அறிவிப்பு

2026 – கோவை புத்தகத் திருவிழாவில்

இந்த முறை புத்தகத் திருவிழாவிற்காக ஐந்து நாட்கள் கோவையில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் புதிய வாசகர்களுடன் சந்திப்பு. உரையாடல், என மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது. குறிப்பாக இருபது வயதிற்குள் இருக்கும் இளம்வாசகர்கள் நிறைய வந்திருந்தார்கள். அவர்கள் ஆசையாகப் புத்தகங்களை வாங்கிப் போனது சந்தோஷம் அளித்தது. தேசாந்திரி பதிப்பகத்திற்கு வாசகர்கள் அளித்த ஆதரவிற்கு மிகுந்த நன்றி. எனது புத்தகங்களை வாங்கி விற்பனை செய்யும் புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கல்லூரி மாணவர்கள். ஆய்வாளர்கள். பேராசிரியர்கள். மென்பொருள்துறையில் பணியாற்றுகிறவர்கள். மருத்துவர்கள். …

2026 – கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

கோவை புத்தக திருவிழாவில்

இன்று 25:07:26மாலை கோவை புத்தக திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு: ஒளிரும் வார்த்தைகள் . மாலை ஆறு மணிக்கு புத்தக திருவிழா அரங்கில் உரை நடைபெறுகிறது.

காலனியக் குற்றங்கள்

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை நிகழும் தருணங்களுக்கு அருகில் தன் கதைகளைப் படைப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். அந்த அடிப்படையில் காலனிய காலத்துக் குற்றவாளிகளைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 25 கதைகள் கொண்ட ‘குற்றமுகங்கள்’ தொகுப்பை கவிதையின் அற்புத தருணங்களிலேயே நாயகர்கள், நாயகிகள் சஞ்சரிக்கும் காவியமென்றே வாசிக்க இயலும். எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்கிய காலனியகால குற்றவாளிகள் எல்லாரது வினோத நடவடிக்கைகளும் இந்த அடிப்படையிலேயே எனக்கு கவிதைகளாகத் தெரிகின்றன ஆண்கள், பெண்கள், பெண் வேடமிட்ட ஆண்கள் குற்றவாளிகளாக அலையும் குற்றமுகங்களில் கடைசி …

காலனியக் குற்றங்கள் Read More »

கதைப்பயணி 5

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் கதைப்பயணியின் ஐந்தாவது பகுதி வெளியாகியுள்ளது

இந்திய இலக்கியத்தின் முகம்

இந்திய இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நாவல்வாசிகள் என்ற உங்களின் புத்தகத்தைப் படித்தேன். அற்புதமான நூல். இந்த ஒரு புத்தகத்தின் வழியாக இந்தியாவின் புகழ்பெற்ற முப்பது எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன். அவர்களின் நாவல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியிருப்பதையும் அந்த நாவல்களை ஏன் படிக்க வேண்டும் என்பதையும் அழகாக விவரித்துள்ளீர்கள். இந்த நூலை ஒரு பொக்கிஷம் போல போற்றி வைத்துக் கொள்வேன். உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறேன் கே. சௌந்திரராஜன். தஞ்சாவூர். தேசாந்திரி பதிப்பகம் விலை ரூ …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

ஹைதராபாத் நிகழ்ச்சி

எனது யாமம் நாவலின் தெலுங்கு மொழியாக்க நூல் ஹைதராபாத்தில் வெளியிடப்படவுள்ளது. பாலா புகஸ் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜுலை 26 மாலை பிரஸ் கிளப்பில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் பால சாகித்ய சம்மேளனம் நிகழ்வில் நூல் குறித்த அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் மொழிபெயர்ப்பாளர் ஜிலேல பாலாஜி மற்றும் தெலுங்கின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

கோவை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 17 முதல் 26 வரை கோவை கொடிசியா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்க எண் 267 மற்றும் 268 ஜுலை 22 முதல் 26 வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள். வாசகர்கள் புத்தகத் திருவிழாவில் உள்ள தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம். ஜுலை 25 சனிக்கிழமை மாலை “ஒளிரும் வார்த்தைகள்“ என்ற தலைப்பில் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்