இலக்கியம்

அனுபவங்களும் அறிவாற்றலும்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கட்டுரைகளைக் காலச்சுவடு மற்றும் காலம் இதழ்களில் படித்திருக்கிறேன். அந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அப்படியே நியூயார்க்கரிலோ அல்லது தி கார்டியன் இதழிலோ வெளியிட்டிருப்பார்கள். அபாரமான எழுத்து. குறிப்பாக அவரது புலமை மற்றும் எழுத்து நடை வியப்பூட்டக்கூடியது. மெல்லிய கேலியோடு ஒன்றைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் அசோகமித்ரனின் சாயல் இருக்கிறது. அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கு முக்கியக் காரணம் அவரும் ஒரு புத்தக விரும்பி. இலக்கியம், …

அனுபவங்களும் அறிவாற்றலும். Read More »

சால் பெல்லோ கேட்ட கதை

யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சுயசரிதையான Suragiல் அனந்தமூர்த்தித் தான் பழகிய எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சால் பெல்லோவை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் வீட்டில் சந்தித்த நிகழ்வை எழுதியிருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது சால் பெல்லோ அணிந்திருந்த அழகான சட்டையைப் பாராட்டிய ராமானுஜத்தின் மனைவி மோலி இது உங்கள் பணக்கார அண்ணன் பரிசாக அளித்ததா என்று கேட்கிறார். தனது கோடீஸ்வர அண்ணன் ஒருமுறை அணிந்துவிட்டு …

சால் பெல்லோ கேட்ட கதை Read More »

நீளும் கரங்கள்

சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ஒட்டகச்சிவிங்கியின் மொழி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் நோர்வேயில் வசிக்கிறார். கணினித்துறையில் பணியாற்றுகிறார், இதிலுள்ள கட்டுரைகள் அவரது சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. தான் நேசித்த மனிதர்களை. அவர்களின் தனித்துவத்தை, நட்பை, உறவை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முழுநாவலாக எழுத வேண்டிய அளவு விஷயங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதை நான்கு அல்லது ஐந்து பக்க அளவிற்குள் கச்சிதமான வடிவில் சிறப்பாக …

நீளும் கரங்கள் Read More »

நிதானத்தின் பிரபஞ்சம்

கவிஞர் மணி சண்முகம் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர் ஹைக்கூவின் நால்வராக அறியப்படும் பாஷோ, பூசான், கோபயாஷி இஸ்ஸா, மசோகா ஷிகி ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஜப்பானிய ஹைக்கூ வரிசை என எட்டு நூல்களாக விஜயா பதிப்பகம் அழகிய வடிவில் வெளியிட்டுள்ளார்கள். ஹைக்கூ கவிதைகள் கூழாங்கற்கள் போன்றவை. அவற்றின் அழகும் தனித்துவமும் முழுமையும் வியப்பூட்டக்கூடியது, எளிய கவிதைகளைப் போலத் தோற்றம் தந்தாலும் இவற்றை மொழியாக்கம் செய்வது சவாலானது. …

நிதானத்தின் பிரபஞ்சம் Read More »

போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு

சீன எழுத்தாளரான யியுன் லி டால்ஸ்டாயுடன் எண்பத்தைந்து நாட்கள் என்றொரு நூலினை எழுதியிருக்கிறார். இது போரும் வாழ்வும் நாவலை வாசித்த கூட்டு அனுபவத்தைப் பற்றியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நண்பர்கள் பலரும் ‘ஒன்றாக ஒரு நாவலைப் படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தினை உருவாக்கினார்கள். அதற்காக 1200 பக்கங்களுக்கும் மேலாக உள்ள போரும் வாழ்வும் நாவலை தேர்வு செய்தார்கள். இந்தத் தொடர்வாசிப்பு ஒரு புதிய நிலத்திற்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தை உருவாக்கியது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் …

போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு Read More »

சாய்ந்து கிடக்கும் டம்ளர்

வீட்டில் உள்ளவர்கள் பகலில் உறங்கும் போது சிறுவர்கள் உறங்குவதில்லை. பெரியவர்கள் உறங்குகிற நேரத்தில் சிறார்கள் மிகுந்த சுதந்திரமாக உணருகிறார்கள். கையில் கிடைத்த துணியைப் போலப் பகலைச் சுருட்டி எறிந்து விளையாடுகிறார்கள். நிழலைப் போல வீட்டிற்குள் சப்தமில்லாமல் நடக்கிறார்கள். பிரிட்ஜை சப்தமில்லாமல் திறந்து குளிர்ந்திருந்த கேக்கை எடுத்து ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடுகிறார்கள். உறங்குகிறவர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய சந்தோஷம். உறங்கும் போது பெரியவர்கள் சிறுவர்களாகி விடுகிறார்கள். குறிப்பாக அவர்களின் திறந்த வாய் பசித்த சிறுவர்களின் …

சாய்ந்து கிடக்கும் டம்ளர் Read More »

எதிர்பாராத முத்தம்

இலக்கிய விமர்சகர் ஜேம்ஸ் உட் தி கார்டியன் இதழின் தலைமை இலக்கிய விமர்சகராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று தி நியூயார்க்கரில் வேலைக்குச் சேர்ந்து அங்கும் தொடர்ந்து இலக்கிய விமர்சனத்தை எழுதி வருகிறார். இவரது விமர்சனக் கட்டுரைகள் இலக்கியப் படைப்பின் நுட்பத்தை, சிறப்புகளை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவை. இவரது கட்டுரைகளின் தொகுப்பான SERIOUS NOTICING: SELECTED ESSAYS, 1997-2019 யை வாசித்தேன். 28 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. லியோ டால்ஸ்டாய், மெல்வில். பால்சாக், …

எதிர்பாராத முத்தம் Read More »

கூண்டில் ஒருவர்.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டினா எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள் மட்டுமே எழுதுபவர். முப்பது ஆண்டுகளில் ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் நீண்ட நேர்காணல் செய்து தனித்தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். re-entry into society என்றொரு சிறுகதையை ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேனிலவிற்குச் சென்றுவிட்டு தங்களின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். வீட்டில் அவர்களின் படுக்கை அறையில் பெரியதொரு கூண்டு காணப்படுகிறது. அதற்குள் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார். இந்தக் கூண்டினை வைப்பதற்காகப் …

கூண்டில் ஒருவர். Read More »

மாற்ற முடியாத விஷயங்கள்

இஸ்ரேலிய எழுத்தாளர், அமோஸ் ஓஸின் நேர்காணல்கள் தொகுப்பு. What Makes an Apple?: Six Conversations about Writing, Love, Guilt, and Other Pleasures  இந்த நேர்காணல்களில் தனது எழுத்து, பால்யகால நினைவுகள். காதல் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நேர்காணலை எடுத்துள்ள ஷிரா ஹதாத் அமோஸை ஆழ்ந்து வாசித்துச் சரியான கேள்விகளை முன்வைக்கிறார். ஓஸின் பதில்களை ஏற்றுக் கொள்ள முடியாது என முகத்துக்கு நேராக மறுக்கிறார். அத்துடன் அவரது முந்தைய நேர்காணல்களில் …

மாற்ற முடியாத விஷயங்கள் Read More »

கலையின் மீதான பசி

ஃபிரான்ஸ் காஃப்காவின் பட்டினிக்கலைஞன் சிறுகதையில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு மனிதன் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறான். அவனொரு பட்டினிக்கலைஞன். அதாவது பணம் செலுத்தும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகப் பட்டினி கிடப்பவன். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அவனைப் போன்ற பட்டினிக்கலைஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் காட்சி நடத்தியிருக்கிறார்கள். பொதுவாகத் திருவிழா, கண்காட்சியிலோ, அல்லது அரங்கம் ஒன்றிலோ இவர்களின் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்குக் கட்டணம் உண்டு. இவர்கள் அதிகப் பட்சம் நாற்பது நாட்கள் வரை பட்டினி கிடப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்காகப் பெரிய …

கலையின் மீதான பசி Read More »