அறிவிப்பு

தூத்துக்குடியில் ஒரு விழா

எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கான அறிமுகவிழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது தூய மரியன்னை கல்லூரியின் தமிழ்துறையும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். வாசிப்பு மன்ற பொறுப்பாளர் ரவி இதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். சலூன் நூலகம் மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், ஆ. மாரிமுத்து, ப.சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் ஆரோக்கியபுரம் தபால்காரர் காளிமுத்து கௌரவிக்கபட்டிருக்கிறார். நிகழ்வில் இருபது மாணவர்கள் தபால் பெட்டி எழுதிய கடிதம் …

தூத்துக்குடியில் ஒரு விழா Read More »

சென்னை இலக்கியத் திருவிழா 2025

சென்னை இலக்கியத் திருவிழா 2025 காஞ்சிபுரத்தில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மார்ச் 8 மதியம் 12.30 மணிக்கு கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு குறித்து உரையாற்றுகிறேன் காஞ்சிபுரம் அருகிலுள்ள நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த நெ.து.சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்தில் ஆரம்பக் கல்வி பயின்றவர். தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநராகவும் பொது நூலக இயக்குராகவும் பதவி வகித்தவர். காமராஜர் ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டதிற்கு முக்கிய காரணமாக விளங்கியவர். பெரியாரின் …

சென்னை இலக்கியத் திருவிழா 2025 Read More »

புதுக்கோட்டையில்

பிப்ரவரி 22 சனிக்கிழமை புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் மாரீஸ்வரி எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்

காமிக்ஸ் நூலகம்

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென்று சிறப்பு நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் காமிக்ஸ் நூலகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் காமிக் புத்தகங்களுடன் நான்கு தனிப்பட்ட கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவிலே காமிக்ஸ் புத்தகங்களுக்கென உருவாக்கபட்ட முதல் நூலகம் இதுவே. 1972ல் சிவகாசியில் சௌந்தபாண்டியன் அவர்கள் முத்துகாமிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். அவர்களின் முதல் வெளியீடு இரும்புக்கை மாயாவி. அது பெற்ற …

காமிக்ஸ் நூலகம் Read More »

தபால்துறை விழா/ புகைப்படங்கள்

நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற விழா சிறப்பாக நடந்தேறியது. அஞ்சல்துறை அதிகாரிகள், தபால்காரர்கள். தபால் நிலைய ஊழியர்கள், தபால்தலை சேமிப்பாளர்கள், ஊடக நண்பர்கள், என அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வை நன்றாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் அந்திமழை அசோகன் உள்ளிட்ட எனது விருப்பத்திற்குரிய இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது. தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலை தபால்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆகவே அவர்கள் இந்த நூலைப் பெற்றுக் …

தபால்துறை விழா/ புகைப்படங்கள் Read More »

தபால்துறை- சிறப்பு விழா

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் பற்றி நான் எழுதிய தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதற்பதிப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவிலே விற்றுத் தீர்ந்துவிட்டது. நிறைய விமர்சனப்பதிவுகளும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இந்நூல் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. இந்த நூலைக் கௌரவிக்கும் விதமாக தபால்துறை சிறப்பு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. பிப்ரவரி 6 வியாழன் காலை பத்துமணிக்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் 100 தபால்காரர்களுக்கு இந்த நூல் பரிசாக …

தபால்துறை- சிறப்பு விழா Read More »

தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு

சாகித்திய அகாதமி நடத்தும் தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு பிப்ரவரி 3 திங்கள்கிழமை காலை சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன அரங்கில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறேன்

காந்தியின் கடிதம்

இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, 1931 ஆகஸ்ட் 28 தேதியிட்டு இந்திய அரசின் உள்துறைச் செயலர் ஹெர்பர்ட் வில்லியம் எமர்சனுக்குக் காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது அவரது இடது கையால் எழுதப்பட்ட கடிதமாகும். இரண்டு கைகளாலும் காந்தியால் எழுத முடியும். இந்தக் கடிதம் இடது கையால் எழுதப்பட்டது என்ற தகவலை காந்தியே தெரிவிக்கிறார். இடது கையால் எழுதப்பட்ட போதும் எழுத்துக்கள் சரிவாகவோ, துண்டிக்கப்பட்டோ காணப்படவில்லை. வரிகளுக்கு இடையே சரியான இடைவெளியும் …

காந்தியின் கடிதம் Read More »