சினிமா

சாமுராயின் தலைமறைவு

‘ஸ்வார்ட் ஆஃப் தி பீஸ்ட்’ திரைப்படம் தலைமறைவாக வாழும் சாமுராயின் வாழ்வைப் பேசுகிறது. செவன் சாமுராய் போன்ற படங்களில் நாம் காணும் சாமுராய்களிலிருந்து மாறுபட்டவர்கள் இதில் இடம் பெறும் சாமுராய்கள். இவர்கள் அங்கீகாரமில்லாதவர்கள். சாமுராய்கள் என்ற பெயரில் சிலர் ஏமாற்றுவேலைகள் செய்கிறார்கள். தனது இனத்திற்கான அங்கீகாரம் மற்றும் பெருமையைத் தர மறுத்த ஆலோசகரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக வாழுகிறான் கென்னோசுகே. அது ஒரு சதிச்செயல் . அவனுடன் துணை நின்றவர்கள் கொல்லப்படுகிறார்கள். கென்னோசுகே தப்பியோடுகிறான். அவனது பயணத்தில் …

சாமுராயின் தலைமறைவு Read More »

மறக்கப்பட்டவர்கள்.

ராஜஸ்தானின் சித்தோர்கரை பூர்வீகமாகக் கொண்ட காடியா லோஹர் சமூகத்தினர் நாடோடிகளாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆயுதங்கள் செய்வதில் திறமை பெற்ற கொல்லர்களான இவர்கள் மாட்டுவண்டிகளில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் பயணித்தபடி இருக்கிறார்கள். இரும்பு மற்றும் பித்தளையில் கலைப்பொருட்கள் மற்றும் கருவிகள் செய்வது இவர்களின் வேலையாகும். நிரந்தர வசிப்பிடமில்லாத இவர்கள் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அடையாள அட்டைகளோ, எவ்விதமான அரசு உதவிகளோ கிடைக்காத இவர்களின் வாழ்க்கையை India’s Forgotten People …

மறக்கப்பட்டவர்கள். Read More »

உலகின் அழகு

சாஷா வாட்டர்ஸ் இயக்கிய Mary Oliver: Saved by the Beauty of the World ஆவணப்படம் கவிஞரின் வாழ்க்கை மற்றும் இலக்கியச் செயல்பாடுகளை விவரிக்கிறது. மேரி ஆலிவரை நினைவுபடுத்துவது இயற்கையின் மீதான அவரது ஈடுபாடு மற்றும் புரிதல். இந்த ஆவணப்படம் அதனைச் சரியாகப் பதிவு செய்துள்ளது. மேரி 1935-ல் பிறந்து, ஓஹியோவில் உள்ள ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவர். தினமும் எழுதுவதை ஒரு சடங்காகக் கொண்டிருந்தவர். நகர வாழ்வின் பரபரப்பை விட்டு ஒதுங்கிய அவரது வீடு …

உலகின் அழகு Read More »

மழைக்குள் நடக்கும் திருமணம்.

அகிரா குரோசாவாவின் கடைசித் திரைப்படமான ட்ரீம்ஸில் நரியின் திருமண ஊர்வலக் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனை ஒரு சிறுவன் ரகசியமாக ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறான். வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் பொழுதினை நரிக்குக் கல்யாணம் நடப்பதாகச் சொல்லும் நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. எனது சிறுவயதில் நரிக்கும் காகத்திற்கும் கல்யாணம் நடக்கும் நாளில் இப்படி வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் எனக் கேள்விபட்டிருக்கிறேன். அந்தக் கல்யாணத்தினை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மழை பெய்கிறது என்பார்கள். இதே நம்பிக்கை ஜப்பானிலும் இருக்கிறது. அதையே …

மழைக்குள் நடக்கும் திருமணம். Read More »

நாற்காலியான பெண்

 “பை டிசைன்” திரைப்படத்தில் மூன்று பெண்கள் சலிப்பான ஒரு மதியத்தில், நேரத்தைக் கடத்துவதற்காக மரச்சாமான்கள் விற்கும் கடையைப் பார்வையிடுகிறார்கள். அந்தக் கடையில் கமிலிக்கு ஒரு நாற்காலி பிடித்துப் போகிறது. ஆனால் விலை அதிகம் என்பதால் அதை உடனே வாங்க முடியவில்லை. எப்படியாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தனது சேமிப்பில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு மறுநாள் வாங்க முற்படுவதற்குள் நாற்காலி வேறு ஒருவருக்கு விற்கபட்டு விடுகிறது. அதனைக் கமிலியால் ஏற்க முடியவில்லை. விற்பனை செய்யப்பட்ட அந்த …

நாற்காலியான பெண் Read More »

சிந்துபாத்தின் சாகசம்.

தி கோல்டன் வாயேஜ் ஆஃப் சிந்துபாத் திரைப்படத்தில் சிந்துபாத் லெமூரியா தீவைத் தேடிச் செல்கிறான். 1973ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தில் தமிழக வரலாற்று ஆய்வில் குறிப்பிடப்படும் கடல்கொண்ட தேசமான லெமூரியாவை கற்பனையான புதையல் தீவாகச் சித்தரிக்கிறார்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் மாலுமி சிந்துபாத் ஏழு கடல் பயணங்களை மேற்கொள்கிறான். இந்தச் சாகசப் பயணங்களைப் பற்றி எண்ணற்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நான் பார்த்த சிந்துபாத் படங்களில் மிகச்சிறப்பானது இதுவே ஆயிரத்தோரு இரவு கதையில் இரண்டு சிந்துபாத் இடம்பெறுகிறார்கள். …

சிந்துபாத்தின் சாகசம். Read More »

துப்பாக்கியும் பெண்ணும்

Nouvelle Vague 2025ல் வெளியான திரைப்படம். 1950- 60 களில் தோன்றிய பிரெஞ்சு புதிய அலையின் முக்கிய இயக்குனர் கோதார் இயக்கிய “பிரத்லெஸ்” திரைப்படம் எப்படி உருவானது என்பதைப் பற்றிய படம் Cahiers du Cinema இதழில் சினிமா விமர்சனங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்த கோதார் எப்படித் திரைப்பட இயக்குநராக உருவானார் என்பதைப் படம் விவரிக்கிறது. “All you need to make a movie is a girl and a gun” என்கிறார் கோதார். …

துப்பாக்கியும் பெண்ணும் Read More »

மனசாட்சியின் உதயம்

அம்ரும் திரைப்படத்தில் ஹில்லே என்ற பெண் ஹிட்லர் இறந்த சேதியை ரேடியோவில் கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைகிறாள். கர்ப்பிணியான அவள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கி எதையும் சாப்பிட மறுக்கிறாள். தங்களைக் காக்க வந்த கடவுளான ஹிட்லர் எப்படி இறந்து போவார் எனப்புலம்புகிறாள். அவர் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போரைத் தொடர வேண்டும் என்கிறாள். ஆனால் அதே வீட்டிலுள்ள அத்தை ஈனா ஹிட்லரின் புகைப்படத்தை அடுப்பிலிட்டு எரித்து இனி நாம் விடுதலை அடைந்தோம் என்கிறாள். இந்த இருவருக்கும் …

மனசாட்சியின் உதயம் Read More »

கடல் காணாத சிறுவர்கள்

1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார். ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக …

கடல் காணாத சிறுவர்கள் Read More »

மகிழ்ச்சியின் திறவுகோல்.

மசாகி கோபயாஷி இயக்கிய பியூட்டிஃபுல் டேஸ் திரைப்படத்தில் மலர்களை விற்பனை செய்யும் வயதான பெண்ணிற்கும் ஓய்வு பெற்ற தொழிலதிபரான ஷிகாகிக்கும் இடையில் உருவாகும் நட்பு மிக அழகாக விவரிக்கபட்டுள்ளது. ஓசுவின் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. படத்தின் மையக்கதை இவர்களைச் சுற்றி நடக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியை உருவாக்கும் திறவுகோல்கள். முதியவர்களான இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும், மழையில் நனைந்து கொண்டு வரும் முதியவரின் விளையாட்டுதனமான பேச்சு. …

மகிழ்ச்சியின் திறவுகோல். Read More »