அறிவிப்பு

எஸ்.ரா நூல்கள் 100

எனது நூறு நூல்கள் குறித்து இணையத்தில் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் தமிழ் பேராசிரியர் முனைவர். சு.வினோத். அவருக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும். அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் மூலம் இந்த இணைய வழி நிகழ்வு நடைபெறுகிறது. நாளைக் காலை பத்துமணிக்கு அதன் முதல் நிகழ்வு துவங்குகிறது. அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். நிகழ்ச்சி விபரம் எஸ்.ரா நூல்கள் 100Vinod S is inviting you to a scheduled Zoom meeting. …

எஸ்.ரா நூல்கள் 100 Read More »

ஆனந்த விகடனில்

இந்த வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. வெ.நீலகண்டன் இந்த நேர்காணலை எடுத்துள்ளார் நன்றி ஆனந்தவிகடன் வெ.நீலகண்டன் புகைப்படம் : ராகேஷ்

நெதர்லாந்திலிருந்து ஒரு பரிசு

எனது பிறந்த நாளுக்காக நெதர்லாந்தில் வசிக்கும் நண்பர் சரவணன் வான்கோ அருங்காட்சியகத்தில் கிடைக்கும் Van Gogh – The Potato Eaters 3D Print வாங்கி அனுப்பியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த ஓவியமது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன். காலம் இதழில் வெளியாகியுள்ளது முப்பரிமாணத்தில் அந்த வீடும் மனிதர்களும் அசைவதைக் காணும் போது அந்த வீட்டிற்குள் நாமிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. . சரவணனுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

தூத்துக்குடியில்

எனது பிறந்தநாளை முன்னிட்டுத் தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் நண்பர் பொன். மாரியப்பன் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலைத் தபால் ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார் நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர் R.ஜெயபால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் H சாய் ராமன் , சுங்க இலாகா அதிகாரி அசோ குமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள் பொன்.மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால் மற்றும் நூலக …

தூத்துக்குடியில் Read More »

நாவல்வாசிகள் /2

எனது புதிய பத்தியான நாவல்வாசிகளில் புகழ்பெற்ற வங்க நாவலான நீலகண்டப் பறவையைத் தேடி குறித்து எழுதியிருக்கிறேன்.

பிறந்தநாள் விழா/ புகைப்படங்கள்

நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற எனது பிறந்த நாள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. நிறைய நண்பர்கள், வாசகர்கள் வந்திருந்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி

நேர்காணல்

இந்து தமிழ் திசை இதழில் நேற்று வெளியான எனது நேர்காணல் நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ் மண்குதிரை.

நன்றி

பாரதிய பாஷா விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பும் ஆசியும் தான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. இந்தத் தருணத்தில் எனது பெற்றோர்கள், மனைவி பிள்ளைகள், ஆசிரியர்கள். சகோதர சகோதரிகள், நண்பர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். உங்களின் குவிந்த கரங்கள் தான் எனது எழுத்தெனும் சுடரைப் பாதுகாக்கிறது. விருதுச் செய்தியைச் சிறப்பாக வெளியிட்டு என்னைக் கௌரவப்படுத்திய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், மற்றும் …

நன்றி Read More »

முதல்வரின் வாழ்த்துச் செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி •• தமிழக முதல்வரின் அன்பான வாழ்த்துக்கு எனது மனம் நிறைந்த நன்றி.