இலக்கியம்

ரோஜா மற்றும் பட்டாம்பூச்சி

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது மேஜிகல் ரியலிச எழுத்திற்காகப் புகழ்பெற்றவர். அவரது நாவல்களை விடவும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சிறுகதைகளில் அவர் உருவாக்கிக் காட்டும் அற்புதங்கள் நிகரில்லாதவை. 1970ல் வெளியான அவரது சிறுகதை. DEATH CONSTANT BEYOND LOVE. இப்போது வாசிக்கும் போதும் வியக்கவைக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் சிறுகதையில் அரிய 3சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் இந்தக் கதை தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் நாற்பத்திரண்டு வயதான செனட்டர் ஒனேசிமோ சான்செஸ் பற்றியது. அவர் இறப்பதற்குப் பதினொரு …

ரோஜா மற்றும் பட்டாம்பூச்சி Read More »

சிரிக்கும் பந்து

மதார் எழுதிய ஆறு கவிதைகள் மே மாத சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளன. இளங்கவிகளில் மதார் முக்கியமானவர். திருநெல்வேலியில் வசிக்கிறார். இவரது வெயில் பறந்தது நல்லதொரு கவிதைத் தொகுப்பு. சமீபமாக இவரது கவிதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மதார் எழுதும் கவிதைகளின் மையப்பொருள் சிறார்களின் உலகம். அவரது கவிதைகளில் விளையாட்டு தொடர்ந்து இடம்பெறுகிறது. சொல்வனத்தில் வெளியாகியுள்ள கவிதைகளிலும் முதல் கவிதை பலூனைப் பற்றியதே. இந்த ஆறு கவிதைகளும் தனித்துவமானவை. புதிய அனுபவத்தையும் பரவசத்தையும் தருகின்றன. …

சிரிக்கும் பந்து Read More »

பாஸ்டர்நாக்கின் ஜன்னல்.

1958ம் ஆண்டுத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்டபோது போரிஸ் பாஸ்டர்நாக் மாஸ்கோவிற்கு அருகிலிருந்த எழுத்தாளர்களுக்கான கிராமமான பெரெடெல்கினோவில் இருந்தார். அங்கே அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது மாக்சிம் கார்க்கியின் ஆலோசனைப் படி ஸ்டாலின் எழுத்தாளர்களுக்கான கிராமத்தினை உருவாக்கியிருந்தார். இயற்கையான சூழலில் நதிக்கரை ஓரமாக 250 ஏக்கர் பரப்பளவில் அந்தக் கிராமம் உருவாக்கப்பட்டு அதில் ஐம்பது எழுத்தாளர்களுக்குத் தனிவீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்புறமாக எளிய மரவீடுகளில் விவசாயிகள் குடியிருந்தார்கள். அங்கே விவசாயப் பணிகள் நடைபெற்றன. …

பாஸ்டர்நாக்கின் ஜன்னல். Read More »

அலைந்து திரிபவனின் உலகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைபயணங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். Wandering என்ற அந்தப் புத்தகத்தில் அவரது கவிதைகளும் கோட்டோவியங்களும் இடம்பெற்றுள்ளன. இயற்கையைப் பற்றிய அவரது புரிதலும் நெருக்கமும் வியப்பூட்டுகின்றன. 13 சின்னஞ்சிறிய கட்டுரைகள். ஒரு பதிவில் நாடோடி விவசாயிக்கு முற்பட்டவன். அவன் எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அவன் பாதையின் பாடலைக் கேட்டபடி நடந்து கொண்டிருக்கிறான். தானும் அவ்விதமான நாடோடியே என்கிறார் ஹெஸ்ஸே. அதே நேரம் நாடோடி சிற்றின்பத்தில், நாட்டம் கொண்டவன். எவரையும் பொய் …

அலைந்து திரிபவனின் உலகம் Read More »

இவான் துர்கனேவின் மகள்

ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் மூன்று குழந்தைகளின் தந்தையாக இருந்தார். இவர்கள் அவரது திருமணமற்ற காதல் உறவில் பிறந்தவர்கள். இதில் பெலகோயா எனப்படும் பாலினெட் அவரால் மகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாள். மற்ற இரண்டு பிள்ளைகளையும் தனது வாரிசுகள் என்று டயரியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இவான் துர்கனேவ் அதிகம் காதலையும் சாகசங்களையும் எழுதியவர். வேட்டையில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இணையாகக் காதலில் ஈடுபட்டவர். அவரை விட வயதில் …

இவான் துர்கனேவின் மகள் Read More »

ரஷ்ய நாவலின் உதயம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், இவான் துர்கனேவ் ஆகிய மூவரின் முக்கிய நாவல்களும் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல்களை வெளியிடுவதற்குத் தேர்வு செய்ததோடு அவற்றை எடிட் செய்து வெளியிட்டு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்தவர் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ்  இவரது உறுதுணையில் தான் மூன்று படைப்பாளிகளும் தங்களுக்கான இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்கள். கட்கோவோடு இவர்களுக்கு இருந்த நெருக்கம் மற்றும் மோதல்கள் பற்றி SUSANNE FUSSO எழுதிய …

ரஷ்ய நாவலின் உதயம் Read More »

வெர்தரின் காதல்

கதே எழுதிய The Sorrows of Young Werther நாவலை மறுபடி வாசித்தேன். Stanley Corngold மொழியாக்கம் செய்த புதிய பதிப்பு. அதன் தலைப்பு The Sufferings of Young Werther என மாற்றப்பட்டிருக்கிறது.  எனக்கு The Sorrows of Young Werther தலைப்பே பிடித்துள்ளது. கல்லூரி நாட்களில் இந்த நாவலை முதன்முறையாகப் படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, மயக்கம் இன்றைக்கு துளியும் மாறவில்லை. கதே என்றைக்குமானவர். அவரது நாவல் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.  ஒருவகையில் வெர்தர் நாம் …

வெர்தரின் காதல் Read More »

அழகிய மௌனம்

எனது ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பு குறித்து வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள மதிப்புரை Aindhu Varuda Mounam – S. Ramakrishnan written by Venky Aindhu Varuda Mounam (“Silence of five years) is an alluring collection of short stories ranging from the profound to the plebian. Author S. Ramakrishnan in 32 short stories takes his readers on a …

அழகிய மௌனம் Read More »

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ்

1843ம் ஆண்டு – தொடர்ச்சியாக மூன்று நாவல்கள் தோல்வியுற்ற காரணத்தால் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாத குழப்பத்திலிருந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக நிறையக் கடன் ஏற்பட்டிருந்தது. கடன்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். அதைச் சமாளிக்கப் பணம் கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார் டிக்கன்ஸ். அவரோ புதிய நாவல் ஏதாவது எழுதினால் முன்பணம் தருகிறேன் என்கிறார். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் பதிப்பாளரிடம் புதிய நாவலை ஆரம்பித்துவிட்டதாகப் பொய் சொல்லி முன்பணம் பெறுகிறார் டிக்கன்ஸ். புதிய …

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ் Read More »

அறியப்படாத கார்க்கி

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ் போல மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை விரிவாக எழுதப்படவில்லை. ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமானது. ஸ்டாலின் அரசோடு அவருக்கு ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடிகள் பற்றி அதில் எதுவுமில்லை. Henri Troyat எழுதிய Gorky: A Biography கூட முழுமையானதில்லை. MAXIM GORKY : A POLITICAL BIOGRAPHY என்ற T. YEDLAN புத்தகத்தில் அவரது வாழ்க்கையின் கடைசிப்பகுதி விவரிக்கப்படுகிறது. தனது பால்ய வயது துவங்கி இளைஞனான …

அறியப்படாத கார்க்கி Read More »