இலக்கியம்

குபாஸின் வாக்குமூலம்

பிரேசிலிய எழுத்தாளர் மச்சடோ டி ஆசிஸ் எழுதிய  Epitaph of a Small Winner  நாவல் மாறுபட்ட கதை சொல்லும் முறையைக் கொண்டுள்ளது. 1881-ல் வெளியான இந்நாவல் The Posthumous Memoirs of Brás Cubas என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. பிராஸ் குபாஸ் என்பவரின் மரணத்திற்குப் பிந்தைய நினைவுகளைக் கூறும் இந்த நாவல் வாசகர்களுடன் புதிர் விளையாட்டினை நிகழ்த்துகிறது.  இதில் வரும் குபாஸ் தான் “இறந்து போன எழுத்தாளரில்லை. இறந்த பின்பு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன்“ என்று …

குபாஸின் வாக்குமூலம் Read More »

தேசம் இல்லாத இளவரசி.

விக்டோரியா மகாராணியின் பேத்தியான இளவரசி மேரி லூயிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை My Memories of Six Reigns என எழுதியிருக்கிறார். தனது எண்பது ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாக இதனை எழுதியிருக்கிறார். தனது பாட்டியின் ஆலோசனைப் படி இந்நூலை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நினைவுகள் என்பதால் அந்தக் கால அரண்மனை வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளும் வெகு துல்லியமாக, நுணுக்கமாக விவரிக்கபட்டுள்ளன. வரலாற்றின் சில முக்கிய முடிவுகள். நிகழ்வுகள் …

தேசம் இல்லாத இளவரசி. Read More »

புகைப்பட நினைவுகள்

லியோ டால்ஸ்டாயின் வண்ணப்புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் செர்ஜி ப்ரோகுடின்-கோர்ஸ்கி (Prokudin-Gorsky). தனது வாழ்வில் டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட ஒரே வண்ணப்புகைப்படம் இதுவே. ப்ரோகுடின்-கோர்ஸ்கி ஜெர்மனிக்குச் சென்று வண்ணப்புகைப்படக்கலையைக் கற்று வந்தவர். ரஷ்யாவின் வண்ணப்புகைப்படக்கலை முன்னோடியாகக் கொண்டாடப்படுகிறார். டால்ஸ்டாயின் மனைவியான சோபியா புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் கோடாக் பெல்லோஸ் பிளேட் கேமிரா ஒன்றை விலைக்கு வாங்கித் தனது குடும்பத்தினர் மற்றும் பண்ணை வாழ்க்கையைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவரது நாட்குறிப்பும் புகைப்படங்களும் இணைந்ததாக Song Without Words …

புகைப்பட நினைவுகள் Read More »

சுண்டோகு

புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமலே வைத்திருப்பதைக் குறிக்கும் ஜப்பானியச் சொல் சுண்டோகு (Tsundoku ). வாசிக்கப்படாத புத்தகங்கள். பாதி வாசிக்கபட்டுக் கைவிடப்பட்ட புத்தகங்கள். ஒன்றிரண்டு பக்கங்கள் மட்டுமே புரட்டப்பட்ட புத்தகங்கள். திரும்பத் திரும்ப வாசிக்கபடும் புத்தகங்கள். தேவையில்லாமல் வாங்கிய புத்தகங்கள், மின்புத்தகங்கள், பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள். நகலெடுக்கபட்ட புத்தகங்கள் என நிறைய வகைகள் இருக்கின்றன. எனது நூலகத்தில் ஒரு புத்தகம் எங்கேயிருக்கிறது எனத் தேட முடியாமல் அதன் இன்னொரு பிரதியை கடையிலிருந்து வாங்கி விடுவேன். தேடிய புத்தகம் அதன் …

சுண்டோகு Read More »

ஹெர்டா முல்லரின் கைக்குட்டை

2009ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஹெர்டா முல்லர் தனது நோபல் சொற்பொழிவில் தனது அன்னை கேட்கும் ஒரு கேள்வியைக் குறிப்பிடுகிறார். ஹெர்டா முல்லர் வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஒவ்வொரு காலையிலும் வீட்டுவாசலில் நின்று கொண்டு அவரது அம்மா “உன்னிடம் கைக்குட்டை இருக்கிறதா? “ என்ற கேள்வியை எழுப்புவார். ஹெர்டாவிடம் கைக்குட்டை இருக்காது. உடனே வீட்டிற்குள் திரும்பிச் சென்று தனது கைக்குட்டையை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார். அம்மாவின் இந்த நினைவுறுத்தல் அவரது அன்பின் மறைமுக வெளிப்பாடாகும். …

ஹெர்டா முல்லரின் கைக்குட்டை Read More »

இரண்டு உருவப்படங்கள்

எனது அறையிலுள்ள புத்தக அலமாரியில் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவப்படம் ஒன்றும் ஆன்டன் செகாவின் உருவப்படம் ஒன்றும் அருகருகில் வைக்கப்பட்டுள்ளது. இன்று புத்தகம் எடுக்கும் போது இருவரது புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரெனத் தோணியது அவர்கள் வாழ்நாளில் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. அருகில் அமர்ந்ததில்லை. லியோ டால்ஸ்டாயும் ஆன்டன் செகாவும் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன்.அதில் தந்தையும் மகனும் போலவே தோற்றம் தருகிறார்கள். செகாவின் மீது டால்ஸ்டாய் பேரன்பு கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் மகள் மரியா செகாவை …

இரண்டு உருவப்படங்கள் Read More »

பிரபஞ்சத்தில் மனிதர்கள்

எனது புத்தகங்கள் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மொத்தம் 27 மில்லயன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அதனால் என்ன ? அவை அனைத்தும் வேகமாக மறைந்துவிடும், ஏனெனில் புதிய புத்தகங்களின் வெள்ளம் எல்லாவற்றையும் மூழ்கடித்து, முன்பே எழுதப்பட்டவற்றை வேகமாக அடித்துச் செல்கிறது. இன்று ஒரு புத்தகக் கடையில் உள்ள ஒரு புத்தகத்திற்கு, சிறிதளவு தூசி படிவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை. நாம் இப்போது நீண்ட காலம் வாழ்கிறோம் என்பது உண்மைதான் – ஆனால் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் ஆயுட்காலமும் …

பிரபஞ்சத்தில் மனிதர்கள் Read More »

சலிப்பு நிறமற்றது

செகாவின் சிறுகதைகளில் சலிப்பு ஒரு முக்கியக் கருப்பொருள். சலிப்புற்ற கதாபாத்திரங்களின் மனஉணர்வுகளை, செயல்களைத் துல்லியமாக எழுதியிருக்கிறார். சலிப்பை எழுதுவது எளிதானதில்லை. அது எழுதுவதற்கான கருப்பொருளுமில்லை. அப்படியே எழுதினாலும் அது வாசிப்பிற்கு விருப்பமானதாகயிருக்காது. சலிப்பை இவ்வளவு சுவாரஸ்யமான விஷயமாகச் செகாவால் மட்டுமே மாற்ற முடிகிறது தனது மாறாத இடம் மற்றும் இருப்பு குறித்து ஆணிகள் சலிப்படைவதில்லை. மாறாகத் தான் உறுதியின் துணைவன் என்பதாகத் தன்னை உணருகின்றன. இயற்கையில் சலிப்பு என்பதேயில்லை. ஒரே செயல் நாம் அறியாத பலநூறு நுண்மாற்றங்களுடன் …

சலிப்பு நிறமற்றது Read More »

இரண்டு ஊசிகள்

தனது என் சரித்திரம் நூலில் தமிழ்தாத்தா உ. வே. சாமிநாதையர் , தனது பாட்டனாரைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். வேங்கடாசலம் என்ற அந்தத் தாத்தா மரணத்தருவாயில் உ.வே.சாவின் அன்னையை அருகில் அழைத்து “ நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய் . நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன் . வருத்தப்படாதே. நீ நல்ல பெண் ” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தலைமாட்டிலுள்ள சிறு மூட்டையை எடுத்து . அதில் போடப்பட்டிருந்த ஒரு முடிச்சை …

இரண்டு ஊசிகள் Read More »

வாசகன் எனும் கதாபாத்திரம்

டேவிட் மார்க்சன் (David Markson) தனித்துவமான அமெரிக்க எழுத்தாளர். இவரது நாவல்கள் மேற்கோள்கள், தகவல்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டவை தீவிர வாசகன் ஒருவனின் சிதறுண்ட குறிப்புகளாக நீளும் இந்த வகை நாவல் புதிதானது. மரபான நாவல்களைப் போல இவரது படைப்பு ஒரு கதாபாத்திரத்தின் வழியே நிகழ்வுகளை விவரிப்பதில்லை. வாசகன் தான் இவரது புனைவின் மையக் கதாபாத்திரம். வாசகன் மனதில் பதிந்து போன இலக்கியம் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகள். வரலாற்று தகவல்களைச் …

வாசகன் எனும் கதாபாத்திரம் Read More »