நூலக மனிதர்கள்

நூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு.

நூலகரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு தமிழில் ஏதாவது நாவல் எழுதப்பட்டிருக்கிறதா, அல்லது திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என ஒரு வாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நான் அறிந்தவரை நூலகக் காட்சிகள் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நூலகர் ஒரு கதாபாத்திரமாக நாவலில். சினிமாவில் வந்திருக்கிறார். நூலகரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் எதையும் வாசிக்கவில்லை. ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஹாலிவுட் படங்களில் நூலகரை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க் பொது நூலகம் நிறையப் படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. ஹாரிபோட்டரில் வரும் நூலகம் …

நூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு. Read More »

நூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்

அவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும். நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் சாயல் கொண்டவர். உயரமும் அவரைப் போலவே இருக்கும். உடைந்த மூக்குக்கண்ணாடியை நூல் கொண்டு கட்டியிருப்பார். ரப்பர் செருப்புகள். பெட்ரோல் பங்க் ஒன்றில் கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்துப் பி.ஏ.. கதர் வேஷ்டி சட்டை தான் எப்போதும் அணிந்திருப்பார். நாளிதழ்கள் பகுதியைத் தவிர வேறு எங்கும் போக மாட்டார். தமிழ் ஆங்கில நாளிதழ்கள் அத்தனையும் உட்கார்ந்து படிப்பார். படித்து …

நூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர் Read More »

நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான். கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் …

நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள் Read More »

நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும்.

ஒரு திரைக்கதையை எழுதுவதற்காகத் தான் ரவிச்சந்திரன் பொதுநூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்தான். அவனைப் போன்ற உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் எழுதுவதற்கான இடம். பூங்காவில் அமர்ந்து எழுத முடியாது. எந்த நேரமும் ஆள் நடமாட்டம் சப்தம் இருக்கும். தனியே அமர்ந்து எழுதுவதற்கு இவ்வளவு பெரிய நகரில் இடமே கிடையாது. நூலகத்தில் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் கேள்வி கேட்கமாட்டார்கள். சில நேரம் அவனைப் போன்ற உதவி இயக்குநர்கள் யாராவது வந்து சேர்ந்துவிட்டால் …

நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும். Read More »

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம்.

மனோகர் அந்த முறை ஒரு ஒவியரை நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போலவே நூலகரிடம் சென்று ரெபரென்ஸ் பகுதியிலுள்ள மாவட்ட சுதந்திரப் போராட்ட மலரைக் காண வேண்டும் என்று கேட்டார். மனோகர் எப்போது நூலகத்திற்கு வந்தாலும் அந்த மலரைக் கேட்டு வாங்கிப் பார்ப்பது வழக்கம். சில நேரம் உறவினர்கள் சிலரை அழைத்து வந்தும் அந்த மலரைக் காட்டியிருக்கிறார். அந்த மலரில் அவரது தாத்தா கிருஷ்ணப்பாவின் புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதுவும் ஊர்வலம் ஒன்றில் கொடியை ஏந்தியபடி முன்னால் …

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம். Read More »

நூலக மனிதர்கள். 27 பெயரெனும் கண்ணாடி.

நூலகத்திற்கு வரும் அனைவரும் புத்தகம் படிப்பதற்கென்று மட்டும் வருவதில்லை. சிலர் விநோத காரணங்களுக்காகவும் நூலகத்திற்கு வருகிறார்கள். தேடுகிறார்கள். தான் பிறந்த வருஷத்தில் வெளியான புத்தகங்களைத் தேடிப் படிப்பதில் ஒருவருக்கு ஆர்வம் அதிகம். நூலில் எந்த ஆண்டு வெளியானது என்று தான் முதலில் பார்ப்பார். இன்னொருவருக்கோ நாவல்களில், கதைகளில் வருகிறவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள். எந்த ஊரில் வசிக்கிறார்கள் என்பது முக்கியம். வேறு ஒருவருக்கு இதுவரை யாரும் எடுத்துப் போகாத புத்தகத்தை மட்டுமே தேடி எடுத்துப் படிப்பது வழக்கம். இதற்கு …

நூலக மனிதர்கள். 27 பெயரெனும் கண்ணாடி. Read More »

நூலக மனிதர்கள் 26 காகிதப் பொம்மைகள்.

நூலகரின் மேஜை முன்னால் நான்கு காகித வண்ணத்துபூச்சிகள் இருந்தன. அழகான அந்தக் காகித பொம்மைகளை யார் செய்தது எனக்கேட்டேன் “நம்ம லைப்ரரியிலே புக் எடுக்கிற ஒரு வாத்தியார். அவரா கத்துகிட்டு செய்திருக்கிறார்“ என்றார் அடுத்த முறை அந்த ஆசிரியர் நூலகத்திற்கு வரும் போது நூலகர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அவர் பெயர் கே.ஆர்.நாதன். கிராமப்புற பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். அன்றாடம் டவுன் பஸ்ஸில் பள்ளிக்கு போய் வருவார். அந்தப் பள்ளிக்கென மைதானம் கூடக் …

நூலக மனிதர்கள் 26 காகிதப் பொம்மைகள். Read More »

நூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.

அந்த இளைஞருக்கு முப்பது வயதிருக்கக் கூடும். பேஸ்கட் பால் பிளேயர் போன்ற உயரம். கழுத்தில் ஒரு கறுப்பு கயிறு. அடர் பச்சை வண்ண பேண்ட். இரண்டு பாக்கெட்டுகள் கொண்ட சட்டையை அணிந்திருந்தார். பொதுநூலகத்திற்குப் போய் வருவதில் உள்ள சௌகரியம். நிறையப் புதிய மனிதர்களைச் சந்திக்க முடிவது. அவர்களுடன் பேசிப் பழகி நட்பு கொள்வது. அப்படித்தான் அந்த இளைஞரும் அறிமுகமானார். அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தார். பெரும்பாலும் நைட் ஷிப் என்பதால் பகலில் உறங்கிவிடுவார். வாரம் …

நூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது. Read More »

நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு

1980களில் பொது நூலகங்களுக்கு GDR Review என்ற ஆங்கில இதழை ஜெர்மன் தூதரகம் அனுப்பி வந்தது. அழகான வண்ண காகிதத்தில் மிக நேர்த்தியான புகைப்படங்களுடன் அந்த இதழ் வெளிவந்தது. கிராமப்புற நூலகத்தில் யார் ஆங்கில இதழைப் படிக்கப் போகிறவர்கள். ஆகவே நூலகர் இதழின் உறையைக் கூடப் பிரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பார். நான் ஒருவன் தான் அதைக் கேட்டு வாங்கிப் பிரித்துப் படிப்பவன். அந்த இதழின் சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை புது டயரி மற்றும் காலண்டர் ஒன்றை …

நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு Read More »

நூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்

நூலகத்தின் அருகிலே அவரது மெக்கானிக் ஷாப் இருந்தது. மணி என்ற அந்த மெக்கானிக் அடிக்கடி நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அவர் புத்தகம் எடுத்துப் போவதைப் பார்க்கவில்லை. நூலகத்திலும் நாளிதழ் படிப்பதோ, வார இதழ்களைப் புரட்டுவதோ கிடையாது. பெரும்பாலும் மூலையில் உள்ள மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பார். மாலை நேரமாக இருந்தால் பேப்பர் படிக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பார். படிக்காமல் எதற்காக இப்படி நின்று கொண்டேயிருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். ஒரு நாள் மணியிடம் எனது நண்பனின் …

நூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில் Read More »