சினிமா

நாற்காலியான பெண்

 “பை டிசைன்” திரைப்படத்தில் மூன்று பெண்கள் சலிப்பான ஒரு மதியத்தில், நேரத்தைக் கடத்துவதற்காக மரச்சாமான்கள் விற்கும் கடையைப் பார்வையிடுகிறார்கள். அந்தக் கடையில் கமிலிக்கு ஒரு நாற்காலி பிடித்துப் போகிறது. ஆனால் விலை அதிகம் என்பதால் அதை உடனே வாங்க முடியவில்லை. எப்படியாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தனது சேமிப்பில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு மறுநாள் வாங்க முற்படுவதற்குள் நாற்காலி வேறு ஒருவருக்கு விற்கபட்டு விடுகிறது. அதனைக் கமிலியால் ஏற்க முடியவில்லை. விற்பனை செய்யப்பட்ட அந்த …

நாற்காலியான பெண் Read More »

சிந்துபாத்தின் சாகசம்.

தி கோல்டன் வாயேஜ் ஆஃப் சிந்துபாத் திரைப்படத்தில் சிந்துபாத் லெமூரியா தீவைத் தேடிச் செல்கிறான். 1973ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தில் தமிழக வரலாற்று ஆய்வில் குறிப்பிடப்படும் கடல்கொண்ட தேசமான லெமூரியாவை கற்பனையான புதையல் தீவாகச் சித்தரிக்கிறார்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் மாலுமி சிந்துபாத் ஏழு கடல் பயணங்களை மேற்கொள்கிறான். இந்தச் சாகசப் பயணங்களைப் பற்றி எண்ணற்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நான் பார்த்த சிந்துபாத் படங்களில் மிகச்சிறப்பானது இதுவே ஆயிரத்தோரு இரவு கதையில் இரண்டு சிந்துபாத் இடம்பெறுகிறார்கள். …

சிந்துபாத்தின் சாகசம். Read More »

துப்பாக்கியும் பெண்ணும்

Nouvelle Vague 2025ல் வெளியான திரைப்படம். 1950- 60 களில் தோன்றிய பிரெஞ்சு புதிய அலையின் முக்கிய இயக்குனர் கோதார் இயக்கிய “பிரத்லெஸ்” திரைப்படம் எப்படி உருவானது என்பதைப் பற்றிய படம் Cahiers du Cinema இதழில் சினிமா விமர்சனங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்த கோதார் எப்படித் திரைப்பட இயக்குநராக உருவானார் என்பதைப் படம் விவரிக்கிறது. “All you need to make a movie is a girl and a gun” என்கிறார் கோதார். …

துப்பாக்கியும் பெண்ணும் Read More »

மனசாட்சியின் உதயம்

அம்ரும் திரைப்படத்தில் ஹில்லே என்ற பெண் ஹிட்லர் இறந்த சேதியை ரேடியோவில் கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைகிறாள். கர்ப்பிணியான அவள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கி எதையும் சாப்பிட மறுக்கிறாள். தங்களைக் காக்க வந்த கடவுளான ஹிட்லர் எப்படி இறந்து போவார் எனப்புலம்புகிறாள். அவர் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போரைத் தொடர வேண்டும் என்கிறாள். ஆனால் அதே வீட்டிலுள்ள அத்தை ஈனா ஹிட்லரின் புகைப்படத்தை அடுப்பிலிட்டு எரித்து இனி நாம் விடுதலை அடைந்தோம் என்கிறாள். இந்த இருவருக்கும் …

மனசாட்சியின் உதயம் Read More »

கடல் காணாத சிறுவர்கள்

1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார். ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக …

கடல் காணாத சிறுவர்கள் Read More »

மகிழ்ச்சியின் திறவுகோல்.

மசாகி கோபயாஷி இயக்கிய பியூட்டிஃபுல் டேஸ் திரைப்படத்தில் மலர்களை விற்பனை செய்யும் வயதான பெண்ணிற்கும் ஓய்வு பெற்ற தொழிலதிபரான ஷிகாகிக்கும் இடையில் உருவாகும் நட்பு மிக அழகாக விவரிக்கபட்டுள்ளது. ஓசுவின் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. படத்தின் மையக்கதை இவர்களைச் சுற்றி நடக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியை உருவாக்கும் திறவுகோல்கள். முதியவர்களான இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும், மழையில் நனைந்து கொண்டு வரும் முதியவரின் விளையாட்டுதனமான பேச்சு. …

மகிழ்ச்சியின் திறவுகோல். Read More »

திரும்ப முடியாத பாதை

குற்றவுலகின் கதவுகளைத் தள்ளி ஒருவர் உள்ளே நுழைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். கணவன், மகனுடன் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் எத்தேல் வைட்ஹெட் விரும்பி குற்றவுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறாள். சுழலைப் போல அந்த உலகம் உள்ளே இழுத்துக் கொள்கிறது. தனது வாழ்க்கையைப் பந்தயமாக வைத்துச் சூதாடிய பெண்ணின் கதை என்று The Damned Don’t Cryயைச் சொல்லலாம். Film Noir வகையைச் சார்ந்த படம். ஜோன் க்ராஃபோர்ட் சிறப்பாக நடித்துள்ளார். வின்சென்ட் ஷெர்மன் இதை இயக்கியுள்ளார் …

திரும்ப முடியாத பாதை Read More »

காதணிகளின் பயணம்

மாக்ஸ் ஓஃபுல்ஸ் (Max Ophuls) இயக்கிய ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேடம் டி… திரைப்படம் 1953 ல் வெளியானது. இதன் கதை வியன்னாவில் நடக்கிறது. 1951-ல் வெளியிடப்பட்ட லூயிஸ் டி வில்மோரின் குறுநாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது ஜெனரல் ஆண்ட்ரேயின் மனைவியான லூயிசா தனது சூதாட்டக் கடன்களை அடைப்பதற்காகக் கணவனிற்குத் தெரியாமல் விலை மதிப்புமிக்க வைரக் காதணிகளை ரகசியமாக விற்பனை செய்கிறாள். இந்தக் காதணிகளின் பயணமே படத்தின் மையக்கதை ஆண்ட்ரே தனது மனைவிக்குத் திருமணப் பரிசாக …

காதணிகளின் பயணம் Read More »

வெயில் நிறைந்த மதியம்

ஆல்பெர் காம்யுவின் அந்நியன் நாவல் (L’Étranger ) இதுவரை 75க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் திரைப்பட வடிவத்தை விஸ்காண்டி இயக்கியிருக்கிறார். 1967ல் வெளியான The Stranger திரைப்படத்தில் மார்சலோ மாஸ்ட்ரோயானி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். நாவலின் அடர்த்தியில்லாத மேலோட்டமாக உருவாக்கபட்ட படம். பெரிய வெற்றியைப் பெறவில்லை. சென்ற ஆண்டு இதே நாவலின் புதிய திரைவடிவம் வெளியாகியுள்ளது. THE STRANGER என்ற இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்சுவா ஓசோன். …

வெயில் நிறைந்த மதியம் Read More »

மீட்சியின் இரவு

ஒரு மழை நாளில் தேவாலயத்தின் வெளியே உள்ள அறிவிப்பு பலகையிலிருந்து துவங்குகிறது ஜான் ஹூஸ்டன் இயக்கிய ‘தி நைட் ஆஃப் தி இகுவானா’ திரைப்படம். பாதிரியார் ஷானான் பிரசங்கத்திற்காகத் தயாராகிறான் பதற்றமான, முகம் மற்றும் தயக்கமான குரல். சபையினை வழிநடத்துவதில் அவனுக்கு ஏதோ பிரச்சனையிருக்கிறது. குடிகாரன் என்று குற்றம்சாட்டப்பட்ட ஷானன் தனது பிரசங்க மேடையில் திடீரென மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது திருச்சபையினரைத் தேவாலயத்திலிருந்து கோபமாகத் துரத்தும் அதிர்ச்சியான காட்சியுடன் படம் தொடங்குகிறது, இந்நிகழ்வைத் தொடர்ந்து அவன் …

மீட்சியின் இரவு Read More »