இரங்கல்
ஈழத் தமிழ் இலக்கிய த்தின் மிக முக்கிய ஆளுமையும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். அவரது மறைவிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••
ஈழத் தமிழ் இலக்கிய த்தின் மிக முக்கிய ஆளுமையும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். அவரது மறைவிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••
சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை அருகில் உள்ள திருக்கோகர்ணம் கோவிலின் சிற்பமண்டபத்தில் உள்ள ரதி சிற்பத்தைக் கண்டேன், ஆஹா, என்ன ஒரு பேரழகு, அவள் சிலையில்லை, நம் மனதின் ஆழத்தில் புதைந்துள்ள மாறாத பெண்மையின் எழில் உருவம், இவளை எங்கோ வீதியில் தற்செயலாகப் பார்த்திருக்கிறோம் என்பது போன்ற நெருக்கம் உருவாகிறது தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் ரதி மன்மதன் சிற்பங்கள் பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு ரதியும் ஒரு அழகு, கல்லில் செய்த சிற்பங்கள் என்றாலும் பெண் உடலின் …
அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை. சென்னை. திருச்சி பற்றிய அரிய ஆவணக்காட்சிகளின் தொகுப்பு இது பழைய மதுரையின் வீதிகளில் குதிரை வண்டிகள் கடந்து போவது, சுழித்தோடும் வைகை ஆற்றில் மீன்பிடிப்பது. வெற்றிலை வியாபாரம் செய்யும் பெண்கள், துறவிகள், எளிய மனிதர்கள். சிறுவர்கள், பாம்படம் அணிந்த பெண்கள். கோவிலின் அழகு ஒளிரும் புறத்தோற்றம் என மதுரையின் கடந்தகாலத்தைப் பார்க்க பார்க்க நெகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது. Old Madurai, South India, in 1945 and now https://youtu.be/TV21eP0uu_0 Old …
உலகப்புகழ்பெற்ற நாவல்களை மறுவாசிப்பு செய்வதற்கு எளிதாக புதிது புதிதாக பல பதிப்புகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அதிலும் புகழ்பெற்ற நாவல்களை இளம்வாசகர்கள் படிக்கும் வகையில் காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடுகிறார்கள், நடைபாதைக் கடை ஒன்றில் தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ் ஒன்றை வாங்கினேன், தஸ்தாயெவ்ஸ்கியின் கதையில் பேட்மேனின் கதாபாத்திரம் இணைந்து உருவாக்கப்பட்ட விசித்திரமான காமிக்ஸ் இது R Sikoryak என்ற ஒவியர் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ்வை பேட்மேன் முகமூடி அணிந்த சாசகநாயகனாக உருமாற்றி பகடி செய்வதன் வழியே இந்த காமிக்ஸை உருவாக்கியிருக்கிறார், …
தாகூர் விருது பெற்றுள்ள எனது யாமம் நாவலின் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது, உயிர்மை இதைச் சிறப்பு பதிப்பாக மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது. விலை ரூ275, UYIRMMAI PATHIPAGAM 1/29 SUBRAMANIYAN STREET ABIRAMAPURAM CHENNAI-600018. TAMIL NADU TELE/FAX: 91-44-24993448 uyirmmai@gmail.com
கோவையில் நடைபெற்ற விழாவில் எனக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது, நிகழ்வினை கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், கோவையில் நிறைய இளம்வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது, அன்றைய விழாவில் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்கள் கம்பனும் கண்ணதாசனும் என்று ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார், கம்பனின் பெருமைகளை அவர் எடுத்துச் சொல்லும் விதம் பரவசம் தருவதாக இருந்தது, வீடு வந்த இரண்டுநாட்களாக நானும் கம்பனில் தான் முழ்கியிருக்கிறேன் •• விகடனில் வெளியாகி …
தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் 2011ம் ஆண்டிற்கான குறும்படப் போட்டியில் சிறந்த குறும்படமாக நான் கதைவசனம் எழுதி அருண் பிரசாத் இயக்கியுள்ள கொக்கரக்கோ என்ற படம் முதல் பரிசு வென்றுள்ளது, இதற்காக ரூ15 ஆயிரம் பரிசு வழங்கப்பட இருக்கிறது, சிறந்த படத்தொகுப்பிற்கான பரிசும் நான் கதைவசனம் எழுதி அருண் பிரசாத் இயக்கியுள்ள பிடாரன் படத்திற்குக் கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அருண்பிரசாத்தையும் அவரது குழுவினர்களையும் மனம் நிறைய வாழ்த்துகிறேன். **
ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன், அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன், வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு …
சனிக்கிழமை கோவையில் நடைபெற்ற என்டோசல்பான் உள்ளிட்ட உயிர்கொல்லிகளுக்கு எதிரான கருத்தரங்கில் கலந்து கொண்டேன், இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார், மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராஜன். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டார்கள், இயல்வாகை என்ற சூழலியல் அமைப்பு இந்த உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு பயணத்தை நடத்துகிறது, அதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளைஞர்கள், உணர்ச்சிமயமாக அவர்கள் சூழலியல் சார்ந்து பேசுவதும் தீவிரமாகச் செயல்படுவதையும் காணும் போது உத்வேகமாக இருந்தது, இந்த நிகழ்வின் …
What is longest in the world? Is it the Great Wall of China or the course of River Nile? Neither! It is the daytime of an unemployed person. Worse is a day in the life of an unemployed who is already married. It moves like a snail! Are you observing the squirrel which is playing …