பயணங்கள்

தேசிய நூலகத்தினுள்

கொல்கத்தாவின் தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். பிரிட்டிஷ் காலத்தில் இம்பீரியல் நூலகமாகச் செயல்பட்டது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிகளின் நாளிதழ்கள்,வார இதழ்கள், புத்தகங்கள் இங்கே சேமித்து வைக்கபடுகின்றன. தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நாம் புத்தக விநியோகம் செய்யும் போது அதன் ஒரு பிரதியை இங்கே அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அலிப்பூரில் உள்ள தேசிய நூலக வளாகம் மிகப்பெரியது. முப்பது ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் இது கவர்னரின் மாளிகையாகச் செயல்பட்டிருக்கிறது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த …

தேசிய நூலகத்தினுள் Read More »

சாந்திநிகேதனின் மணியோசை

கொல்கத்தாவிலிருந்து மூன்றரை மணி நேர தூரத்திலுள்ளது சாந்திநிகேதன். இந்தியாவின் தனித்துவமிக்கக் கல்வி வளாகத்தைத் தாகூர் உருவாக்கியிருக்கிறார். கலைகளும் இசையும் இலக்கியமும் அனைத்து மொழிகளும் அறிவியலும் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்கபடும் சர்வதேசக் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது சாந்தி நிகேதன். இன்று அதன் பெயர் விஸ்வபாரதி பல்கலைகழகம். இயற்கையான சூழல். மரத்தடி வகுப்பறைகள். சிறந்த ஆசிரியர்கள். பெரிய கலைக்கூடங்கள். மரபும் நவீனமும் இணைந்த கல்விமுறை, இங்கே வடகிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து கல்வி பயிலுகிறார்கள். சீன. ஜப்பானிய, கொரிய மாணவர்களும் …

சாந்திநிகேதனின் மணியோசை Read More »

அலிப்பூர் சிறை அருங்காட்சியகம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கபட்டிருந்த கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். 15.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறைச்சாலை. செங்கல்-சிவப்பு சுவர்களால் ஆன கட்டிடங்கள். பதினெட்டு அடி உயர சுற்றுச்சுவர், வளாகத்தினுள் நிறைய மரங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள். வரலாற்றின் சாட்சியமாக உள்ள தூக்குமேடை, சுதந்திரப் போராட்டகால நாளிதழ் செய்திகள், ஒவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். நேரு. நேதாஜி, பி.சி. ராய், சி.ஆர். தாஸ், கவிஞர் …

அலிப்பூர் சிறை அருங்காட்சியகம் Read More »

பொம்மலாட்டம்.

உதய்பூர் போயிருந்த போது ராஜஸ்தானின் பாரம்பரிய பொம்மலாட்டத்தைப் பார்த்தேன். உதய்பூரில் நாட்டுப்புறக்கலைகளுக்கான கலைக்கூடம் ஒன்றை அரசே உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான் முழுவதுமே இது போன்ற நாட்டுப்புறக்கலை மையங்கள் செயல்படுகின்றன. இங்கே தினமும் மாலை நேரம் ஆடல் பாடல் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு இதனால் நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர் வி.. ரமணி பாவைக்கூத்துக் கலைஞர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் இயக்கிய போது அவருடன் பொம்மலாட்டக்கலைஞர்களைச் சந்திக்க உடன் சென்றிருந்தேன். தமிழகத்தில் அவர்களின் …

பொம்மலாட்டம். Read More »

மதராஸ் டிராம்வே

மதராஸில் ஒடிய டிராம் பற்றிய அந்தக் காலப் பதிவுகள் •• டிராமில் அதிகக் கூட்டம்! இப்போது ஊர் கெட்டுக்கிடக்கிற கிடையில் டிராம் காரர்கள் கொஞ்சம் இருக்கிற ஸ்திதியைக் கவனித்து நடந்தால் நலமாகும். தினந்தோறும் காலை, மாலைகளில் ஒரு   வரை யறையின்றி ஜனங்களை ஏற்றுகிறார்கள். இப்படிச் செய்வதினால் அசுத்தம் ஜாஸ்திப்படுவதுடன் தொத்து வியாதியும் விருத்தியாக இடமாகும். ஆகையால் அதிகக் கூட்டம் அடையாமல் பார்க்கவேண்டும். – ‘சுதேசமித்திரன்’ உபதலையங்கம் 1898 ஆகஸ்ட் 27 பக்கம் – 4. **** டிராம்வேயில் …

மதராஸ் டிராம்வே Read More »

மாஸ்கோ நினைவுகள்

கல்வியாளர். நெ.து.சுந்தர வடிவேலு இரண்டு முறை சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயண அனுபவங்களைச் சோவியத் மக்களோடு, நான் கண்ட சோவியத் ஒன்றியம் என இரண்டு பயண நூல்களாக எழுதியிருக்கிறார். இரண்டும் இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது. இன்றைய தலைமுறைக்குச் சோவியத் ஒன்றியம் பற்றியோ அதன் வாழ்க்கை முறை குறித்தோ அதிகம் தெரியாது. அவர்கள் இந்த நூலை வாசித்தால் நிச்சயம் வியந்து போவார்கள். இந்தியாவிலிருந்து சோவியத் சென்று வந்த எழுத்தாளர்கள் பலரும் தனது பயண அனுபவத்தை நூலாக்கியிருக்கிறார்கள். …

மாஸ்கோ நினைவுகள் Read More »

ஷார்ஜா – 3

அபுதாபி நண்பர்களுடன் ஷேக் சையத் மசூதிக்குள் நுழைந்த போது கனவுலகிற்குள் நுழைந்தது போலவே இருந்தது. சலவைக்கல்லால் உருவாக்கபட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீனகாலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக்கலையை வளர்த்தெடுக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக நின்று கொண்டிருந்தது இம் மசூதி. கவிழ்த்திவைக்கபட்ட வெண்ணிற கும்பா போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சுப் பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த …

ஷார்ஜா – 3 Read More »

ஷார்ஜா பயணம் – 2

எந்த வெளிநாட்டிற்குப் போனாலும் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களை நான் காண்பதில்லை. ஒருவேளை அந்த இடம் மிகவும் முக்கியமானது எனக்கருதினால் ஊருக்குக் கிளம்பும் கடைசி நாளில் அதைக் காண்பேன். ம்யூசியம், ஆர்ட் கேலரி, பழமையான கோட்டைகள். நினைவகங்கள், இசைக்கூடங்கள், நூலகங்கள், புத்தக கடைகள், அறிவியல் கண்காட்சிகள், இயற்கை எழில் நிரம்பிய இடங்கள்  இவற்றைத் தான் விருப்பமாகத் தேடிச் சென்று காண்பேன். இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். கலைநிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பேன். ஆகவே துபாய், ஷார்ஜா பயணத்திலும் ம்யூசியம் ஆர்ட் …

ஷார்ஜா பயணம் – 2 Read More »

ஷார்ஜா பயணம்

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இதில் 64 நாடுகள் பங்கேற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இந்தப் புத்தகத் திருவிழா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்றது. பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெற்றிருந்தன. . இந்தப் புத்தகக் கண்காட்சி ஷார்ஜாஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி அவர்களின் கனவு. அவரே நேரடியாகப் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளைத் திட்டமிடுகிறார். வழிநடத்துகிறார் என்கிறார்கள். இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சியை நான் …

ஷார்ஜா பயணம் Read More »

இலங்கை பயணம்

எட்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். கிழக்கு மாகாண இலக்கியவிழாவில் சிறப்புரையாற்ற எழுத்தாளர் உமா வரதராஜன் அழைத்திருந்தார். கொழும்பில் துவங்கி யாழ்பாணம் வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன். இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகப் பார்வையிட்டேன்.  இந்த பயண அனுபவம் குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த பயணத்தில்எழுத்தாளர்கள் உமா வரதராஜன், ஹசீன்,  எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், திசேரா,மலர்செல்வன்.குழப்பிழான் சண்முகம், சாந்தன்,   யதார்த்தன் , கே.எஸ். சிவக்குமாரன், எம்.எம். நௌஷாத், சித்தாந்தன், பௌசர்  சிராஜ் …

இலங்கை பயணம் Read More »