ஓவியங்கள்

வான்கோவின் இரவு

People use art to explain each other their feelings –  Leo Tolstoy. எனக்கு வான்கோவின் ஒவியங்களை மிகவும் பிடிக்கும், நவீன ஒவியத்தின் தனிப்பெரும் கலைஞன் வான்கோ, அவரது  புகழ்பெற்ற ஒவியமான நட்சத்திரங்களோடான இரவு என்ற ஒவியத்தைப் பாருங்கள் தைல வண்ணத்தில் 29 x 36  அளவில் வரையப்பட்ட ஒவியமது ,இன்று நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் உள்ளது 1889ம் ஆண்டு இந்த ஒவியத்தை வரையும் போது வான்கோ சென்ட் ரெமி என்ற இடத்தில் உள்ள …

வான்கோவின் இரவு Read More »

அன்பு தியோ.

  எனக்கு தியோவைப் பிடிக்கும். அவன் ஒவியர் வான்கோவின் தம்பி. நான்கு வயது இளையவன். தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நிஜவாழ்வில் இருந்தால் எப்படியிருந்திருப்பான் என்பதற்கு தியோவை உதாரணமாகச் சொல்லலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் மிஷ்கின் எளிய மனிதன். ஆனால் அன்பும் கருணையும் உருவானவன். அறிந்த அறியாத மனிதர்களுக்காக தன்னிடமிருப்பதை முழுமையாக பகிர்ந்து கொள்பவன். அடுத்தவரின் துயரங்களுக்காக மனம் வருந்துபவன். அவனிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவுமில்லை. அதே நேரம் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்பவர்களுக்காக  அவன் கைகொடுத்து உதவுகிறான். …

அன்பு தியோ. Read More »

ஹொகுசாயின் அலைகள்

எரிமலை சீற்றத்தின் காரணமாக ஐரோப்பா முழுவதும்ஸ்தம்பித்து போயுள்ளதை பற்றிய தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு ஒன்றில்ஹொகுசாயின் புகழ்பெற்ற ப்யூஜி எரிமலை ஒவியம் ஒன்று கண்ணில் பட்டு மறைந்து போனது. மனதில் செய்து மறந்து உடனே ஹொகுசாயின் (Katsushika Hokusai) புகழ்பெற்ற ஒவியங்களான ப்யூஜி எரிமலை பற்றிய 36 சித்திரங்கள் என்ற ஒவியத்தொகுப்பை காணவேண்டும் போலிருந்தது. என்னிடமிருந்த ஒவிய புத்தகங்களில் இருந்து அதை தேடி எடுத்து புரட்டினேன். வுட் பிளாக் பிரிண்ட் வகையை சேர்ந்த சித்திரங்கள் அவை. 1826ல் வரையபட்டவை. …

ஹொகுசாயின் அலைகள் Read More »

பால் காகின்

I shut my eyes in order to see. – Paul Gauguin 1891 ஆண்டு ஒஷியானிக் என்ற கப்பல் ஆஸ்திரேலியா வழியாக பிரெஞ்சு காலனிகளில் ஒன்றான நியூ கலோடோனியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. கப்பலில் மூன்று அடுக்குகள் இருந்தன. குடியும் கொண்டாட்டமும் கூக்குரலுமாக நீளும் அந்த கடற்பயணத்தில் ஒரேயொரு ஆள் மட்டும் கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் தொலைவை வெறித்து பார்த்தபடியே வந்தான். அவன் கண்களில் கடலின் நீலமும் தொலைதுôர …

பால் காகின் Read More »

சிரிப்பதற்காக அல்ல

பாலஸ்தீனிய கேலிசித்திரக்காரரான நஜி அல் அலியின்(Naji Al-Ali ) கார்டுன்களில் ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒரு இணையதளத்தில் கண்டேன். அதிலிருந்து அவரை பற்றி தேடி படித்து வந்தேன். சமீபத்தில் அவரது கார்டூன் புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. (A Child in Palestine – The Cartoons of Naji al-Ali)  அதை புரட்டியதும் மனதில் தோன்றிய வாசகம் இவை சிரிப்பதற்கான கார்டுன் இல்லை என்பதே. பொதுவாக கேலிச் சித்திரங்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்க …

சிரிப்பதற்காக அல்ல Read More »

மரபினைத் தொடரும் கலை

திருவாரூரை சேர்ந்த டாக்டர் ஆர். திருநாவுக்கரசு அவர்களின் ஒவியக்கண்காட்சி இரண்டு வாரங்களுக்கு  முன்பாக சென்னையின் விநயாசா  கலைகாட்சியகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தேன். துவக்கவிழாவில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒவியரான ஆர்.பி. பாஸ்கரன் அவர்களை சந்தித்தேன். அவரது ஒவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமகால இந்திய ஒவியர்களில் பாஸ்கரனும் ஆதிமூலமும் இரு பெரும் ஆளுமைகள். அவரது தோற்றமே அவரது ஆளுமையின் தனித்த வடிவமாக இருந்தது. சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி, ஒவியர்கள் மனோகர், விஸ்வம், அரஸ், மற்றும் நண்பர்கள் மனுஷ்யபுத்திரன், …

மரபினைத் தொடரும் கலை Read More »

நவீன ஓவியம்

சில கேள்விகள்.  சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ் மறைந்த பேரா. திரு. ஜோஸப் ஜேம்ஸ் இந்திய முன்னணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஓவியப் பத்திரிக்கைகளில் இவர் விமர்சனங்களும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. நவீன ஓவியம் ஏன் புரியவில்லை. ? உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலருக்கும் மட்டுமே அதன் தத்துவமும், கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம், மரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் …

நவீன ஓவியம் Read More »

சித்திரப்புலி

            Experience is food for the brain – Bill Watterson தினந்தந்தி பேப்பரில் வெளியாகி வரும் கன்னித்தீவை நம்மில் அத்தனை பேரும் சில நாட்களாவது படித்திருப்போம். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக கன்னித்தீவு வாசித்தவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை இருந்தால் அவர்கள் கட்டாயம் நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள். காரணம் இத்தனை வருடங்களுக்குள் அதற்கு வரைந்த ஒவியர்கள் மாறியிருக்கிறார்கள். …

சித்திரப்புலி Read More »

பால் காகின்

        – நிறங்களின் தீவு. I shut my eyes in order to see. – Paul Gauguin 1891 ஆண்டு ஒஷியானிக் என்ற கப்பல் ஆஸ்திரேலியா வழியாக பிரெஞ்சு காலனிகளில் ஒன்றான நியூ கலோடோனியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. கப்பலில் மூன்று அடுக்குகள் இருந்தன. குடியும் கொண்டாட்டமும் கூக்குரலுமாக நீளும் அந்த கடற்பயணத்தில் ஒரேயொரு ஆள் மட்டும் கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் தொலைவை வெறித்து …

பால் காகின் Read More »

டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள்.

    எழுத்தாளர்களில் பலருக்கும் எழுதுவதற்கு இணையாக பல்வேறு தனித் திறன்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஒவியத்தில் நாட்டமும் தனித்திறனும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழில் நான் அறிந்தவரை எழுத்தாளர் வண்ணதாசன், விட்டல்ராவ், கவிஞர்கள் தேவதச்சன், ஆனந்த், வைத்தீஸ்வரன், போன்றவர்கள் சிறப்பாக ஒவியம் வரையக்கூடியவர்கள். ஆனால் அதை முழுமையாக அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யூமா வாசுகி ஒவியக்கலைப் பயின்றவர். தேர்ந்த ஒவியர்.  அவரது எழுத்திலும் அதே தீவிரமும் தனித்துவமும் உள்ளது. கவிஞர் பிரம்மராஜன் …

டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள். Read More »