அறிவிப்பு

ஹைதராபாத் நிகழ்ச்சி

எனது யாமம் நாவலின் தெலுங்கு மொழியாக்க நூல் ஹைதராபாத்தில் வெளியிடப்படவுள்ளது. பாலா புகஸ் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜுலை 26 மாலை பிரஸ் கிளப்பில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் பால சாகித்ய சம்மேளனம் நிகழ்வில் நூல் குறித்த அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் மொழிபெயர்ப்பாளர் ஜிலேல பாலாஜி மற்றும் தெலுங்கின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

கோவை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 17 முதல் 26 வரை கோவை கொடிசியா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்க எண் 267 மற்றும் 268 ஜுலை 22 முதல் 26 வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள். வாசகர்கள் புத்தகத் திருவிழாவில் உள்ள தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம். ஜுலை 25 சனிக்கிழமை மாலை “ஒளிரும் வார்த்தைகள்“ என்ற தலைப்பில் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்

அஞ்சலி

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வெக்கை, பிறகு. அஞ்ஞாடி, ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறந்த படைப்புகளை தந்த தனித்துவமிக்க படைப்பாளி. நீண்ட கால நண்பர். கோவில்பட்டியில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பூமணிமகாபாரதம் குறித்த நாவலை எழுதும் முயற்சியில் இருந்த நாட்களில் என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மக்கள் மொழியில் மகாபாரதம் எழுதப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார். அந்த ஆசையின் வடிவமே அவரது கொம்மை நாவல். பூமணியின் மறைவு துயரமளிக்கிறது.

கதைப்பயணி 4

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் கதைப்பயணியின் நான்காவது பகுதி வெளியாகியுள்ளது

முரகாமியின் நிழல்

‘ ட்ரீமிங் முரகாமி’ ஆவணப்படம் ஜப்பானிய எழுத்தாளரான முரகாமியின் டேனிஷ் மொழிபெயர்ப்பாளர் மெட்டே ஹோமின் பணியை ஆவணப்படுத்தியுள்ளது. முரகாமியின் வாசகராக அறிமுகமாகி அவரது எழுத்துகளை மட்டுமே மொழியாக்கம் செய்யும் மெட்டே ஹோம் தனது மொழியாக்கப் பணிக்காக ஜப்பானின் உயரிய விருதைப் பெற்றிருக்கிறார். இந்த ஆவணப்படம் ஹோம் எப்படி மொழியாக்கம் செய்கிறார். அதில் அவர் சந்திக்கும் சவால்கள் எவை என்பதைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. சுயமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்ட மெட்டே ஹோம் சில ஆண்டுகள் ஜப்பானில் …

முரகாமியின் நிழல் Read More »

கதைப்பயணி / 3

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் தயாரிக்கப்படும் கதைப்பயணியின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. இந்த காணொளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி

எழுத்தெனும் திசைகாட்டி

காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன் வாசிப்பனுபவம் . கடையாணியார் சீ.நே.பி அப்பாவிற்கும் மகனுக்குமான புரிந்து கொள்ள முடியாத மன வேறுபாடுகள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றிதானே எழுப்பிக் கொள்ளும் பிம்பமும், அந்தப் பிம்பத்திற்கு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவன் தந்தையின் மனதில் இருப்பதையும், அதை உடைக்க அவன் படும் பாட்டினையும் மன உளவியலாகவே இதில் விளக்கியுள்ளார். ( காஃப்கா தன் அப்பாவிற்காக எழுதி ஆனால் …

எழுத்தெனும் திசைகாட்டி Read More »