அறிவிப்பு

தஸ்தாயெவ்ஸ்கி : மூன்று நாடகங்கள்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இதுவரை மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன். மூன்றும் அரங்கில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகம் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்ககூடியது ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ் தனது குழுவினர்களுடன் இதனை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்திக்காட்டினார். சிறப்பான வரவேற்பைப் பெற்றது. •• தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்பது அவருக்கும் அன்னாவிற்குமான காதலை மையமாகக் கொண்டது இந்த நாடகம் மூன்று முறை மேடையேற்றப்பட்டுள்ளது. •• மரணவீட்டின் குறிப்புகள் தஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையிலிருந்த அனுபவங்களை மையமாகக் கொண்டது. …

தஸ்தாயெவ்ஸ்கி : மூன்று நாடகங்கள் Read More »

ஹரியின் குறும்படம்

எனது மகன் ஹரிபிரசாத் புதிய குறும்படம் ஒன்றை இயக்குகிறான். இதற்கு முன்பாக இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளான். அதில் மைடியர் செகாவ் என்ற குறும்படம் திரைப்படவிழாக்களில் பரிசு பெற்றுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் ஐந்து ஆண்டுகள் மீடியா சயின்ஸ் பயின்றுள்ள ஹரிபிரசாத் தற்போது WHITE KNIGHTS என்ற CREATIVE AGENCY நடத்திவருகிறான்.

அரிய புகைப்படம்

தெலுங்கு எழுத்தாளர் புச்சிபாபு பற்றிய புகைப்படத்தொகுப்பில்1947ல் அவர் ஏற்பாடு செய்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது எடுக்கபட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரங்களின் அரிய புகைப்படம். ரேடியோ நிலையத்தில் எடுக்கபட்டது போலிருக்கிறது எவ்வளவு அழகான முகங்கள். எத்தனை விதமான பார்வைகள்.  எழுதப்படாத கதைகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

இரண்டு பார்வைகள்

சமீபத்தில் வெளியான எனது சிறுகதைகள் முகமது அலியின் கையெழுத்து, இரவுக்காவலாளியின் தனிமை குறித்து வெளியான விமர்சனக்குறிப்புகள் ••• முகமது அலியின் கையெழுத்து கோ.புண்ணியவான் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனது சிறுகதை குறித்து எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு) •• வாசிப்பின்பத்தை நல்கிய நல்ல சிறுகதை. முகம்மது அலியின் கையெழுத்து. உள்ளபடியே பிழைப்புவாதிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றியே கவலைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கழித்துவிடுவார்கள்.. கலையின் மகத்துவம் பற்றியோ ரசிகர்களை ஆர்வத்தோடு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றியோ சராசரி மனிதர்களுக்கு …

இரண்டு பார்வைகள் Read More »

உலகப் புத்தக தினம்.

உலகப் புத்தக தினவிழாவினை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொதுநூலகம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் பதினெட்டு நூலகங்களில் கூட்டங்கள் நடத்துகிறார்கள். இதில் நூறு பேர் உரையாற்றுகிறார்கள். புத்தக தினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது பாராட்டிற்குரியது. நூலகங்களைப் பண்பாட்டு மையங்களாக மாற்றும் இந்தச் செயல்பாடு முன்னோடியானது. சென்னை தேவநேய பாவாணர் மாவட்ட மையநூலகத்தில் முழு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது இதில் நான் கலந்து கொண்டு உலகின் முதற்புத்தகம் என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றுகிறேன். நேரம் …

உலகப் புத்தக தினம். Read More »

டாக்டர் ஷிவாகோ

போரிஸ் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவரது புகழ்பெற்ற நாவலான டாக்டர் ஷிவாகோ டேவிட் லீனால் படமாக்கபட்டு ஐந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது. போரிஸ் பாஸ்டர்நாக்கின் வாழ்க்கை மற்றும் ஷிவாகோ நாவலுக்குப் பின்னுள்ள உண்மைகளை விளக்கும் விதமாகப் பிபிசி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. The Real Doctor Zhivago என்ற இந்த ஆவணப்படம் அவரது கால அரசியல் மற்றும் இலக்கியச் சூழலை தெளிவாக விளக்குகிறது

சாந்தி சிவராமன்

சாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது சஞ்சாரம் நாவலை வாசித்த சாந்தி சிவராமன் தனக்கு மிகவும் பிடித்துப்போகவே அதை முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டார்.  எனது தொடர்பு கிடைக்காத காரணத்தால் தகவலைத் தெரிவிக்க இயலவில்லை. இவரது மகன் சத்யா சிவராமன் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். சாந்தி சிவராமன் முன்னதாக அசோகமித்ரனின் இன்று, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார். 2016 …

சாந்தி சிவராமன் Read More »

நன்றி

எனது பிறந்தநாளுக்கு மின்னஞ்சல் மூலமும் நேரிலும் குறுஞ்செய்திகள் மூலமும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனது ஆடிட்டர் சந்திரசேகர் பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்து பிறந்தநாளைக் கொண்டாடச் செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும் எனது பிறந்த நாளை பெரிய கொண்டாட்டமாக்கிய தூத்துக்குடி மாரியப்பன். ஜெயபால், அருண்பிரசாத் உள்ளிட்ட நண்பர்களுக்கும், நிலக்கோட்டை மாணிக்கம் நகைமாளிகை ஸ்ரீதர், எழில் உணவகம் சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது தீராத நன்றிகள்.