ஓவியங்கள்

டாவின்சி- கலையும் வாழ்வும்

வான்கோ, பிக்காசோ, லியோனார்டோ டாவின்சி இந்த மூவர் குறித்தும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் அல்லது திரைப்படம் வெளியாகிறது. புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் மற்றும் தொலைக்காட்சியால் உருவாக்கபடும் இந்தப் படங்கள் உலகெங்கும் திரையிடப்படுகின்றன. பெரும்வரவேற்பைப் பெறுகின்றன. கார்செஸ் லம்பேர்ட் இயக்கிய I, Leonardo 2019ல் வெளியானது. இப்படம் டாவின்சியின் அறிவியல் ஈடுபாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டாவின்சியின் கோட்டுச்சித்திரங்கள் பற்றியும் அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தவர்கள் யார். அவர்களுடன் டாவின்சிக்கு எத்தகைய உறவு இருந்தது என்பது குறித்தும் விரிவாகப் பதிவு …

டாவின்சி- கலையும் வாழ்வும் Read More »

ருகெண்டாஸின் ஓவியங்கள்

An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன் ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை …

ருகெண்டாஸின் ஓவியங்கள் Read More »

வெர்மீரின் முகம்

ஜோஹன்னஸ் வெர்மீரின் ஒவியங்கள் இன்று பெற்றுள்ள புகழை அவர் வாழும் நாளில் பெறவில்லை. இதுவரை அவரது 34 ஓவியங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ள அவற்றை ஒரு சேர கண்காட்சியாக வைக்க முயலுகிறார்கள். அது குறித்த ஆவணப்படமே close to vermeer. இதனை சுசான் ரேஸின் இயக்கியுள்ளார். ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பணியாற்றும் ஜார்ஜ் வெபர். தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு மிகப்பெரிய வெர்மீர் கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனவு …

வெர்மீரின் முகம் Read More »

டாலியின் வினோத உலகம்

 “I am not strange. I am just not normal.” ― Salvador Dalí ஓவியர் சல்வடோர் டாலியின் வாழ்க்கையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Daliland. மேரி ஹாரன் இயக்கியுள்ளார். பென்கிங்ஸ்லி டாலியாக நடித்திருக்கிறார். மிகப்பொருத்தமான தேர்வு. 1970களில் நடக்கும் கதை. தனது சர்ரியலிச ஓவியங்களால் மிகப்பெரும் புகழை அடைந்தவர் டாலி. கரப்பான்பூச்சி மீசையும் விசித்திரமான ஒப்பனைகளும் கொண்ட டாலி தனது ஒவியங்களைப் போலவே வாழ்க்கையிலும் கனவுலகில் சஞ்சரித்தார். அவரது ஆடம்பர வாழ்க்கை ஒழுக்க …

டாலியின் வினோத உலகம் Read More »

வான்கோவின் கோதுமை வயல்

Van Gogh: Of Wheat Fields and Clouded Skies என்ற ஆவணப்படம் நெதர்லாந்திலுள்ள வான்கோ அருங்காட்சியகத்தைப் பற்றியது. அத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் வின்சென்ட் வான்கோவின் ஓவியங்களைத் தேடிச் சேகரித்து அவற்றைப் பாதுகாக்க ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஹெலன் க்ரோல்லர்-முல்லரைப் பற்றியது. இந்த ஆவணப்படத்தை ஜியோவானி பிஸ்காக்லியா இயக்கியுள்ளார். நெதர்லாந்தின் கிழக்கில் ஓட்டர்லோ எனுமிடத்தில் பரந்த இயற்கை வெளியின் நடுவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கே வான்கோவின் ஓவியங்கள் மட்டுமின்றிப் பிகாசோ, மாண்ட்ரியன் உள்ளிட்ட முக்கிய …

வான்கோவின் கோதுமை வயல் Read More »

ஆரஞ்சு தோட்டக் குரங்குகள்

செசானின் நிலக்காட்சி ஓவியங்களைத் தியானம் என்று அழைத்தால் ரூசோவின் வனவாழ்வைச் சித்தரிக்கும் ஓவியங்களை மௌனவிழிப்புணர்வு என்று அழைக்கலாம். கையில் ஆரஞ்சு பழங்களுடன் உள்ள குரங்குகளை ஹென்றி ரூசோ மிக அழகாக வரைந்திருக்கிறார். ஆரஞ்சு தோட்டத்திலுள்ள அந்தக் குரங்குகளின் ஒளிரும் கண்களும் விநோத முகபாவமும் கனவுலகின் காட்சி போல உணரச் செய்கின்றன. சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர் ரூசோ. ஒவியப்பள்ளிகளில் பயிலாத ஓவியர்களைப் பிரெஞ்சு அகாதமி ஒதுக்கி வைத்திருந்த காலமது. ஆகவே ரூசோவின் ஓவியங்களை அகாதமி அங்கீகரிக்கவில்லை. …

ஆரஞ்சு தோட்டக் குரங்குகள் Read More »

நீலக்குதிரைகளின் மௌனம்.

ஃபிரான்ஸ் மார்க் வரைந்த புகழ்பெற்ற ஓவியமான Blue Horses பற்றி மேரி ஆலிவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அந்த ஒவியத்தினுள் செல்லும் அவரை நீலக்குதிரைகள் நெருங்கி வருகின்றன. தாங்கள் அறிந்த ஏதோ ரகசியத்தைச் சொல்ல முயல்வது போலக் காட்சியளிக்கின்றன. ஆனால் எதையும் சொல்லவில்லை என கவிதை முடிவு பெறுகிறது. உலகில்  இன்னும் கருணை மீதமிருக்கிறது என்பதன் அடையாளம் போலவே இந்த நீலக்குதிரைகள் வரையப்பட்டிருப்பதாக ஆலிவர் கருதுகிறார். இந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு என்ற …

நீலக்குதிரைகளின் மௌனம். Read More »

நெற்றியில் தேள் கொண்டவள்

ரஃபேல் வரைந்த எலிசபெத் கோன்சாகா உருவப்படத்தில் எலிசபெத்தின் நெற்றியில் ஒரு தேள் உருவம் காணப்படுகிறது. தேள் வடிவிலான தலைச்சுட்டி ஒன்றை எலிசபெத் அணிந்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் தீவினையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளம்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடியது என்கிறார்கள். நிஜமாகவும் இருக்கலாம், எலிசபெத்தின் நெற்றியிலுள்ள தேள் அவளது சோகமான, எதையோ சொல்ல முயன்று தயங்குகின்ற முகத்திற்குக் கூடுதல் வசீகரம் தருகிறது. இந்த ஓவியம் 1504ல் வரையப்பட்டது எலிசபெத் அர்பினோ டியூக்கின் மனைவி. கலை இலக்கியங்களில் தீவிர விருப்பம் …

நெற்றியில் தேள் கொண்டவள் Read More »

ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள்

எனது பள்ளியில் வாரம் ஒரு நாள் ஓவிய வகுப்பு இருந்தது அதில் முதலில் வரைய கற்றுக் கொள்ளும் போது மாணவர்கள் அனைவரும் காகம் வரைவார்கள். காகத்தை வரைவது எளிதானது. சிறிய கோடுகளால் எளிதாக வரைந்துவிட முடியும். ஆனால் அதில் துல்லியமிருக்காது. ஒரு குருவியை அல்லது புறாவை வரைவது அந்த வயதில் கடினமானது. ஆர்வமுள்ள சில மாணவர்கள் தோகை விரித்த மயிலை வரைவார்கள். துல்லியமாக வரைந்து பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரும் ஆந்தையை, மீன்கொத்தியை, மரங்கொத்தியை வரைய முற்பட்டதில்லை. …

ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள் Read More »

ஹாமர்ஷோயின் கதவும் சுவர்களும்

வில்ஹெம் ஹாமர்ஷோய் (Vilhelm Hammershøi. )டென்மார்க்கின் புகழ்பெற்ற ஓவியர். லண்டனில் இவரது ஓவியக்கண்காட்சி நடைபெற்ற போது அதன் தலைப்பாக The Poetry of Silence என வைத்திருந்தார்கள். மிகப் பொருத்தமான தலைப்பு. பொருட்களால் நிரம்பிய நமது அன்றாட வாழ்க்கைக்கு மாற்றாகக் குறைவான பொருட்களுடன் வெற்றிடத்தின் அகன்ற கைகள் நம்மை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே அவரது ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. இவரது ஓவியங்களில் முக்கியப் பொருளாகக் கதவும் சுவர்களும் இடம்பெறுகின்றன. பெரும்பான்மை வீடுகளில் அலங்காரம் என்ற பெயரில் எதை எதையோ …

ஹாமர்ஷோயின் கதவும் சுவர்களும் Read More »