எனக்குப் பிடித்த கதைகள்

எனக்குப் பிடித்த கதைகள் 30

மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர்.  தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது  மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும்  ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் …

எனக்குப் பிடித்த கதைகள் 30 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 29

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் – ஆர்தர் சி கிளார்க் தமிழில் :  ஆர்.அபிலாஷ் ”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ …ம்… நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் …

எனக்குப் பிடித்த கதைகள் 29 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 28

வெல்வெட் தலையணைகளின் கதை மார்த்தா த்ராபா – தமிழில் ரெங்கநாயகி கிரீச்சிடும் மரப்படிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் மேலேறி, அந்த மேடையின் முன்னால் வந்து, தன் கைகளில் நீட்டியிருந்த அந்த வெல்வெட் தலையணையை விரித்து மேயரிடம் கொடுக்க முன்வரும் வரை நிமியா சான்ஷெஸ் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஏனோ, ஒரு கணம், தன் மனதை மாற்றிக் கொண்டவள்போலத் தோன்றினாள் அவள். ஒரு அரைவட்டமாய்த் திரும்பி ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பான ஆடை அணிந்து கொண்டு மேடையினை முன்புறம் நெருக்கியடித்துக் கொண்டு இருந்த …

எனக்குப் பிடித்த கதைகள் 28 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 27

ஒண்டிக்கட்டை   —மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் ஏழைகளைப் புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவளது உதடுகள் இறுக்கமாக மூடியிருந்தன. அதன் ஓரங்களில் ஒரு நெளிவு அவளது வாயின் இருபுறங்களிலும் …

எனக்குப் பிடித்த கதைகள் 27 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 26

மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தமிழில் : ஆர்.சிவகுமார் வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மழை தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர்நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோகமயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் …

எனக்குப் பிடித்த கதைகள் 26 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 25

மணியோசை – ஜப்பானிய பழங்கதை. தமிழில்/ புதுமைப்பித்தன் “நான் சாவதற்குப் பயப்படவில்லை” என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. “இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?” வேதனைப்பட்டுக்கொண்டிருந்த கணவன் சொன்னான்: “உனக்குப் பதிலாக யாரும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள்; நீ போய்விட்டால் கலியாணமே செய்து கொள்ளமாட்டேன்.” அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது மனப்பூர்வமாகத்தான் சொன்னான்; அவள் மீது அவ்வளவு ஆசை அவனுக்கு. …

எனக்குப் பிடித்த கதைகள் 25 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 24

கோயில் / கௌ ஷிங்ஜென்.  தமிழில் / நதியலை நாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. …

எனக்குப் பிடித்த கதைகள் 24 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 23

கரடி வேட்டை                     லியோ டால்ஸ்டாய்- தமிழில் :எம்.ஏ.சுசீலா நாங்கள் கரடி வேட்டைக்காகச் சென்றிருந்தோம். என் கூட்டாளி ஒரு கரடியைச் சுட்டான்; ஆனால் அது ஒரு சதைக் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பனியின் மீது இரத்தத் துளிகள் படிந்திருந்தாலும் கரடி தப்பித்துப் போய்விட்டது. அந்தக் கரடியை உடனே பின் தொடர்ந்து செல்வதா அல்லது இரண்டு மூன்று நாட்களில் அது தன் இடத்துக்குத் திரும்பியதும் பார்த்துக் கொள்வதா என்பதை முடிவு செய்வதற்காக நாங்கள் எல்லோரும் காட்டில் ஒன்று கூடிப் பேசினோம். …

எனக்குப் பிடித்த கதைகள் 23 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 21

சிறுவர் விளையாட்டு – வில்லி ஸோரன்ஸன் (டேனிஷ்) தமிழில்: நகுலன் ஒரே தாய் தகப்பன்மாருக்குப் பிறந்த விசேஷத்தினால் சகோதரர்களான அவ்விரு சிறுவர்கள், அதே முறையில் பொதுவாக ஒரு மாமனையும் பெற்றிருந்தார்கள். சிறுவர்களுடைய மாமனுக்கு ஒரு காலை முறிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் அவ்விரு சிறுவர்களும், தங்கள் மாமனைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறுவர்களுடைய பரபரப்பைச் சாந்தப்படுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு இது விஷயமாக விஞ்ஞான ரீதியாக விஷயத்தை விளக்கிக்காட்ட வேண்டுமென்று நிச்சயித்தார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள். அவர்களுடைய …

எனக்குப் பிடித்த கதைகள் 21 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 20

விருந்தாளி -ஆல்பெர் காம்யு தமிழில்: க.நா.சுப்ரமண்யம் சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் …

எனக்குப் பிடித்த கதைகள் 20 Read More »