அறிவிப்பு

சென்னை : வரலாறும் வாழ்க்கையும்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் துவங்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. நவம்பர் 7 வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்குப் புத்தகப் பூங்கா அரங்கில் சென்னை : வரலாறும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

வான்கோவை வரைதல்

துருக்கிய கலைஞர் கரிப் அய் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான விண்மீன்கள் நிறைந்த இரவைத் தண்ணீரில் வரைகிறார். நம் கண் முன்னே மாயம் உருவாகிறது.இது “Ebru” என்று அழைக்கப்படும் ஒருவகை ஒட்டோமான் கலை, துருக்கியில் மிகவும் பரவலாக உள்ளது என்கிறார்கள் Van Gogh on Dark Water

மருந்தாகும் பாடல்கள்

கறுப்பு வெள்ளைப் பாடல்களின் மீதான பித்து என்பது வெறும் ஏக்கம் மட்டுமில்லை. அது ஒரு நினைவுமீட்சி. யூடியூப்பில் உள்ள பழைய பாடல்களுக்குக் கீழே பின்னூட்டம் எழுதியவர்களைத் தேடிப் படிப்பது சுவாரஸ்யமானது. பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்கப் பாடலை ரசித்திருக்கிறார்கள். சிலர் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளியான நாள் யாருடன் எங்கே பார்த்தோம் என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்கள். வியப்பூட்டும் சில பதிவுகளும் உண்டு. இந்தப் பாடல்கள் லட்சக்கணக்கான முறை கேட்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் …

மருந்தாகும் பாடல்கள் Read More »

இருள் இனிது

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள புதிய குறும்படம் இருள் இனிது. எனது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ள இந்தக் குறும்படத்தின் அறிமுகவிழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை மீடியா சயின்ஸ் படித்துள்ள ஹரி பிரசாத் NFDC யில் திரைப்பட படத்தொகுப்பு பயின்றுள்ளான். தற்போது தேசாந்திரி யூடியூப் சேனலை நடத்தி வருவதுடன். White Knights என்ற டிஜிட்டில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றையும் …

இருள் இனிது Read More »

லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்

“மக்கள் ஒரு தடயமும் இல்லாமல் தொலைந்து போகிறார்கள், சில வேளைகளில் தங்கள் தடயங்களை மறைக்கிறார்கள், சிலர் மறைக்கப்பட்ட தடயங்களைக் காண்கிறார்கள். சில நேரங்களில், கிட்டத்தட்ட ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வேறு எங்காவது தோன்றி, புதிதாகக் காணாமல் போகிறார்கள். இந்த நாட்களில் அமைதிக்கும் இருளுக்கும் உள்ள உறவை எவ்வாறு விவரிப்பது? இப்போதெல்லாம் துயரமான இடங்கள் கூடப் பயங்கரமான சத்தத்தாலும், பயங்கரமான வெளிச்சத்தாலும் நிரம்பியுள்ளன“ – லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் ஹங்கேரிய நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் இந்த ஆண்டிற்கான …

லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் Read More »

ஒரு கடிதம்

எனது தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலை வாசித்துவிட்டு தங்ககோபி என்ற மாணவன் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்திருக்கிறான். அதில் முதன்முறையாக தான் தபால் பெட்டியை பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளான். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அந்நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வர வேண்டும் …

ஒரு கடிதம் Read More »