வேர்ச்சொல் விழாவில்
நீலம் அமைப்பின் சார்பில் நடைபெறும் வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2026 விழாவில் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் 18 காலை நடைபெறும் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நீலம் அமைப்பின் சார்பில் நடைபெறும் வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2026 விழாவில் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் 18 காலை நடைபெறும் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். படைப்பாளர்கள், திரைத்துறையினர், குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன். வாசு முருகவேல். வேடியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டிப் பிறந்த நாளைக் கொண்டாடினேன். தூத்துக்குடி சலூன் நூலகம் மாரியப்பன் பிறந்தநாளை முன்னிட்டு தனது நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்திருந்தார். வாழ்த்துச் சுவரொட்டிகள். வாசகர்களுக்கு …
ஏப்ரல் 5 மாலை சென்னையில் நடைபெற்ற கு.அழகிரிசாமி நாட்குறிப்புகள் வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை
எனது அன்பிற்குரிய நண்பரும் எழுத்தாளருமான அரவிந்தன் இன்று காலமானார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நல்ல நட்பிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பாகக் கூட தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஞாயிற்றுகிழமை சந்திப்போம் என்றார். அவரது மரணம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. காலச்சுவடு நிறுவனத்தில் பதிப்பாசிரியராக பணியாற்றியவர் இன்று முற்பகல் நாகர்கோவிலில் மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தினார். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் சிறந்த 16 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஜெர்மன் மொழியில் Meereswellen und andere Geschichten எனத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். ஹேம் மகேஷ் மற்றும் சேரலாதன் இதன் மொழிபெயர்ப்பாளர்கள். கிறிஸ்டியன் வெயிஸ் இதன் வெளியீட்டாளர். Draupadi Verlag பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சென்னை சர்வதேசப் புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தொகுப்பில் எனது சிறுகதை திருடனின் மூன்று அற்புதங்கள் இடம் பெற்றுள்ளது,
எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகளை ஆய்வாளர் பழ. அதியமான் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது. இதற்கான வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது, ஏப்ரல் 5 ஞாயிறு மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் விழா நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் குறித்து உரையாற்றுகிறேன்
மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளை குறித்து எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய ஆவணப்படம். சாகித்ய அகாதமி தயாரித்துள்ளது. எம்.டியின் குரலில் தகழியின் வாழ்வு விவரிக்கபடுகிறது. தகழியின் எழுத்தும் வாழ்வும் பற்றியதாக மட்டுமின்றி அன்றைய கேரளத்தின் சமூக நிலை, கல்வி பயிலும் முறைகள், பத்திரிக்கைகள், நீதிமன்றம். வழக்கறிஞர் வேலை என நூற்றாண்டின் சித்திரம் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
லெஃப்டர்: தி ஸ்டோரி ஆஃப் தி ஆர்டினேரியஸ் 2025 ல் வெளியான துருக்கி நாட்டுத் திரைப்படம். இப்படத்தை கேன் உல்கே இயக்கியுள்ளார். எர்டெம் கெய்னார்கா லெஃப்டராக நடித்துள்ளார். புகழ்பெற்ற துருக்கி கால்பந்தாட்ட வீரர் லெஃப்டரின் வாழ்க்கை வரலாற்றை படம் விவரிக்கிறது. கிரேக்க குடும்பத்தில் பிறந்த லெஃப்டர் துருக்கி அணிக்காக விளையாடி பெரும்சாதனைகளைச் செய்திருக்கிறார். லெஃப்டரின் வாழ்வின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது. ஏதென்ஸில் கிரேக்கத்திற்கு எதிராகத் துருக்கி அணியில் அவர் விளையாடும் போது …
பெருமதிபபிற்குரிய தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூற்றாண்டு கண்ட தியாகச் செம்மல் . பொதுவாழ்வில் அவர் காட்டிய தீரமும் அறமும் போற்றுதலுக்குரியது.
நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சி. சு. செல்லப்பா குறித்து உரையாற்றினேன். ஒரு மணி நேர விரிவான உரை. தமிழ்மொழித்துறை மாணவர்களும் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் நிறைந்த அவை. சி.சு.செல்லப்பாவின் பேரன் கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூரிலிருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த உரையில் செல்லப்பாவின் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள், அவரது, சிறுகதைகள் , புதுக்கவிதை உருவான விதம், அவர் முன்னெடுத்த அமெரிக்க இலக்கிய விமர்சன முறை, அவரது இலக்கிய நண்பர்கள், செல்லப்பாவின் …