சினிமா

கல்கத்தாவில் ஒரு அகதி

ரித்விக் கட்டக்கின் முதல் படம் நாகரிக், (Nagarik -The Citizen) . 1952ஆம் ஆண்டு நாகரிக் தயாரிக்கப்பட்டது. ஆனால் 1977ல் தான் வெளிவந்தது, அப்போது ரித்விக் உயிருடனில்லை. காணமல் போன நாகரிக் படத்தின் மூலப்பிரதி 1977ல் தற்செயலாகக் கிடைத்து அரங்குகளில் வெளியானது, படம் மிக மெதுவாக இருந்த காரணத்தால்  மக்களிடையே பெரிய வரவேற்பு பெறவில்லை, தனது முதல்படம் வெளியானதை ரித்விக் கட்டக்  காணவேயில்லை,. ஒருவேளை இப்படம் பதேர்பாஞ்சாலிக்கு முன்பாக வெளியாகி இருந்தால் இதுவே இந்திய மாற்றுசினிமாவின் முதல்படமாக …

கல்கத்தாவில் ஒரு அகதி Read More »

பெயரில்லா பழங்கள்

‘பதேர் பாஞ்சாலி’ படம் கொய்யாப்பழம் பறித்த சிறுமி துர்காவை நோக்கி ஷிஜோபாபு சத்தமிடுவதிலிருந்து தான் . துவங்குகிறது, சிறுவர்கள் பழம் திருடுவதை குற்றம் என யாரும் சொல்லிவிட முடியாது, அது ஒரு வேடிக்கை, விளையாட்டு, ஆனால் துர்கா கொய்யபழத்தைத் திருடியது இழந்து  போன தங்கள் உரிமையை மீட்பதாகவே ஷிஜோபாபு நினைக்கிறாள், அதனால் தான் அவள் கூச்சலிடுகிறாள் உண்மையில் ஹரிஹரின் குடும்பத்துக்குச் சொந்தமாக கொய்யாமரங்களும் மாமரங்களும் தென்னைகளும் கொண்ட ஒரு தோப்பு இருந்தது. அது முன்னூறு  ரூபாய் கடன் …

பெயரில்லா பழங்கள் Read More »

டபுலிஸ்தான்

Vive la France  என்ற பிரெஞ்சு படத்தை நேற்றிரவு பார்த்தேன்,  மிகச்சிறந்த நகைச்சுவைபடமிது, Taboulistan என்றொரு கற்பனையான நாடு, உலக நாடுகள் யாரும் தன்னைக் கண்டுகொள்ளவேயில்லை, தங்களின் பாராம்பரிய Tabbouleh  உணவு  பற்றி ஒருவரும் அறிந்திரு க்கவில்லை, அதை லெபனான் உணவு என தவறாக கூறுகிறார்கள்  என அந்த நாட்டு சர்வாதிகாரிக்குப் பெரிய ஆதங்கம், அதனால்  உலகின் கவனத்தை ஈர்க்க commercial terrorism என்ற முறையைக் கையாள முடிவு செய்கிறார் அதாவது ஒரு தற்கொலைப் படையை அனுப்பி …

டபுலிஸ்தான் Read More »

வானவில் போராளிகள்

திருப்பூர் சென்றிருந்த போது நண்பர்கள் முரளிகுமார் மற்றும்  ரவிக்குமாருடன் பேசிக் கொண்டிருந்தேன், அப்போது ‘Warriors of the Rainbow: Seediq Bale’  என்ற திரைப்படம் பற்றி தெரிவித்தார்கள், இரண்டுநாட்களுக்குப் முன்பாக ஐந்துமணி நேரங்கள் ஒடக்கூடிய அதன் இரண்டுபாகங்களையும் முழுமையாகப் பார்த்து முடித்தேன், சமீபத்தில் நான் பார்த்த உலகத்திரைப்படங்களில் மிகச்சிறந்தபடம் இதுவே, சினிமாவின் வலிமை எத்தகையது என்பதை நிருபணம் செய்யும் அரிய சாதனையிது, சில ஆண்டுகளுக்கு முன்பாக  ஹாங்காங்கைச் சேர்ந்த இயக்குனர் John Woo இயக்கிய Red cliff …

வானவில் போராளிகள் Read More »

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது

“A River Runs Through It” ராபர்ட் ரெட்போர்ட் இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம், 1992ல் வெளியானது, fly-fishing  எனும் மீன்பிடித்தலை முதன்மையாக கொண்டது, நார்மன் மெகலின் நாவலை ஒரு வாசகம் மாறாமல் படமாக்கியிருக்கிறார் ராபர்ட் ரெட்போர்ட், இவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர், இயக்குனராக இவர் உருவாக்கிய படங்கள் அத்தனையும் தனித்துவமிக்கவை, இப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் பரிசு பெற்றது. இந்த நாவலை எழுதும் போது மெகலினுக்கு வயது எழுபது, ஆங்கிலப்பேராசிரியரான அவர் தனது பால்யகால நினைவுகளை …

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது Read More »

குழந்தைகள் சினிமா

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது,  பொதுவாக  வெகுஜனத் திரைப்படங்களில் இடம் பெறும் குழந்தைகள் இரண்டுவிதமானவர்கள், ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப் பேசுகிறவர்கள், அர்த்தமற்றபடி பாட்டுபாடி ஆடுகின்றவர்கள், மற்றவர்கள் கைவிடப்பட்ட அநாதைகள்,  ஏழ்மையில் உழலும் பரிதாபமானவர்கள், ஒடிப்போனாவர்கள், குடும்ப பாரம் சுமப்பவர்கள், அவர்களின் கஷ்டமும் கண்ணீரும் வணிக திரைப்படங்களின் வியாபார உத்திக்கு சுவைகூட்டவே பயன்பட்டிருக்கிறது, டெம்பிளட் எனப்படும் வகைமாதிரிக்கு உட்பட்டே குழந்தைகள் திரைப்படங்களில் இடம் …

குழந்தைகள் சினிமா Read More »

காதலின் நிழல்கள்

நான் குருதத்தின் ரசிகன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது படங்களைத் திரும்பப் பார்க்க பிடிக்கும், Kaagaz Ke Phool எனக்கு மிகவும் விருப்பமான படம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியுற்ற இந்தப் படம், இந்திய சினிமாவின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக பலராலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, குருதத்தின் மாஸ்டர் பீஸ் இதுவே. குருதத் படங்களின் அடிநாதம் காதலின் துயரம், உணர்ச்சிகளின் கொந்தளிப்பை குருதத் காட்சிப்படுத்தும் விதம் மிகவும் கவித்துவமானது, வி.கே.மூர்த்தி என்ற அற்புதமான ஒளிப்பதிவாளர் குருதத் படங்களுக்கு எனத் …

காதலின் நிழல்கள் Read More »

செம்மீன்

நேற்று திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த போது கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மதுவைச் சந்தித்தேன், தனியே அமர்ந்து வார இதழ் ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது புன்சிரிப்புடன் தமிழ் மக்கள் எனது படங்களை நேசிக்கிறார்களா எனக்கேட்டார்,  செம்மீனைப் பிடிக்கும் என்று சொன்னேன், செம்மீன் ஒரு நல்ல படம் என்று சொல்லிவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டார், பிறகு வேடிக்கையான குரலில் சொன்னார், அது கருத்தம்மாவின் படம், ஷீலாவைத் தமிழ் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, …

செம்மீன் Read More »

பாலாவின் பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல் நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி, தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல …

பாலாவின் பரதேசி Read More »

ஒஹெரு வாழ்கிறாள்

இதிகாசங்களின் தனித்தன்மை உணர்ச்சிகளைக் கையாளும் முறையாகும், குறிப்பாக பிரிவை, மரணத்தை, நிர்கதியை, பெருங்கோபத்தை, அதனால் ஏற்படும் மனக்கொந்தளிப்புகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும்  குரலை உயர்த்தாமல் ஆழமாக மனதில் உணர்த்துவதாகும். மகாபாரதமும் ராமாயணமும் இதில் பெரும் சாதனையைப் புரிந்திருக்கின்றன, அதனால் தான் நூற்றாண்டுகளாக அவை மீள்வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன, அத்தோடு காவியநிகழ்வுகளைக் குறித்து  புதிய கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளியாகி வருவதும் இதன்பொருட்டே, மகாகவி பாஷனின் சமஸ்கிருத நாடகமான உறுபங்கம் (Urubhangam )துரியோதனனைப் பற்றிய பொதுப்பிம்பத்தை மாற்றியமைக்க கூடியது. இதிகாசம் காட்டும் …

ஒஹெரு வாழ்கிறாள் Read More »