எனக்குப் பிடித்த கதைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 9

வெள்ளையானைகளைப் போன்ற மலைகள் எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி எப்ரோ சமவெளியில் மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கத்தில் நிழலோ மரங்களோ ஏதுமில்லை; ரயில்நிலையம் சூரிய வெளிச்சத்திலிருந்த இரண்டு ரயில்களுக்கு நடுவே இருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகே பக்கத்தில் கட்டிடத்தின் இளம் சூட்டுடன் கூடிய நிழலில் கதவைத் திறந்தால் ஒரு மதுபானக் கடையும் அதன் கதவில் பூச்சிகளை உள்ளே விடாதிருக்க மூங்கில் மணிகளால் ஆன திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் இளம் பெண்ணும் கட்டிடத்திற்கு …

எனக்குப் பிடித்த கதைகள் – 9 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் – 8

நுரை மட்டும் போதும் – ஹெராந்தோ தெலஸ் –( Hernando Tellez – Just Lather, That’s All  ) தமிழில் -இரா. செல்வராசு உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை …

எனக்குப் பிடித்த கதைகள் – 8 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் – 7

நதியின் மூன்றாவது கரை – ஜோவோ கிமேரஸ் ரோஸா ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார் ** கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை …

எனக்குப் பிடித்த கதைகள் – 7 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் – 6

குரங்கின் பாதம் – W. W. Jacobs -சிறுகதை தமிழில் : என்.பக்கிரிசாமி ** நல்ல குளிரும், நசநசவென்று ஈரமும் மிகுந்த ஒரு குளிர்கால இரவு. ஜன்னல்களின் திரைப்பலகைகள் நன்கு மூடப்பட்டிருந்தது. அறையின் வெப்பத்தை அதிகப்படுத்த உண்டாக்கப்பட்ட நெருப்புத்தொட்டியில் கனழ்ந்துகொண்டிருந்த கரித்துண்டுகள் தங்களது வேலையை சரியாகச் செயததால், அறையின் கதகதப்பு குளிருக்கு அடக்கமாக இருந்தது. தந்தை வொய்ட்டும் மகன் ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். வொய்ட் ஒரு வித்தியாசமான வகையில் குதிரையை நகர்த்தி மகனுடைய ராஜாவை கொல்வதற்கு முயற்சி …

எனக்குப் பிடித்த கதைகள் – 6 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 5

பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் …

எனக்குப் பிடித்த கதைகள் 5 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 4

மணல் புத்தகம்-சிறுகதை : போர்ஹேஸ் தமிழில் : க.செண்பகநாதன் …… மணலைக் கயிறாகத் திரித்து ….. (-ஜார்ஜ் ஹெர்பர்ட் – 1593-1623) கணக்கிலடங்காத புள்ளிகளை ஒருங்கே கொண்டது ஒரு கோடு; எண்ணிக்கையற்ற பல கோடுகளை கொண்டது ஒரு சமவெளி; கணக்கிலடங்கா சமவெளிகள் ஒரு கண பரிமாணம்; எண்ணற்ற கணபரிமாணங்கள் பெருத்த அதிகனமான பரிமாணமாகும்…. இவ்வாறாக கூறுவது சரியானதல்ல – இது நிலவியல் கணக்கைப் போல் இருப்பதால் கதையை கூறுவதற்கு உகந்த முறையல்ல. கற்பனைக் கதையே மெய்யான கதையென்ற …

எனக்குப் பிடித்த கதைகள் 4 Read More »

எனக்குப் பிடித்த கதைகள்- 3

யுத்தம்– லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த …

எனக்குப் பிடித்த கதைகள்- 3 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 2

பூங்காக்களின் தொடர்ச்சி ஹுலியோ கொர்த்தஸார்              மொழிபெயர்ப்பு: ராஜகோபால் சிலநாட்களுக்கு முன்புதான் அவன் அந்த நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவசர வியாபாரச் சந்திப்புகளின் நிமித்தம் அதை அவன் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. அவனுடைய எஸ்டேட்டிற்குத் திரும்பும் வழியில் ரயிலில், அதை அவன் மீண்டும் திறந்தான். கதை நிகழ்வில், கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் மெதுவாக ஆர்வம் வளார்வதற்குத் தன்னை அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், அவன் சார்பாகச் செயலாற்றும் அதிகாரத்தை வழங்கும் ஒரு கடிதத்தை …

எனக்குப் பிடித்த கதைகள் 2 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 1

பால்மணம் ஜப்பானியச் சிறுகதை எழுதியவர்- அகுடாகாவா[ RYUNOSUKE  AKUTAGAWA] தமிழாக்கம்: கவிஞர் வைதீஸ்வரன் ஷின்சுகே பிறந்ததிலிருந்து தாய்ப்பாலைச் சுவைத்ததேயில்லை. அவன் பிறந்ததிலிருந்தே அவன் தாய் மிகவும்   பலஹீனமானவளாக  பால்சுரப்பில்லாமல் இருந்தாள். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக செவிலித்தாயை ஏற்பாடு செய்யவேண்டுமென்றால் அதற்குப் பணம் தேவையாக இருந்தது. அவளுக்கு அவ்வளவு   வசதியில்லை. ஆகை யால் ஷின்சுகே பசும்பால் குடித்துத்தான் வளரவேண்டியிருந்தது.  இப்படி தாய்ப்பால் சுவையறியாமல் வளர்ந்த குழந்தைப் பருவத்தை  நினைத்து  அவன் எப்போதும் சபித்துக் கொள்ளாமல் இருந்ததே யில்லை தினமும் …

எனக்குப் பிடித்த கதைகள் 1 Read More »