமா புத்தக தயாரிப்பின் போது நூறு சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயார் …

நூறு உலகத் திரைப்படங்கள் Read More »

சிற்றுரையும் பேருரையும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல எல்லா பள்ளிகளிலும் நடைபெறும் விஷயம் என்பதால் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினேன். மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சி இதில் நீங்கள் பத்து நிமிசம் பேசினால் போதும் என்று தெரிந்த ஒரு ஆசிரியர்  வழியாக அன்புக் கட்டளையிட்டு கலந்து கொள்ளச் செய்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்ச்சி என்பதால் நாலரை மணிக்குச் சென்றேன். ஐநூறு பேருக்கும் …

சிற்றுரையும் பேருரையும். Read More »