சினிமா

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது

“A River Runs Through It” ராபர்ட் ரெட்போர்ட் இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம், 1992ல் வெளியானது, fly-fishing  எனும் மீன்பிடித்தலை முதன்மையாக கொண்டது, நார்மன் மெகலின் நாவலை ஒரு வாசகம் மாறாமல் படமாக்கியிருக்கிறார் ராபர்ட் ரெட்போர்ட், இவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர், இயக்குனராக இவர் உருவாக்கிய படங்கள் அத்தனையும் தனித்துவமிக்கவை, இப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் பரிசு பெற்றது. இந்த நாவலை எழுதும் போது மெகலினுக்கு வயது எழுபது, ஆங்கிலப்பேராசிரியரான அவர் தனது பால்யகால நினைவுகளை …

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது Read More »

குழந்தைகள் சினிமா

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது,  பொதுவாக  வெகுஜனத் திரைப்படங்களில் இடம் பெறும் குழந்தைகள் இரண்டுவிதமானவர்கள், ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப் பேசுகிறவர்கள், அர்த்தமற்றபடி பாட்டுபாடி ஆடுகின்றவர்கள், மற்றவர்கள் கைவிடப்பட்ட அநாதைகள்,  ஏழ்மையில் உழலும் பரிதாபமானவர்கள், ஒடிப்போனாவர்கள், குடும்ப பாரம் சுமப்பவர்கள், அவர்களின் கஷ்டமும் கண்ணீரும் வணிக திரைப்படங்களின் வியாபார உத்திக்கு சுவைகூட்டவே பயன்பட்டிருக்கிறது, டெம்பிளட் எனப்படும் வகைமாதிரிக்கு உட்பட்டே குழந்தைகள் திரைப்படங்களில் இடம் …

குழந்தைகள் சினிமா Read More »

காதலின் நிழல்கள்

நான் குருதத்தின் ரசிகன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது படங்களைத் திரும்பப் பார்க்க பிடிக்கும், Kaagaz Ke Phool எனக்கு மிகவும் விருப்பமான படம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியுற்ற இந்தப் படம், இந்திய சினிமாவின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக பலராலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, குருதத்தின் மாஸ்டர் பீஸ் இதுவே. குருதத் படங்களின் அடிநாதம் காதலின் துயரம், உணர்ச்சிகளின் கொந்தளிப்பை குருதத் காட்சிப்படுத்தும் விதம் மிகவும் கவித்துவமானது, வி.கே.மூர்த்தி என்ற அற்புதமான ஒளிப்பதிவாளர் குருதத் படங்களுக்கு எனத் …

காதலின் நிழல்கள் Read More »

செம்மீன்

நேற்று திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த போது கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மதுவைச் சந்தித்தேன், தனியே அமர்ந்து வார இதழ் ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது புன்சிரிப்புடன் தமிழ் மக்கள் எனது படங்களை நேசிக்கிறார்களா எனக்கேட்டார்,  செம்மீனைப் பிடிக்கும் என்று சொன்னேன், செம்மீன் ஒரு நல்ல படம் என்று சொல்லிவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டார், பிறகு வேடிக்கையான குரலில் சொன்னார், அது கருத்தம்மாவின் படம், ஷீலாவைத் தமிழ் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, …

செம்மீன் Read More »

பாலாவின் பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல் நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி, தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல …

பாலாவின் பரதேசி Read More »

ஒஹெரு வாழ்கிறாள்

இதிகாசங்களின் தனித்தன்மை உணர்ச்சிகளைக் கையாளும் முறையாகும், குறிப்பாக பிரிவை, மரணத்தை, நிர்கதியை, பெருங்கோபத்தை, அதனால் ஏற்படும் மனக்கொந்தளிப்புகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும்  குரலை உயர்த்தாமல் ஆழமாக மனதில் உணர்த்துவதாகும். மகாபாரதமும் ராமாயணமும் இதில் பெரும் சாதனையைப் புரிந்திருக்கின்றன, அதனால் தான் நூற்றாண்டுகளாக அவை மீள்வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன, அத்தோடு காவியநிகழ்வுகளைக் குறித்து  புதிய கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளியாகி வருவதும் இதன்பொருட்டே, மகாகவி பாஷனின் சமஸ்கிருத நாடகமான உறுபங்கம் (Urubhangam )துரியோதனனைப் பற்றிய பொதுப்பிம்பத்தை மாற்றியமைக்க கூடியது. இதிகாசம் காட்டும் …

ஒஹெரு வாழ்கிறாள் Read More »

கடவுளின் செய்தி

இந்த உலகிற்கு கடவுள் அவ்வப்போது ஏதாவது செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார், அந்தச்  செய்தி, யார் வழியாக, எப்படி வருகிறது என்பதைக் கண்டு கொள்வது கடினமானது என்று ஆப்ரிக்க மக்கள் நம்புகிறார்கள் ஒரு பெண் சிங்கத்திற்கும் மான்குட்டிக்கும் இடையில் உருவான பாசத்தைப் பற்றிய  Heart of lioness என்ற அனிமல் பிளானெட்டின் ஆவணப்படத்தில் கென்யாவை சேர்ந்த ஒரு பழங்குடி மனிதன் பெண்சிங்கம் மான்குட்டியை தனது பிள்ளையைப் போல நேசிப்பது என்பது  கடவுள் இந்த உலகிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியே …

கடவுளின் செய்தி Read More »

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம் சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார். கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, …

கன்பூசியஸ் Read More »

பூவண்ணம் போல நெஞ்சம்

அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது. ஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல …

பூவண்ணம் போல நெஞ்சம் Read More »

யுத்தகால ரயில்

ரயில் பயணத்தைக்  கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133 நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று …

யுத்தகால ரயில் Read More »