அறிவிப்பு

டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள்

தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்திவரும் பொன். மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் மற்றும் ராம்குமார் இணைந்து நூலக மனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள் இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறார்கள். பொது நூலகத்திற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று ரஷ்ய தூதரகம் சார்பில் டெல்லியில் டால்ஸ்டாயின் 195வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது பற்றிய செய்தியை டிவியில் …

டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள் Read More »

நூலகமே உலகம்

உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றி ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டக் காட்சியே வியப்பூட்டுகிறது. ஈகோவின் நூலகத்தில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நூலகத்திற்கு அவர் நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியாகிப் பரபரப்பானது. ஈகோவின் மறைவிற்குப் பிறகு இந்த நூலகம் குறித்து விரிவாக ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள் Umberto Eco: A Library of the World

மார்டின் லூதர் கிங்

இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற ”I have a dream” உரை குறித்து எழுதியுள்ளேன். 1963 ஆண்டு இதே ஆகஸ்ட் 28ம் தேதி தான் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

அறிமுகவிழா

எனது சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்க நூல் The Man Who Walked Backwards and Other Stories ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிமுகவிழா ஒன்றினை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். இந்நூலை பிரபாஸ்ரீதேவன் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். The Man Who Walked Backwards and Other Stories is an anthology of eighteen short stories by S. Ramakrishnan, the popular and critically acclaimed master of modern …

அறிமுகவிழா Read More »

குறுங்கதை- ஆங்கிலத்தில்

எனது இரண்டு குறுங்கதைகள் பிரண்ட்லைன் இதழில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்ப்பு செய்தவர் மாலினி சேஷாத்ரி. ‘They fell silent’ Amirthavarshini was the first to notice it. When she was cooking, a large spoon slipped off the stand and fell to the floor. There was no sound. How could such a large spoon fall on the floor and not produce …

குறுங்கதை- ஆங்கிலத்தில் Read More »

தந்தையெனும் வெளிச்சம்

சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் அழகு நிலா தனது தந்தையைக் குறித்து அப்பன் என்ற நூலை எழுதியிருக்கிறார். நூல்வனம் பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள் காஃப்காவில் துவங்கி புதுமைப்பித்தன் வரை தந்தையோடு பிணக்கும் மோதலும் கொண்ட படைப்பாளிகளே அதிகம். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாடின் கோடிமர் காஃப்காவின் தந்தையின் கோணத்தில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அது தந்தையின் மனதைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதன் வெளிப்பாடு. தந்தையைப் பற்றி எப்போது நினைக்கும் போது ஷேக்ஸ்பியரின் லியர் அரசனே …

தந்தையெனும் வெளிச்சம் Read More »

கடல் பிரார்த்தனை

ஆங்கிலப் பேராசிரியரான திலா வர்கீஸ் கனடாவில் வசிக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தற்போது காலித் ஹுசைனியின் கவிதைத் தொகுப்பை கடல் பிரார்த்தனை எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் வாழ்வை மையமாக கொண்டு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள் தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாக விரியும் இக்கவிதைகள் சமகாலப் பிரச்சனையைத் தொட்டு அகதி வாழ்வின் துயரைப் …

கடல் பிரார்த்தனை Read More »

காந்தியின் சாட்சி

மலையாள எழுத்தாளர் எம்.என் காரசேரி எழுதியுள்ள காந்தியின் சாட்சி என்ற நூலின் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்கிறேன். இந்த நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் குமரி எஸ். நீலகண்டன். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றும் நீலகண்டன் காந்தியை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 15 என்ற நாவலை எழுதியுள்ளார். மதராஸ் கேரள சமாஜத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டுவிழாவில் எம்.என். காரசேரி , கே.பி. சங்கரன், கே.சி. நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த இடம் தாசபிரகாஷ் அருகிலுள்ளது. …

காந்தியின் சாட்சி Read More »

கனவில் வந்தவர்கள்

ஒரு கனவிலிருந்து தான் இங்மர் பெர்க்மென் தன்னுடைய ‘க்ரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்’ (Cries and Whispers: Ingmar Bergman) திரைப்படத்தை உருவாக்கினார் என்கிறார்கள். அது சாத்தியமே. ஒரு சிவப்பு அறையில் வெள்ளை ஆடை அணிந்த நான்கு பெண்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் தொடர் கனவு தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது கனவில் தோன்றும் நிகழ்வுகள். காட்சிகள் விழித்தெழுந்த பின்பும் மறையாமல் நமக்குள் குமிழ் விட்டபடியே இருக்கின்றன படைப்பாளிகள் அதை உருமாற்றிப் புனைவாக்கிவிடுகிறார்கள். பெர்க்மென் திரைக்கதையாக எழுதியிருக்கிறார். …

கனவில் வந்தவர்கள் Read More »

இரண்டு சிகரங்கள்

லியோ டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் ஒருவர் மீது மற்றவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் தனது இறுதிப்பயணத்தின் போது தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் நாவலைக் கையில் வைத்திருந்தார். இன்றைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் ஜி. கிருஷ்ண மூர்த்தி இருவர் சந்திப்பை அழகிய புகைப்படமாக்கியுள்ளார். ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டாடும் எனக்குப் பரிசாக இதனை அனுப்பி உள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.