இலக்கியம்

தேவராஜின் உலகம்

நிமித்தம் நாவல் – வாசிப்பு அனுபவம்: மரு. நோயல் நடேசன் கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது, “அவன் ஒரு சகுனி” என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை. இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என …

தேவராஜின் உலகம் Read More »

ஆறு சித்திரங்கள்

1920 களின் ரஷ்ய கவிதையுலகம் மற்றும் கவிஞர்களின் வாழ்க்கை குறித்து வாசிக்கும் போது அவர்கள் ஒரு விசித்திரக் கனவுலகில் உலவியதை அறிய முடிகிறது. கவிஞர் விளாடிஸ்லாவ் கோடாசெவிச் அந்தக் காலக் கட்டத்தின் ஆறு முக்கியக் கவிஞர்கள் குறித்த தனது நினைவுக் குறிப்பினை NECROPOLIS என்ற நூலாக எழுதியிருக்கிறார். புஷ்கின் மட்டுமே தனது ஆதர்சம் எனும் கோடேசெவிச் அன்றைய குறியீட்டுக் கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞராக இருந்தார். குறியீட்டு வாதம் என்பது ஒரு தனித்துவமான கருத்தைத் தெரிவிக்க, ஒரு …

ஆறு சித்திரங்கள் Read More »

கோமாலாவில் என்ன நடக்கிறது

மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று. இந்நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. 122 பக்கங்கள் கொண்டது. தேரியின் மணல்மேடுகளைப் போல நாவல் பல்வேறு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. வாசிக்கையில் அந்த மடிப்புகளின் விசித்திர அழகு வியப்பூட்டுகிறது. இந்த நாவலின் பாதிப்பில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை எழுதினார் என்கிறார்கள். பெட்ரோ பரமோவின் ஒரு வாக்கியத்தைத்  தனது நாவலில் மார்க்வெஸ் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் முதல் மேஜிகல் …

கோமாலாவில் என்ன நடக்கிறது Read More »

ஐசக் பேபலின் மாப்பசான்

A well-thought-out story doesn’t need to resemble real life. Life itself tries with all its might to resemble a well-crafted story. – Isaac Babel ஆன்டன் செகாவைப் போலவே சிறுகதைகளில் தனித்துவமும் மொழிநுட்பமும் கொண்ட படைப்பாளி ஐசக் பேபல். சிறந்த ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் பேபல் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். Guy De Maupassant கதை 1932ல் வெளியானது. …

ஐசக் பேபலின் மாப்பசான் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி எனும் சூதாடி

சூதாடி நாவலை(The Gambler) எழுத பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு விருப்பமேயில்லை. கட்டாயத்தின் பெயரால் தான் அந்த நாவலை எழுதினார். அதுவும் ஒரு மாத காலத்திற்குள் எழுதித் தர வேண்டும் என்று பதிப்பாளர் ஸ்டெல்லோவ்ஸ்கி ஏற்படுத்திய நெருக்கடியே நாவலை எழுத வைத்தது. ஒருவேளை இதை எழுதித் தராமல் போயிருந்தால் கடனுக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைபட நேரிடும் என்ற அச்சம் அவரை விரைவாக எழுத வைத்தது. இன்று எழுத்தாளர்கள் தங்களின் புதிய நாவலை எழுதுவதற்கு இயற்கையான இடங்களைத்தேடிச் செல்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் …

தஸ்தாயெவ்ஸ்கி எனும் சூதாடி Read More »

வேட்டைக்காரனின் மனைவி

ஆன்டன் செகாவின் வேட்டைக்காரன் (THE HUNTSMAN) சிறுகதை 1885ல் வெளியானது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலரும் தேர்வு செய்துள்ள கதையிது. அளவில் சிறிய கதையே. ஆனால் அதில் தான் எத்தனை மடிப்புகள். நுணுக்கங்கள். ஆன்டன் செகாவை ஏன் சிறுகதையின் மாஸ்டர் என்று கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம். கதை யெகோர் என்ற வேட்டைக்காரனைப் பற்றியது. அவன் ஒருநாள் நாட்டுப்புற சாலையில் நடந்து செல்லும்போது, தற்செயலாகத் தனது பிரிந்த மனைவி பெலகேயாவைச் சந்திக்கிறான். வேட்டைக்காரனைப் …

வேட்டைக்காரனின் மனைவி Read More »

எழுத்தின் வழியான பயணம்

சுபாஷ் ஜெய்ரேத் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய எழுத்தாளர். இவர் ஒன்பது ஆண்டுகள் ரஷ்யாவில் புவியியல் மற்றும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார். 1986 இல் அவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது நாவல் ஆஃப்டர் லவ் 2018 இல் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது. இவரது Spinoza’s Overcoat, Travels with Writers and Poets சிறப்பான கட்டுரைத் தொகுப்பாகும். சுபாஷ் ஜெய்ரேத் ரஷ்ய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதால் இந்தப் …

எழுத்தின் வழியான பயணம் Read More »

செகாவின் சகோதரி

விடிகாலையின் போது எல்லா ஊர்களும் தனது பெயர்களை இழந்து விடுகின்றன. இயக்கம் தான் ஊர்களின் பெயர்களை, அடையாளத்தை உருவாக்குகிறது. பனிமூட்டம் கலையாத விடிகாலையில் யால்டா வசீகரமான கனவுவெளியைப் போலிருக்கிறது என்று ஆன்டன் செகாவ் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். ஊரும் அதன் நினைவுகளும் அதற்குக் காரணமாக மனிதர்களுமே அவரது எழுத்தின் ஆதாரங்கள். ஆன்டன் செகாவ் தன்னை ஒரு போதும் மாநகரத்தின் மனிதராகக் கருதவில்லை. மாஸ்கோவின் தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்திலே தான் வாழ்ந்திருக்கிறார். தனது வீட்டிலே இலவச மருத்துவமனையும் சிறிய …

செகாவின் சகோதரி Read More »

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம்

கணேஷ்பாபு. சிங்கப்பூர் குறுங்கதைகள், அதிகதைகள், மாய யதார்த்தக் கதைகளை அல்லது பொதுவாகப் பின்நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதற்கு வாசகன் மனதளவில் சில தீர்மானங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில், முன்முடிவற்று இப்பிரதிகளை வாசிக்கப் பழக வேண்டும். ஆங்கிலத்தில் “Wilful suspension of disbelief” என்பார்கள். வாசகன் இவ்வகை அதிகதைகளை வாசிக்கையில் தனது நம்பிக்கையின்மையை அல்லது அவநம்பிக்கையை அல்லது தர்க்க அறிவை பிரக்ஞைபூர்வமாக ரத்து செய்துவிட்டு பிரதிக்குள் நுழைய வேண்டும். ஒரு விலங்கு எப்படிப் பேசும், குரங்கு எப்படிக் கடலைத் தாவும் …

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம் Read More »

சிலைகள் சொல்லும் உண்மை

சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர் முனைவர் ஜம்புலிங்கம். இவரது களப்பணியின் காரணமாக அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் போன்ற ஊர்களில் அரிய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. ஜம்புலிங்கம் தனது முப்பது ஆண்டுகாலப் பௌத்த ஆய்வின் தொகுப்பாகச் சோழநாட்டில் பௌத்தம் என்ற நூலை எழுதியுள்ளார். அழகிய புகைப்படங்களுடன் கெட்டி அட்டையில் நேர்த்தியாக இந்நூலை புது எழுத்துப் …

சிலைகள் சொல்லும் உண்மை Read More »