நூலக மனிதர்கள்

நூலக மனிதர்கள் 12 நீண்ட கால வாசகர்

நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் …

நூலக மனிதர்கள் 12 நீண்ட கால வாசகர் Read More »

நூலக மனிதர்கள் 11 புத்தகம் மீட்டான்.

சிலரால் ஒரு நிமிஷம் கூடக் காத்திருக்கமுடியாது. சும்மா இருக்க முடியாது. எதையாவது செய்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்க வேண்டும். உடம்பில் பரபரப்புத் தொற்றிக் கொண்டேயிருக்கும். பேசும் போதும் அவசரமாகப் பேசுவார்கள். சாப்பிடுவதிலும் அவசரம். பஸ் வந்து நிற்பதற்குள் ஏறி அமர்ந்துவிடுவார்கள். திரையரங்கில் சினிமா போடுவதற்கு அரை மணி நேரம் ஆகும் என்றால் காத்திருக்கமாட்டார்கள். இவ்வளவு ஏன் டீயை வாங்கினால் கூட இரண்டே உறிஞ்சில் குடித்து முடித்துவிடுவார்கள். அவ்வளவு அவசரம் எதற்கு என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு …

நூலக மனிதர்கள் 11 புத்தகம் மீட்டான். Read More »

நூலக மனிதர்கள் 10 பாதிப் படித்த புத்தகம்

நூலகத்தின் புத்தக அடுக்குகளில் நாவல் பகுதியில் யார் நின்று புத்தகம் தேடிக் கொண்டிருந்தாலும் அவராக வந்து அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார். அப்படித் தான் எனக்கும் ஒரு நாள் அறிமுகம் ஆனார். நாற்பது வயதிருக்கும். அரைக்கை சட்டை போட்டிருந்தார். பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. மெலிந்த தோற்றம். பேசும்போது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துக் கொண்டார். எதையோ தொலைத்துவிட்டுத் தேடுபவரைப் போல அவரது குரல் இருந்தது “1984ல் ஒரு புத்தகத்தைப் பாதிப் படிச்சிட்டு ரிடர்ன் பண்ணிட்டேன். …

நூலக மனிதர்கள் 10 பாதிப் படித்த புத்தகம் Read More »

நூலக மனிதர்கள் 9 மகிழ்ச்சியின் அடையாளம்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் குடும்பத்துடன் நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். மூன்று சைக்கிளில் அவர்கள் நூலகத்தின் முன்பு வந்து இறங்குவதைக் காணுவதே மகிழ்ச்சியாக இருக்கும். அப்பா அம்மா இரண்டு மகள்கள் ஒரு பையன் எனக் குடும்பமாக நூலகத்திற்கு வருவார்கள். திருமண வீட்டிற்குப் போவது போல அழகான உடையுடுத்தியிருப்பார்கள். நூலகத்திற்கு இப்படிக் குடும்பமாக வருவது அவர்கள் மட்டுமே. பெரும்பாலும் ஒருவர் இருவராக நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு குடும்பமே நூலகத்திற்கு வருவது வியப்பாக இருக்கும். வாரந்தோறும் நூலகம் வருவதை …

நூலக மனிதர்கள் 9 மகிழ்ச்சியின் அடையாளம். Read More »

நூலக மனிதர்கள் 8 பீம ரகசியம்

அந்தக் கான்ஸ்டபிள் யூனிபார்மில் தான் நூலகத்திற்கு வருவார். ஐம்பது வயதிருக்கும். பருத்த உடல். படியேறும் போது மூச்சுவாங்கும். மூட்டுவலியோடு அவர் படியேறி வந்தவுடன் நூலகர் முன்பாக உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொள்வார். அவராக ஒரு போதும் புத்தக அடுக்குகளுக்குச் செல்ல மாட்டார். கதை, கவிதை நாவல் போன்ற எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக மாட்டார். எப்போதும் சமையல் புத்தகம் மட்டுமே எடுத்துப் போவார். நிச்சயம் அது அவர் படிப்பதற்கான புத்தகமில்லை என்று தெரியும். விதவிதமான சமையல் முறைகளைப் …

நூலக மனிதர்கள் 8 பீம ரகசியம் Read More »

நூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை

1992ன்  துவக்கத்தில் அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். மோகன் என்ற பார்வையற்ற நபரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருவார் ஒரு இளைஞர். அவரது பெயர் செல்வம். மோகனுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும் .செல்வமும் அதே வயது தான். மோகனை விடவும் செல்வம் ஆள் குள்ளம். பெரிய காதுகள் கொண்டவர். அவர்கள் முகத்தில் தனியான மகிழ்ச்சியிருக்கும். பொதுவாகப் பார்வையற்றவர்கள் குறித்த பொதுப்புத்தி அவர்கள் எப்போதும் சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பார்கள் என்றிருக்கிறது. அது உண்மையில்லை. …

நூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை Read More »

நூலக மனிதர்கள் 6 முதல் வாசகர்.

மல்லாங்கிணர் நூலகத்தில் முதன்முறையாக வார இதழ்களுக்கு நடுவே ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையைப் பார்த்தேன். பாலைவனச்சோலை என்ற பெயரில் வெளியாகியிருந்த அந்தக் கையெழுத்து பத்திரிக்கையை உள்ளூர் நண்பர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியிருந்தார்கள். இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையெழுத்திலே தயாரித்து வெளியிடலாம் என்பது புதுமையான விஷயமாகத் தோன்றியது. ஆசிரியர் குழுவிலிருந்தவர்களே கவிதைகள் எழுதியிருந்தார்கள். ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. பொது அறிவு தகவல்கள். நிறையப் பொன்மொழிகள் இடம்பெற்றிருந்தன. கடைசி இரண்டு பக்கங்களை வாசகர் கருத்துகள் எழுதுவதற்காக இடம் விட்டிருந்தார்கள். கிராம நூலகத்தில் …

நூலக மனிதர்கள் 6 முதல் வாசகர். Read More »

நூலக மனிதர்கள் 5 கதையின் முடிவு

ஒரு நாவலுக்குள் ஆயிரம் பிரச்சனைகள். கஷ்டங்கள், தோல்விகள் வரலாம் ஆனால் கதையின் முடிவு எப்போதும் சுபமாக இருக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை வாசகர்கள் மனதில் இருக்கிறது. காரணம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த எல்லாக் கதைகளின் முடிவும் சுபமானதே.  அரக்கனால் தூக்கிச் செல்லப்பட்ட இளவரசியை ஏழு கடல் ஏழு மலை தாண்டி எப்படியாவது இளவரசன் போராடி வெற்றிபெற்றுவிடுவான். எவ்வளவு மோசமான அழிவு கொலை தீமை செய்யும் ஆட்களாக இருந்தாலும் காமிக்ஸ் கதைகளின் நாயகன் முடிவில் அவர்களை …

நூலக மனிதர்கள் 5 கதையின் முடிவு Read More »

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன்

“உனக்கு அறிவில்லையா.. நீ எல்லாம் ஏன்யா லைப்ரரிக்கு வர்றே“ என்று நூலகர் சப்தமாகக் கேட்டபோது அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தோம். நூலகர் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார். அவர் முன்னால் முப்பது வயது ஆள்  ஒருவன் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நூலகப் பணியாளர்கள் நின்றிருந்தார்கள். “இந்த ஆளை போலீஸ்ல ஒப்படைச்சிர வேண்டியது தான்“ என்று நூலகர் கோபமான குரலில் சொன்னார் படித்துக் கொண்டிருந்த எல்லோரும் நூலகரின் மேஜையை ஒட்டித் திரண்டு நின்றோம். தலைகவிழ்ந்து நின்ற ஆள் …

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன் Read More »

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி.

லா.ச.ராவின் அபிதா இருக்கிறதா என்று அவர் நூலகரிடம் கேட்டபோது நான் திரும்பிப் பார்த்தேன். பொதுவாக நூலகரிடம் லா.ச.ராவின் புத்தகங்களைக் கேட்பவர்கள் அரிது. பெரும்பாலும் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம் கடற்புறாவைத் தேடுபவர்கள் தான் அதிகம். ஆனால் அந்த மனிதர் லா.ச.ராமாமிருதம் எழுதிய அபிதா புத்தகத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் தான் அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் போயிருந்தேன். ஆகவே நூலகர் என்னைச் சுட்டிக்காட்டி அவர் இன்னமும் திருப்பித் தரலை என்று சொன்னார். உடனே அந்த மனிதர் …

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி. Read More »