அறிவிப்பு

புதுக்கோட்டை / விருது விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா மே 2ல் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி உரையாற்றுகிறேன்.

ஹாம்லெட்

ரஷ்ய இயக்குநர் Grigori Kozintsev இயக்கிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நிகரற்ற திரைப்படம். இப்படம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் யூடியூப்பில் சப் டைட்டிலுடன் காணக் கிடைக்கிறது. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. அரங்க அமைப்பு. தேர்ந்த நடிப்பு, இயக்கம் என இதுவரை வெளியான ஹாம்லெட் திரைப்படங்களில் இதுவே மிகச் சிறந்தது.

யாமம் / தெலுங்கில்

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகிறது. ஜில்லேல பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். பாலா புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள்.

வேர்ச்சொல் விழாவில்

நீலம் அமைப்பின் சார்பில் நடைபெறும் வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2026 விழாவில் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் 18 காலை நடைபெறும் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

நன்றி

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். படைப்பாளர்கள், திரைத்துறையினர், குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன். வாசு முருகவேல். வேடியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டிப் பிறந்த நாளைக் கொண்டாடினேன். தூத்துக்குடி சலூன் நூலகம் மாரியப்பன் பிறந்தநாளை முன்னிட்டு தனது நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்திருந்தார். வாழ்த்துச் சுவரொட்டிகள். வாசகர்களுக்கு …

நன்றி Read More »

அஞ்சலி

எனது அன்பிற்குரிய நண்பரும் எழுத்தாளருமான அரவிந்தன் இன்று காலமானார்.  25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நல்ல நட்பிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பாகக் கூட தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஞாயிற்றுகிழமை சந்திப்போம் என்றார். அவரது மரணம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. காலச்சுவடு நிறுவனத்தில் பதிப்பாசிரியராக பணியாற்றியவர் இன்று முற்பகல் நாகர்கோவிலில் மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தினார். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெர்மன் மொழியாக்கம்

தமிழின் சிறந்த 16 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஜெர்மன் மொழியில் Meereswellen und andere Geschichten எனத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். ஹேம் மகேஷ் மற்றும் சேரலாதன் இதன் மொழிபெயர்ப்பாளர்கள். கிறிஸ்டியன் வெயிஸ் இதன் வெளியீட்டாளர். Draupadi Verlag பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சென்னை சர்வதேசப் புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தொகுப்பில் எனது சிறுகதை திருடனின் மூன்று அற்புதங்கள் இடம் பெற்றுள்ளது,

கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகளை ஆய்வாளர் பழ. அதியமான் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது. இதற்கான வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது, ஏப்ரல் 5 ஞாயிறு மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் விழா நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் குறித்து உரையாற்றுகிறேன்

தகழி

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளை குறித்து எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய ஆவணப்படம். சாகித்ய அகாதமி தயாரித்துள்ளது. எம்.டியின் குரலில் தகழியின் வாழ்வு விவரிக்கபடுகிறது. தகழியின் எழுத்தும் வாழ்வும் பற்றியதாக மட்டுமின்றி அன்றைய கேரளத்தின் சமூக நிலை, கல்வி பயிலும் முறைகள், பத்திரிக்கைகள், நீதிமன்றம். வழக்கறிஞர் வேலை என நூற்றாண்டின் சித்திரம் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.