குல்தாரா
தார்பாலைவனத்தினுள் ஜெய்சால்மரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது குல்தாரா. கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தை ஆவிகள் வாழும் ஊர் என்கிறார்கள். எங்கும் இடிபாடுகள். ஒட்டுமொத்த ஊரும் காலியாக உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்சால்மரின் திவான் சலீம் சிங் குல்தாராவில் வசித்து வந்த பாலிவால் பிராமணப் பெண் ஒருத்தியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பாலிவால் பிரமாணர்கள் மறுக்கவே பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய்த் திருமணம் செய்வதோடு ஊரையும் அழித்துவிடுவேன் என சலீம் சிங் மிரட்டியிருக்கிறார். …