நூலக மனிதர்கள்

நூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்

நூலகத்திற்கு வருபவர்களில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் காண்டேகரின் யயாதி படித்தவர்கள். நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாவலைப் படித்திருப்பார்கள். சிலர் காண்டேகரின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறார்கள் அவர்கள் பேச்சில் அன்றாடம் யயாதி இடம்பெறுவது வழக்கம். மராத்திய எழுத்தாளரான காண்டேகரைப் பலரும் தமிழ் எழுத்தாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவு அவரைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ சரளமாகத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார் நூலகத்தில் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக யயாதி இருந்தது. நான் ஒரு முறை யயாதியை …

நூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர் Read More »

நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்

நூலகங்களில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டங்கள் எளிமையானவை. ஐம்பது பேருக்குள் தான் வருவார்கள். ஆனால் அக்கறையுடன் பேச்சைக் கவனிப்பார்கள். கேள்வி கேட்பார்கள். மேடை அலங்காரங்கள் கிடையாது. பொன்னாடை போட மாட்டார்கள். மைக் செட் வசதி கூட இருக்காது. ஆனால் அந்த கூட்டம் தரும் நெருக்கம் பெரிய மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தந்ததில்லை. சிறுநகரங்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுவது மிகக் குறைவு. அதுவும் திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் தவிர்த்து வேறு புத்தகங்களைப் பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுவது அபூர்வமே. …

நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம் Read More »

நூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக்கு நடுவே

பல்லாயிரம் புத்தகங்களுக்கு நடுவே இருந்தாலும் ஒரு சில நூலகர்களே புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் அது ஒரு வேலை மட்டுமே. ஆனால் தனது வேலையும் பார்த்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் படித்துக் கொண்டும் இருக்கக் கூடிய சிவானந்தம் போன்ற நூலகர் இருக்கத் தானே செய்கிறார்கள் சிவானந்தம் நிறையப் படிக்கக் கூடியவர். யாராவது ஏதாவது கேட்டால் உடனே அந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் எழுதிய முக்கியமான புத்தகங்களைப் பற்றியும் சொல்லுவார். ஒருவரிடமும் ஒரு வார்த்தை கோபமாகப் …

நூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக்கு நடுவே Read More »

நூலக மனிதர்கள் 19 இரண்டு பெண்கள்

அந்தப் பெண்கள் இருவரும் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்தார்கள். வாரம் இரண்டு முறை அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது நூலகத்திற்கு வருவார்கள். நாவல்கள் பகுதியில் தேடி ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துக் கொள்வார்கள். ஒரே நாளில் தான் இருவரும் திருப்பிக் கொடுப்பார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவரும் எப்போதும் ஒரே எழுத்தாளரின் இரண்டு புத்தகங்களைத் தான் தேர்வு செய்வார்கள். ஒருவர் படித்து முடித்தவுடன் மற்றவர் படிக்கக் கொடுத்துவிடுவார்களோ என்னவோ. ஏன் வேறுவேறு புத்தகங்களை அவர்கள் தேர்வு …

நூலக மனிதர்கள் 19 இரண்டு பெண்கள் Read More »

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும்

நூலகத்திற்கு வந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பதற்காக ஒருவர் அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ? பத்து நாட்களுக்கு ஒரு முறை அப்படி ஒரு பையன் அடிவாங்குவான். ஆவேசமாக நூலகத்திற்குள் வரும் அவனது மாமா அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசிவிட்டுக் கன்னத்தில் அறைவார். அடிவாங்கிய போதும் அவன் சலனமேயில்லாமல் உட்கார்ந்திருப்பான். ஒரு முறை அந்தப் பையன் அடிவாங்கிய போது நூலகத்திலிருந்த பலரும் அவனது மாமாவைக் கண்டித்தார்கள். ஆனால் அவரோ “வேலையைப் போட்டுட்டு இங்கே உட்கார்ந்து பொஸ்தகம் படிச்சிட்டு …

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும் Read More »

நூலக மனிதர்கள். 17 கனவின் முகம்

அந்த இளைஞருக்கு இருபது வயதிருக்கும். எப்போது நூலகத்திற்கு வரும் போதும் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு தான் வருவார். அதை நூலகத்தினுள்ளும் கழட்ட மாட்டார். அவர் தான் ஒரு நாள் “சினிமா பாட்டுப்புத்தகங்களை ஏன் நூலகத்தில் வாங்குவதில்லை“ என்று கோவித்துக் கொண்டார் “பாட்டுப் புத்தகம் வேணும்னா கோவில் முன்னாடி இருக்கிற பெட்டிகடையில விற்குறாங்க. பத்துப் பைசா குடுத்தா கிடைச்சிரும். சினிமா பாட்டுப் புத்தகமெல்லாம் லைப்ரரியிலே வாங்க முடியாது “என்றார் நூலகர் “ஏன் சினிமா பாட்டுபுத்தகம் படிக்கிறது தப்பா“ என்று …

நூலக மனிதர்கள். 17 கனவின் முகம் Read More »

நூலக மனிதர்கள்-16 இரண்டாம் பாகம்

“நீங்க எடுத்திருக்கிறது நாவலோட இரண்டாம் பாகம் . முதல் பாகம் லெண்டிங் போனது இன்னும் வரலை“ என்றார் நூலகர் “பரவாயில்லை சார்.  நான் இரண்டாம் பாகம் படிக்கிறேன் “என்றார் அந்த வாசகர் நூலகர் வியப்போடு பார்த்தபடியே “கதை புரியாதே“ என்றார் “படிக்கிறதை வச்சி புரிஞ்சிகிட வேண்டியது தான். கல்யாணத்துக்கு முன்னாடி என் வொய்ப் அவ வீட்ல எப்படியிருந்தா.  காலேஜ்ல எப்படி படிச்சா. எந்த ஊருக்கெல்லாம் டூர் போனா எதுவும் எனக்குத் தெரியாது. முதல்பாகம் தெரியாமல் நான் அவளைக் …

நூலக மனிதர்கள்-16 இரண்டாம் பாகம் Read More »

நூலக மனிதர்கள் 15 சாகசத்தின் பின்னால்

பள்ளி வயதில் நூலகத்திற்குச் செல்லும் போது காமிக்ஸ் புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று தான் முதலில் தேடுவேன். பொதுநூலகங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதில்லை. காமிக்ஸ் புத்தகம் என்பதை ஏதோ தீண்டத்தகாத பொருளாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பள்ளிச் சிறுவர்கள் முதலில் தேடுவது காமிக்ஸ் தான். அதுவும் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் கிடைக்குமா என்று பரபரப்பாகத் தேடுவேன். பள்ளியின் அருகிலுள்ள பெட்டிக்கடை ஒன்றில் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பார்கள். அதை விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் அங்கேயே அமர்ந்து …

நூலக மனிதர்கள் 15 சாகசத்தின் பின்னால் Read More »

நூலக மனிதர்கள் 14 சார்லியுடன் ஒரு பயணம்.

9/11க்கு முன்பு வரை சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்குப் போய் வருவதற்கு எந்தக் கெடுபிடியும் கிடையாது. வாசலில் ஒரு காவலர் பரிசோதனை செய்வார். அவ்வளவே. உறுப்பினர் ஆவதும் எளிதானதே. வேலையில்லாமல் சுற்றித்திரிந்த என்னைப் போன்றவர்களுக்குப் பல ஆண்டுகள் அடைக்கலம் தந்த இடம் அமெரிக்கன் சென்டர் நூலகம். அன்றாடம் அந்த நூலகத்திற்குப் போய்வருவேன். அமெரிக்கா சார்ந்த அனைத்துத் துறை நூல்களைக் கொண்ட அழகான நூலகம். நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு மிகச்சிறப்பான வசதி …

நூலக மனிதர்கள் 14 சார்லியுடன் ஒரு பயணம். Read More »

நூலக மனிதர்கள் 13 புதிய மனிதன்.

நூலகத்தின் நுழைவாயிலில் ஒரு வருகைப்பதிவேடு வைக்கபட்டிருக்கும். அதில் ஒரேயொரு கையெழுத்து மலையாளத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். . அது வர்கீஸின் கையெழுத்து. அவர் பஞ்சாலை ஒன்றில்  சூப்ரவைசராக வேலை செய்வதற்காகக் கேரளாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தார். விருதுநகர் போன்ற சிறுநகரில் அவர் படிப்பதற்கு மலையாள வார இதழ்களோ, நாளிதழ்களோ கிடைப்பதில்லை. ஆகவே அவர் நூலகத்தைத் தேடி வந்தார். நூலகத்தில் மலையாள பத்திரிக்கைகள். புத்தகங்கள் கிடையாது. ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துப் போவார். ஆங்கில நாளிதழ்களை வாசிப்பார். அவருக்குத் தமிழ் பேசினால் …

நூலக மனிதர்கள் 13 புதிய மனிதன். Read More »