admin

தற்செயல்

கடற்கரை மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். தற்செயலாக துருப்பிடித்த ஒரு பூட்டு கையில் தட்டுபட்டது. யாருடைய பூட்டு அது என்று தெரியவில்லை. மிகச் சிறியதாக மணலேறிப்போயிருந்தது. யார் இதை கொண்டுவந்தது. எதற்காக கொண்டு வந்திருப்பார்கள். எப்போதிலிருந்து இது கடற்கரையில் கிடக்கிறது. யோசிக்க யோசிக்க வேடிக்கையான எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த பூட்டால் இரண்டு மணல்துகள்களை ஒன்று சேர்த்து பூட்டமுடியுமா? இல்லை கடல் அலையை கரை வரவிடாமல் பூட்டமுடியுமா? கடலையும் கால்களையும் ஒன்று சேர்க்கும் பூட்டு இருக்கிறதா? இல்லை …

தற்செயல் Read More »

பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள். பல வருசங்கள் பிறந்த நாள் அன்று வீட்டில் இல்லாமல் சுற்றி அலைந்திருக்கிறேன்.  சாலையோர கடைகளில் தனியே உணவருந்திவிட்டு பகிர்ந்து கொள்ள யாருமின்றி  தனித்திருந்த நாட்கள் அவை. பள்ளி காலங்களில் பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் துவக்கத்திலிருந்தே நாட்களை எண்ணிக்கொண்டேயிருந்ததை நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அன்றைய குதுôகலம் புத்தாடை பரபரப்பு இன்றில்லை. ஆனால் விருப்பமான நண்பர்கள், மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட பண்டிகைகளை விட பிறந்த நாளே சரியானதாக படுகிறது. என் மீதும் …

பிறந்த நாள் Read More »

எல் வயலின்

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நமது செயல்பாட்டில் தானிருக்கிறது. சுயலாபங்களுக்காக சகமனிதர்களை ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் தயங்காத மனநிலை வளர்ந்து விஸ்வரூபம் கொண்டுள்ள சூழலில் எளிய மனிதர்களின் முக்கியத்துவத்தை மறுபடி மறுபடி எடுத்து சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக சரித்திரம் பற்றிய நமது பொதுகருத்தில் தலைவர்களும், சாதனையாளர்களும், மகாராஜாக்களும், சர்வாதிகாரிகளும் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான உயிர் துறந்த சாதாரண மனிதர்கள் எவரும் அடையாளப்படுத்தபடவேயில்லை. சமூகமாற்றங்கள் அடித்தட்டு மகக்ளின் நம்பிக்கையும் உறுதுணையும் இன்றி ஒரு போதும் சாத்தியமாவதேயில்லை . அந்த உண்மையை …

எல் வயலின் Read More »

ஜராதுஷ்ட்ரா.

கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் …

ஜராதுஷ்ட்ரா. Read More »

வெண்ணிற இரவுகள்.

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும்.  பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும்.  அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது. அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது.  நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் …

வெண்ணிற இரவுகள். Read More »

ஹரித்துவாரில் பெய்யும் மழை

என் இருபத்தி நான்காவது வயதில்  ஹரித்துவாரில் இறங்கி நடக்க துவங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மழைக்காலம் துவங்கியிருந்தது. எனது பயண வழியெங்கும் மழையின் தடங்கள். ஈரமேறிய கற்கள், மரங்கள், ரயில்நிலையங்கள், சிமெண்ட் பெஞ்சுகளை கடந்தே ஹரித்துவாருக்கு வந்திருந்தேன். மழைக்காலத்தில் பயணம் செய்வது  அலாதியானது. பழகிப்பிரிந்த நண்பருடன் மீண்டும் சேர்ந்து பயணம் செய்வது போன்றது. அடர்த்தியான மழை. ஷ்ராவன மாதத்து மழை எளிதில் அடங்காது என்பார்கள். அன்றாடம் கங்கையை பார்த்து களிக்கும் …

ஹரித்துவாரில் பெய்யும் மழை Read More »

யானை பார்த்தல்

மகாபலிபுரத்தில் ஒரு கல்யானையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். அதை பார்க்க பார்க்க மனது களிப்புறுகிறது. யானை பார்ப்பது என்பது பால்யத்தின்  விளையாட்டு.  வீதியில் யானை வரும்போது யானையை பார்க்க குழந்தைகளும் பெண்களும் ஆசையாக வீதிக்கு வருவார்கள். வாசற்படி தாண்டால் நின்று வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் உண்டு.  யானை கம்பீரமாக அசைந்து உலா போகும். என்ன பார்க்கிறார்கள் யானையிடம் என்ன பார்க்கிறார்கள். மஹாமௌனம் கண்முன்னே ஊர்ந்து போகிறது. யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை. …

யானை பார்த்தல் Read More »

குரசேவாவின் நூறுவயது.

அகிரா குரசேவாவிற்கு இன்று நூறாவது பிறந்த நாள்.  உலக சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான குரசேவா 1910ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தவர். தற்செயலாக சில நாட்களுக்கு முன்பு அகிரா குரசேவாவின் வாழ்க்கை வரலாற்று நூலான Something Like An Autobiography  யை ஒரு தகவலுக்காக புரட்டிக் கொண்டிருந்தேன்.  மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் தனது சகோதரன் பின்னணி இசை அமைப்பவராக வாழ்ந்ததையும் அவரது மரணத்தையும் பற்றிய குரசேவாவின் நினைவுகளை மறுபடி வாசித்தபோது அது தனியே திரைப்படமாக்க வேண்டிய …

குரசேவாவின் நூறுவயது. Read More »

கால்களால் சிந்திக்கிறேன்.

கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சிமுத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும்போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே  உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது. நடைப்பயிற்சியின் போது நானும் அப்படியாக உணர்ந்திருக்கிறேன். கால்களால் சிந்திப்பது என்பது உயர்வானது என்று தோன்றியது. …

கால்களால் சிந்திக்கிறேன். Read More »

கோமாளியும் கதை சொல்லியும்

பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும்சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும்பகடியும்நகைச்சுவையும்கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.  இத்தனையிலும் முக்கியமானது தன்னைத் தானே கேலி செய்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதே, கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் நம்மிடம் அதிகமில்லை. …

கோமாளியும் கதை சொல்லியும் Read More »