admin

பால் காகின்

I shut my eyes in order to see. – Paul Gauguin 1891 ஆண்டு ஒஷியானிக் என்ற கப்பல் ஆஸ்திரேலியா வழியாக பிரெஞ்சு காலனிகளில் ஒன்றான நியூ கலோடோனியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. கப்பலில் மூன்று அடுக்குகள் இருந்தன. குடியும் கொண்டாட்டமும் கூக்குரலுமாக நீளும் அந்த கடற்பயணத்தில் ஒரேயொரு ஆள் மட்டும் கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் தொலைவை வெறித்து பார்த்தபடியே வந்தான். அவன் கண்களில் கடலின் நீலமும் தொலைதுôர …

பால் காகின் Read More »

பௌத்த சினிமா.

ஐந்து வருசங்களுக்கு முன்பாக திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் வெர்னர் ஹெர்சாக் இயக்கிய Wheel of Time  என்ற ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன். பௌத்த மட சடங்குகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் காலச்சக்கர மண்டலா பற்றியது இந்த ஆவணப்படம்.  திபெத்திய பௌத்த மரபில் காலத்தை விழிக்க வைப்பது மிக ரகசியமான சடங்கு. இதற்காக காலச்சக்கரம் என்ற வட்டவடிவிலான மணல் சித்திரம் ஒன்றினை பிக்குகள் உருவாக்குகிறார்கள். அந்த கால சக்கரத்தின் மையத்தை விழிக்க வைப்பது ஒரு தாந்திரீக செயல்பாடு. அதனை தலாய்லாமா …

பௌத்த சினிமா. Read More »

உன்னத மனிதர்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை கூட அதிகபட்சமான ஒன்றாக நினைத்தது போல அதை விட்டு விலகி ஒரமாக படுத்து கிடந்தது. அருகில் போய் உட்கார்ந்து அதையே பார்த்து கொண்டிருந்தேன். நாயின் உடல் சீரற்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் மடங்கியிருந்தன. கண்கள் பழுத்து போய் ஒடுங்கியிருந்தது. …

உன்னத மனிதர். Read More »

இரண்டு ஆசான்கள்

சிறுகதை எழுத விரும்புகின்றவர்களுக்கு இரண்டு ஆசான்கள் அவசியமானவர்கள். ஒருவர் ஆன்டன் செகாவ், மற்றவர் மாபசான். இந்த இருவரும் சிறுகதை என்ற வடிவத்தை அதன் பல்வேறு உயர்நிலைகளுக்கு கொண்டு சென்றவர்கள். உலகின் தலை சிறந்த  கதை சொல்லிகள். காலம்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் எல்லா இசங்களையும் தாண்டி இவர்களது சிறுகதைகள் அசலாக மனித வாழ்வின் பேருண்மைகளை  என்றென்றும் வெளிப்படுத்துகின்றன.  சிறுகதை எழுத விரும்புகின்றவன் இந்த ஆசான்களிடம் தன்னை  முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும். இவர்களை தொடர்ந்து வாசிப்பதன் வழியே அவர்களின் கதைநுட்பத்தை …

இரண்டு ஆசான்கள் Read More »

மிருகத்தனம்

– சிறுகதை. அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில் நாய் ஆரோக்கியமாகவே இருந்தது. ஆனால் அதன் சுபவாம் மாறியிருப்பதை தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமணமாகி வரும்வரை அவள் நாய் வளர்த்ததில்லை. ஆனால் அவளது கணவன் ராஜனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வமிருந்தது. பெங்களுரில் பிரம்மசாரியாக தனியே வசித்த போது கூட இரண்டு நாய்கள் வளர்த்தாக சொல்லியிருக்கிறான். அவர்களது திருமணபரிசாக ஜோசப் …

மிருகத்தனம் Read More »

ஒய்வு

கடந்த நான்கு நாட்களாக உடல்நலக்குறைவு. ஒய்வில் இருக்கிறேன். படுக்கை. மருந்துகள். பாதி நேர உறக்கம் என்று பகலும் இரவும் கடந்து போகின்றன. தொடர்ந்த மழை சப்தம் ஜன்னலின் வழியே கேட்டுக் கொண்டிருக்கிறது**சென்ற வாரம் தேவதச்சனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு விசயம் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கிறது.நடந்து திரிய வேண்டிய அவசியமற்று போனவவைகளுக்கு தான் கண் உருவாகமால் போயிருக்கிறது. அதனால் தான் மரங்களுக்கு கண் இல்லையோ?**சார்லஸ் சிமிக் என்ற அமெரிக்க கவியை தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிக அற்புதமான …

ஒய்வு Read More »

துறவியும் மீனும்

துறவியும் மீனும் (The Monk and The Fish )என்ற ஐந்து நிமிச குறும்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். பிரெஞ்சில் உருவாக்கபட்ட அனிமேஷன் படமது. சிறந்த இசை, காட்சிபடுத்துதல், படத்தொகுப்பு என்று பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறது. 1994ல் தயாரிக்கபட்ட இந்த குறும்படத்தைஇயக்கியவர் Michaël Dudok de Wit ஜென் கதை போன்ற சிறிய கதையது. அதன் வழியே பௌத்த சாரத்தினை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அனிமேஷன் முறையும், இரவு காட்சி கோணங்களும்  அற்புதமாக உள்ளன. பௌத்த …

துறவியும் மீனும் Read More »

தனுஷ்கோடி

அழிந்து சிதலமாகி நிற்கும் தனுஷ்கோடியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். கடல் அடங்கியிருந்தது. மாலை நேரம். வெளிறிய நீல வானம். மேற்கில் ஒளிரும் சூரியன். மிதமான காற்று. கடல் கொண்டது போக எஞ்சிய இடிபாடுகள் கண்ணில் விழுகின்றன. ஒரு நாய் அலையின் முன்பாக ஒடியாடிக் கொண்டிருக்கிறது. கடலின் அருகாமை நம் சுபாவத்தையே மாற்றிவிடுகிறது. பலநேரங்கள் பேச்சற்று அதை பார்த்து கொண்டேயிருக்கிறோம். கடலை எப்படி உள்வாங்கி கொள்வது. கண்களால் கடலை ஒரு போதும் அறிய முடியாது. அலைகள் அல்ல கடலின் …

தனுஷ்கோடி Read More »

இயல்பு.

குமுதம் தீபாவளி மலரில் வெளியான குறுங்கதை.**அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை, தோளில் ஒரு லெதர் பேக், மெல்லிய பிரேம் உள்ள கண்ணாடி. ஒட்ட வெட்டப்பட்ட தலை. அகலமான கைகள். காலில் நைக்  ஷீ. உள்ளடங்கிய புன்னகை. சற்றே குழப்பமான நிலையில் என்ன வேண்டும் என்று கேட்டேன்.அந்தக் குரங்கு இனிமையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. தான் ஒரு விற்பனை பிரதிநிதி என்றும், …

இயல்பு. Read More »

சிற்பியின் நரகம்.

புகழ்பெற்ற பிரெஞ்சு பெண்சிற்பியும் ரோடினின் காதலியுமான கேமிலி கிளாடேல்  (Camille Claudel) பற்றிய திரைப்படத்தை விமானத்தில் வரும்போது தற்செயலாக காண நேர்ந்தது. 1988ல் பிரெஞ்சில் வெளியான இத்திரைப்படம் கேமிலி கிளாடேலின் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை விவரிக்கிறது. கலை உலகில் பெண் ஒவியர்கள் அறியப்பட்ட அளவிற்கு பெண் சிற்பிகள் அறியப்பட்டதில்லை. இப்படம் சமகால நவீன சிற்பிகளின் முன்னோடியான கேமிலியின் காதலையும் துயரத்தையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறதுசிற்பம் செய்வதில் ஆர்வமான கேமிலி ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். பெண்கள் …

சிற்பியின் நரகம். Read More »