இலக்கியம்

ஒளி தரும் மகிழ்ச்சி

ஜப்பானுக்கு வெளியே அதிகம் கவனம் பெறாத எழுத்தாளர் யோகோ சுஷிமா (Yūko Tsushima). ஜப்பானியத்தனம் இல்லாத ஜப்பானிய படைப்பாளி என்பதால் மேற்குலகம் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சர்வதேசப் பதிப்பாளர்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளை விடவும் புத்தகச்சந்தையில் விற்பனைக்கான அதிக சாத்தியமுள்ள படைப்புகளையே தேர்வு செய்கிறார்கள்.  அதற்கு ஜப்பானியதனம் அவசியமானது. அது முரகாமியிடம் இருக்கிறது. சுஷிமாவிடம் இல்லை. 2016ல் மறைந்துவிட்ட சுஷிமாவின் எழுத்துகள் தனித்து பேசப்பட வேண்டியவை. ஜப்பானிய இலக்கிய உலகம் யோகோ சுஷிமாவைக் கொண்டாடுகிறது. அவர் பல்வேறு …

ஒளி தரும் மகிழ்ச்சி Read More »

ஒரு வரிக்கதை

லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான அகஸ்டோ மான்டெரோசோ (Augusto Monterroso) ஒரேயொரு வரியில் கதை எழுதியிருக்கிறார். டைனோசர் என்ற அந்தக் கதை பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. இதாலோ கால்வினோ அதனை நிகரற்ற கதை என்று புகழுகிறார். அந்தக் கதை குறித்துப் போர்ஹெஸ் தனது கட்டுரை ஒன்றிலும் வியந்து குறிப்பிடுகிறார். Cuando despertó, el dinosauro todavía estaba allí (When he awoke, the dinosaur was still there ) என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி …

ஒரு வரிக்கதை Read More »

திவாகர் காட்டும் சென்னை

1993 ஆக இருக்கலாம். The Marriage of Maria Braun படம் திரையிடுவதைக் காணுவதற்காகச் சென்னை பிலிம்சேம்பர் சென்றிருந்தேன். அங்கே படம் பார்ப்பதற்காக வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் சதாசிவம் கன்னட எழுத்தாளர் எஸ்.திவாகரின் சிறுகதைகளை அறிமுகம் செய்து உரையாடினார். அரைமணி நேரத்திற்கும் மேலாகத் திவாகரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். திவாகர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை செய்வதாகச் சொல்லி நாம் ஒரு நாள் சந்திப்போம் என்றார். சில ஆண்டுகளுக்குப் பின்பு எஸ்.திவாகரின் சிறுகதைகளை அந்தரத்தில் நின்ற நீர் …

திவாகர் காட்டும் சென்னை Read More »

கதைகளின் வரைபடம்

லிடியா டேவிஸ் சிறந்த சிறுகதையாசிரியர். குறிப்பாக அவரது குறுங்கதைகள் புகழ் பெற்றவை. மேடம்பவாரி உள்ளிட்ட சில நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்பு Essays One, இதில் அவரது எழுத்துலகப் பிரவேசம் மற்றும் அவருக்கு விருப்பமான எழுத்தாளர்கள். கதைகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். லிடியாவின் உரைநடை பனிச்சறுக்கு செல்வது போலச் சறுக்கிக் கொண்டு போவது. அவர் தாவிச்செல்லும் புள்ளிகள் வியப்பளிக்கக் கூடியவை. கல்லூரி நாட்களிலே அவருக்குச் சிறுகதை ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. …

கதைகளின் வரைபடம் Read More »

நுண்ணோக்கியும் தொலைநோக்கியும்

கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பான தேதியற்ற மத்தியானம் குறித்த தனது வாசிப்பனுபவத்தை மதார் பகிர்ந்துள்ளார். கவிதைகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேவதச்சனின் கவிதைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ள விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. மதாருக்கு என் வாழ்த்துகள் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தேவதச்சனின் இந்தத் தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. •• தேவதச்சனின் தேதியற்ற மத்தியானம் – மதார் தேவதச்சனின் புதிய கவிதை நூலான தேதியற்ற மத்தியானம் வெளிவந்துள்ளது. நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் இருக்கும் கவிதைகள் என இந்தத் தொகுப்பிலுள்ள …

நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் Read More »

க.நா.சுவும் ரஷ்ய இலக்கியங்களும்

க.நா.சுவைப் போல உலக இலக்கியங்களைத் தேடித்தேடி படித்த இன்னொரு தமிழ் எழுத்தாளரைக் காண முடியாது. சர்வதேச படைப்பாளிகளை முறையாக அறிமுகம் செய்ததோடு அவர்களின் முக்கிய நாவல்களை மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். இவ்வளவு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்ட க.நா.சு ஏன் ரஷ்ய இலக்கியங்கள் எதையும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவை பிடிக்கவில்லையா. அல்லது பலரும் மொழிபெயர்ப்புச் செய்கிறார்களே நாம் வேறு எதற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என நினைத்தாரா என்று தெரியவில்லை. இவ்வளவிற்கும் க.நா.சுவின் காலத்தில் நிறைய ரஷ்ய இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் …

க.நா.சுவும் ரஷ்ய இலக்கியங்களும் Read More »

ஒகினமாரோ என்ற நாய்

ஜப்பானைச் சேர்ந்த செய் ஷோனகான் எழுதிய The Pillow Bookல் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. பேரரசரின் விருப்பமான பூனையின் பெயர் மையோபு. அதைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண் இருந்தாள். அவளது பெயர் முமா. ஒரு நாள் அந்தப் பூனை நீண்டநேரமாக வெயிலில் தூங்கிக் கொண்டிருந்தது, அதைக் கலைப்பதற்காக முமா அரண்மனை நாயை வேடிக்கையாக ஏவிவிட்டாள். ஒகினமாரோ என்ற அந்த நாய் பூனையின் மீது வேகமாகப் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போன பூனை பயத்தில் தப்பியோடியது. மன்னர் அப்போது …

ஒகினமாரோ என்ற நாய் Read More »

சோமாவைப் பாடுதல்

சோமா என்ற “ஏ.கே.ராமானுஜனின் புதிய கவிதைத்தொகுப்பினை வாசித்தேன். ஆங்கிலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ஏ.கே.ராமானுஜனின் மறைவிற்குப் பிறகு அவரது கையெழுத்துப்பிரதிகள், நாட்குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சேகரிப்பு ஆங்கிலத்திலிருந்தாலும், தமிழ், கன்னட கையெழுத்து பிரதிகளும் அங்கே காணப்படுகின்றன. இதில் அவரது சான்றிதழ்கள் புகைப்படங்கள் மற்றும் கடிததொடர்புகள், நினைவுக்கட்டுரைகள் தனியே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை வெளியிடப்படாத அவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பைச் சோமா என்ற பெயரில் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் …

சோமாவைப் பாடுதல் Read More »

கற்பனையும் நிஜமும்

Journalism is the profession that most resembles boxing, with the advantage that the typewriter always wins and the disadvantage that you’re not allowed to throw in the towel. – Gabriel García Márquez. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய Gobo ஆவணப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. மார்க்வெஸின் அம்மா அவரது கதையில் வரும் கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் யார் என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடுகிறார். அது கற்பனையில் எழுதியது …

கற்பனையும் நிஜமும் Read More »

பெலிகோவின் குடை

ஆன்டன் செகாவின் “Man in a Case” சிறுகதையில் பெலிகோவ் என்றொரு ஆசிரியர் வருகிறார். அவர் பள்ளியில் கிரேக்க மொழி கற்பிக்கிறவர். வீட்டிலிருந்து எப்போது வெளியே புறப்பட்டாலும் கனத்த கோட்டும், குடையும் கலோஷேஸ். எனப்படும் காலணிகளைப் பாதுகாக்கும் நீண்ட உறையும் அணிந்து செல்வது அவரது வழக்கம். எவ்வளவு வெயில் அடித்தாலும் இதனைக் கைவிடமாட்டார். வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் பெலிகோவ். ஏதாவது வித்தியாசமாக நடந்தால், அதனால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்ற பயப்படுவார். …

பெலிகோவின் குடை Read More »