அறிவிப்பு

படைப்பு சங்கமம் விருது

சிறந்த நூல்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு ஆண்டு தோறும் படைப்பு குழுமம் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான படைப்பு சங்கமத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் விழா செப்டம்பர் 26 மாலை சென்னை அருங்காட்சியக கலையரங்கில் நடைபெறுகிறது

காரைக்குடி வாசகர் வட்ட நிகழ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து பலரும் நின்றபடியே உரையை கேட்டார்கள். திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் பிரம்மாண்டமாக உருவாக்கபட்டிருக்கிறது. மூன்று தளங்கள். இரண்டு லட்சம் புத்தகங்கள் வைத்துக் கொள்ளும்படியான இடம். வாசிப்பதற்கு ஏற்ற இருக்கைகள். நிறைய நூல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூலகதின் இணையதளம், மின்நூலாக்கம் மற்றும் அரிய நூல்களை ஆவணப்படுத்தும் நிகழ்வை ப.சிதம்பரம் அவர்கள் துவக்கி வைத்தார். வாசகர் வட்ட …

காரைக்குடி வாசகர் வட்ட நிகழ்வு Read More »

காரைக்குடியில்

நாளை 28.8.26 காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தில் உரையாற்றுகிறேன். மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளார். நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம். அன்புடன் அழைக்கிறேன்

காரைக்குடியில்

காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தினுள் அமைந்துள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இந்த நூலகத்தை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக உருவாக்கியுள்ளார். ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது மாணவர்கள் மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து கொள்ளலாம்.

தமிழன் விருது

புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் தமிழன் விருது எனக்கு வழங்கப்பட்டது. இலக்கியப் பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்காக என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. எனது ஆசான் எஸ்.ஏ. பெருமாள் மற்றும் புதிய தலைமுறை சேர்மன் சத்யநாராயணா இருவரும் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கினார்கள். நிகழ்வில் கலந்து கொள்ள உறுதுணை செய்த கார்மல், பரிசல் கிருஷ்ணா, நந்தினி உள்ளிட்ட அனைவருக்கும் மனம் …

தமிழன் விருது Read More »

ஈரோடு புத்தகத் திருவிழாவில்

நேற்று மாலை ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்திருந்தது. பெரியசாமி தூரன் மற்றும் ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாவல்கள் குறித்தும், காந்தியரான ரொனால்டு டங்கன் பற்றிய அறிமுகத்தையும் உரையில் வழங்கினேன். மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் குணசேகரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்வில் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் சிறந்த பதிப்பாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.