ஓவியங்கள்

கல்லின் கனவு.

மைக்கேலாஞ்சலோ – இன்பினிடோ (Michelangelo-Infinito) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் இயக்குனர் Emanuele Imbucci . மைக்கேலாஞ்சலோவாக நடித்திருப்பவர் Enrico Lo Verso. ஓவியர்களையும் சிற்பிகளையும் பற்றிய திரைப்படங்களை எப்படி இத்தனை கலை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. தோற்றமும் உடையும் நடிப்பும் ஒளிப்பதிவும் அபாரம். இந்தத் திரைப்படம் மைக்கேலாஞ்சலோவின் முக்கியக் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டதின் பின்புலத்தையும் அவரது காலகட்டத்தைச் சேர்ந்த சக கலைஞர்களையும், அதிகார நெருக்கடிகளையும் முதன்மைப்படுத்துகிறது. படத்தின் சட்டகம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மைக்கேலாஞ்சலோ கதையை …

கல்லின் கனவு. Read More »

கோடுகளின் உயிரியக்கம்

அ.பெருமாள் சாந்தி நிகேதனில் பயின்ற ஓவியர். மதுரையில் வசித்து வந்த அவர் ஓவியக்கலை குறித்த சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஓவியக்கலை- நந்தலால் போஸ். பெருமாள்  1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். தனது ஆசிரியரும் இந்தியாவின் பெருமைக்குரிய ஓவியருமான நந்தலால் போஸ் ஆற்றிய உரை மற்றும் அவரது கட்டுரைகளை பெருமாள் மொழியாக்கம் செய்திருக்கிறார் நந்தலால் போஸ் நவீன …

கோடுகளின் உயிரியக்கம் Read More »

கிராஸ்தமியின் நாய்

பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம். இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே. களைப்புடன் வீடு திரும்பும் வேட்டைக்காரர்கள் ஒரு புறம், மறுபுறம் தொலைதூரப் பனி மலை. அதன் அடிவாரக் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டு. விவசாயிகளின் வேலைகள். மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம். மூன்று வேட்டைக்காரர்களும் சோர்வடைந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் வேட்டையாடிய நரி காணப்படுகிறது. நாய்களும் சோர்ந்திருக்கின்றன. நிக்கலாஸ் …

கிராஸ்தமியின் நாய் Read More »

செசானும் எமிலி ஜோலாவும்

வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும். சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். …

செசானும் எமிலி ஜோலாவும் Read More »

நித்தியத்தின் நுழைவாயில்

ஒவியஉலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஒவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போலக், கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஒவியர்களுக்கு எப்போதும் உண்டு. உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஒவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. கௌதம புத்தர் தனது முதற்சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையுறாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை …

நித்தியத்தின் நுழைவாயில் Read More »

விளையாட்டுச் சிறுவர்கள்.

1850களில் நியூயார்க் நகர வீதியில் சுற்றியலைந்த பூட் பாலிஷ் போடும் சிறார்கள், பழம் விற்பவர்கள். பேப்பர் போடுகிறவர்கள். பூ விற்பவர்கள் என்று பல்வேறுவிதமான சிறார்களை ஒவியமாக வரைந்திருக்கிறார் ஜான் ஜார்ஜ் பிரவுன்.(John George Brown) சிறார்களை ஒவியமாக வரைந்தவர்களில் இவரே தனித்துவமானவர். குழந்தைப் பருவத்தைத் தனது ஒவியங்களுக்கான முக்கியக் கருப்பொருளாகக் கொண்டிருந்தார் பிரவுன். ஆரம்பக் காலத்தில் நடுத்தர வர்க்க குழந்தைகளை வரைந்தவர் பின்பு ஏழை, எளிய சிறார்களை அதிகம் வரைந்திருக்கிறார். இவரது பல முக்கிய ஒவியங்களின் ஒரிஜினல்களைக் …

விளையாட்டுச் சிறுவர்கள். Read More »

புத்தகம் வாசிப்பவர்கள்

புத்தகம் வாசிப்பதை பல முக்கிய ஒவியர்களும் ஒவியமாகத் தீட்டியிருக்கிறார்கள். இதில் கார்ல் ஸ்பிட்ஸ்வெக் (Carl Spitzweg) முக்கியமான ஒவியர். இவர் புத்தகம் வாசிக்கும் படிப்பாளிகள் பற்றி நிறைய ஒவியங்கள் வரைந்திருக்கிறார். இதில் மிகச்சிறந்த ஒவியம் புத்தகப்புழு. கார்ல் ஸ்பிட்ஸ்வெக் 1808 ஆம் ஆண்டில் ம்யூனிச் நகரில் பிறந்தார். கவிஞரான இவர் சுயமுயற்சியால் ஒவியம் வரைய கற்றுக் கொண்டார். இவரது தந்தை ஒரு மருந்துக்கடை வைத்திருந்தார். ஆகவே கார்ல் ஸ்பிட்ஸ்வெக்கும் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் …

புத்தகம் வாசிப்பவர்கள் Read More »

மோனேயின் நீர் அல்லிகள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே (Claude Monet – 1840-1926) இயற்கையை துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஒவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் கண்டிருக்கிறேன் Water Lilies என்ற ஒவிய வரிசை அபாரமானது. இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. இயற்கையை நேரில் காணும் போது பெரிய பொருட்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. அவற்றையே மனம் பிரதானமாக அவதானிக்கிறது. உள்வாங்கிக் கொள்கிறது. காற்றினால் தண்ணீரில் ஏற்படும் அலைகளையோ, ஒளி ஊடுருவி விளையாடுவதையோ. பூக்களின் திறந்த …

மோனேயின் நீர் அல்லிகள் Read More »

சீன நிலக்காட்சி ஒவியங்கள்.

சீன நிலக்காட்சி ஒவியங்களைக் காணும் போது ஒவியன் தனக்கு வெளியேயுள்ள உலகை வரைந்தது போலவே தோன்றவில்லை. மாறாகக் காற்று, மலை, அருவிகள் யாவும் தனது வெளிப்பாட்டின் வடிவமே என்பது போலவே வரைந்திருக்கிறார்கள். குறிப்பாகப் பறவைகளை, விலங்குகளை ஐரோப்பிய ஒவியங்களைப் போலப் பெரியதாக வரையவில்லை. மாறாக அதன் இயல்பில், அதன் வடிவ அளவிலே வரைகிறார்கள். குரூர மிருகங்களை வரையும் போது அதன் குரூரரத்தை துல்லியமாகவே சித்தரித்திருக்கிறார்கள். பாறைகளைச் சீன ஒவியர்கள் அளவிற்கு உலகில் வேறு எவரும் வரைந்திருப்பார்களா எனத் …

சீன நிலக்காட்சி ஒவியங்கள். Read More »

பால்சாக்கின் சிற்பம்

நவீன சிற்பங்களின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் சிற்பி ரோடின் பற்றிய Rodin (2017) திரைப்படம் பார்த்தேன். ஒவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பிரெஞ்சில் வெளியாகியுள்ளன. கலையாளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுப்பது தனிப்பிரிவாகவே உள்ளது. உண்மையில் அதுவொரு சவால். ஒரு கலைஞனின் முழுவாழ்க்கையைத் திரையில் காட்டிவிட முடியாது. ஆகவே அவரது வாழ்வின் பிரதான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டே திரைப்படம் உருவாக்கபடுகிறது. ரோடினுக்கும் அவரது மாணவியும் காதலியுமாக இருந்த கேமிலோ கிளெடலிற்குமான உறவும் …

பால்சாக்கின் சிற்பம் Read More »