அனுபவம்

சென்னையில் விமானம்

மதராஸில் விமானம் அறிமுகமான நாட்களில் எழுதப்பட்ட பதிவுகள் •• சென்னையில் ஆகாய யாத்திரை இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக் கூட்டின் துணையினாலே வரும் போது அதை விட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக் கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200 அடி உயர மட்டுந்தான் ஏறினார். இவர் இறங்கி …

சென்னையில் விமானம் Read More »

கறுப்பு வெள்ளை புத்தகங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ராகவ் என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது அவரது பத்துவயதான மகள் ஸ்வேதா என்னிடம் கேட்டாள் “ஏன் அங்கிள் பெரியவங்க படிக்கிற புக் எல்லாம் பிளாக் அண்ட் வொயிட்டில் இருக்கிறது.“ அது தானே. ஏன் பெரியவர்கள் படிக்கும் நாவல், கதை, கவிதைத் தொகுப்பு எதுவும் வண்ணத்தில் இல்லையே. அச்சுத் தொழிலைப் பொறுத்தவரை இன்றும் புத்தகங்களின் அட்டை மட்டுமே வண்ணத்தில் அச்சிடப்படுகிறது. சில நேரம் புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் பாதி அளவு …

கறுப்பு வெள்ளை புத்தகங்கள். Read More »

பர்மா வழிநடைப்பயணம்.

தொலைக்காட்சியில் பராசக்தி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் பர்மாவிலிருந்து அகதியாக வந்தவர்களுக்கான முகாமில் பதிவு செய்வதற்காக எஸ்.எஸ்.ஆர் காத்துக் கொண்டிருப்பார். அவருக்கு முன்பாக இரண்டு பேர்களின் ஊர் விபரங்கள் பதிவு செய்வதைக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விபரமும் தெரியாது. சிபாரிசின் பெயரில் ஒருவரை முகாமில் சேர்த்துக் கொள்கிறான் முகாம் பொறுப்பாளர். ஊன்று கோலுடன் நிற்கும் எஸ். எஸ். ஆருக்கு முகாமில் இடமில்லை என்று விரட்டியடிப்பார் பொறுப்பாளர். அதற்கு எஸ்.எஸ். ஆர் உயிர் தப்பி நடந்தே பர்மாவிலிருந்து …

பர்மா வழிநடைப்பயணம். Read More »

மாணிக்க மூக்குத்தி

இன்று காலையிலிருந்து மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்.. என்ற திரைப்படப் பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். சில பாடல்கள் அப்படித் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும். எதனால் என்று விளக்க முடியாது. பாடலின் வழியே மனது எதையெதையோ நினைவு கொள்கிறது. இயக்குநர் பி. மாதவன் இயக்கி தயாரித்த படம் “முகூர்த்த நாள். அப்படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடலை எழுதியிருக்கிறார். பி. சுசீலா அற்புதமாகப் பாடியிருக்கிறார். பாடலைத் தனியே கேட்கையில் …

மாணிக்க மூக்குத்தி Read More »

ஆவியின் பாடல்

டிசம்பர் இசைக்கச்சேரிகளில் எனக்குப் பிடித்தமான சில கச்சேரிகளுக்குச் செல்வது வழக்கம். என் மனைவி பெரும்பான்மை கச்சேரிகளுக்குப் போய் விடுவார். நாங்கள் நேற்று அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரி கேட்பதற்காகக் காமராஜர் அரங்கம் சென்றிருந்தோம். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி அங்கே நடைபெறுகிறது. அரங்கினுள் நுழைய முடியாதபடி பெருந்திரளான கூட்டம். முன்பதிவு செய்திருந்த இருக்கைக்குப் போக முடியவில்லை. ஒரே தள்ளுமுள்ளு. நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமண் ஸ்ருதியினர் ஒழுங்காக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நுழைவாயிலில் நின்ற காவலர்கள் ஆட்களைப் பிடித்துத் தள்ளிவிடவே …

ஆவியின் பாடல் Read More »

சென்னையின் சிறிய புத்தகக் கடை

சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகிலுள்ள Taj Connemara விடுதியினுள் Giggles Bookshop என்றொரு சிறிய புத்தகக் கடை இருந்தது. மிகச்சிறிய புத்தகக் கடை ஆனால் அரிய நூல்கள் அங்கே கிடைக்கும். அக் கடையை நடத்தியவர் நளினி செட்டூர். அவர் ஒரு தீவிர இலக்கிய வாசகர். புத்தகக் கடையில் எந்தப் புத்தகம் எங்கேயிருக்கிறது என அவருக்கு மட்டும் தான் தெரியும். 1998ல் அந்தக் கடைக்கு முதன்முறையாகச் சென்றேன். அதன்பிறகு பலமுறை சென்றிருக்கிறேன். தற்போது அக்கடை நடைபெறவில்லை. நிர்வாகத்தினர் …

சென்னையின் சிறிய புத்தகக் கடை Read More »

கர்நாடகப் பயணம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று.    காபித்தோட்டத்தின்  நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது.  பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும்  பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன்.  சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய …

கர்நாடகப் பயணம் Read More »

வாசிப்பின் நுழைவாயில்.

அனைவருக்கும் இனிய புத்தக  தின நாள் வாழ்த்துகள் புத்தக வாசிப்பு குறித்த கவனமும் செயல்பாடுகளும் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் தீவிரமாக நடந்து வருகின்றன. வாசகசாலை போன்ற அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணம். அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது மனம் நிரம்பிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள மாவட்ட நூலகங்கள் அத்தனையிலும் வாசகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று புத்தக வாசிப்பு ஒரு இயக்கமாகச் …

வாசிப்பின் நுழைவாயில். Read More »

வசந்தத்தில் ஓர் நாள்

திடீரென சில நாட்கள் காலையில் மனதில் ஒரு பாட்டு ஒடத்துவங்கிவிடுகிறது. அதை உடனடியாகக் கேட்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. அப்படி இன்று காலை, வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் மனதில் ஒடி மறைந்தது. அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினேன். பாட்டு முடிந்து போகக்கூடாது என்பது போன்ற மனநிலை உருவானது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அது எனது வழக்கம். சில நாட்கள் ஒரே பாடலை நாற்பது ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள் மறைந்து. …

வசந்தத்தில் ஓர் நாள் Read More »

அசோகன் சருவிலோடு ஒரு நாள்

மலையாளச் சிறுகதையுலகில் மிக முக்கிய எழுத்தாளர் அசோகன் சருவில். இவரது இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை தொகுப்பு தமிழில் வம்சி வெளியீடாக வந்துள்ளது. சுகானா மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் சென்றவாரம் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலிற்கான விருதைப் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த போது அசோகன் சருவில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிறந்த பண்பாளர். எளிமையானவர். சருவிலின் கதைகள் எளிய மனிதர்களின் துயரங்களைப் பேசுபவை. வடிவ உத்திகளை விடவும் வாழ்வின் …

அசோகன் சருவிலோடு ஒரு நாள் Read More »