இலக்கியம்

பகலில் எரியும் விளக்கு

தாய் தந்தையை நினைவு கொள்வதற்குக் கட்டுரை தான் சிறந்த வடிவம். கதையில் அவர்களை இடம்பெறச் செய்தால் உணர்ச்சிப்பூர்வமாகி விடுகிறார்கள். இயல்பை விட அதிகமாகவோ, குறையாகவோ சித்தரிக்கபட்டு விடுகிறார்கள். கவிதையில் இடம்பெற்றாலோ அரூபமாகிவிடுகிறார்கள். கவிதையில் இடம் பெறும் அன்னை கவிஞனின் அன்னையாக மட்டும் இருப்பதில்லை. இலக்கிய வடிவம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உறவினை மட்டுமே சரியாகக் கையாளுகிறது. வெளிப்படுத்துகிறது என்பது எனது எண்ணம். மனிதர்கள் எதை, எப்போது, எதற்காக நினைவு கொள்கிறார்கள் என்பது விநோதமானது. இறந்து போன தனது …

பகலில் எரியும் விளக்கு Read More »

எடித் ஹாமில்டன்

அமெரிக்கன் கிளாசிசிஸ்ட்: தி லைஃப் அண்ட் லவ்ஸ் ஆஃப் எடித் ஹாமில்டன் என்ற புத்தகத்தை விக்டோரியா ஹவுஸ்மேன் எழுதியிருக்கிறார். இது எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹாமில்டனின் பால்ய நினைவுகள், அவரது பெற்றோர். வளர்ந்த சூழல் மற்றும் கிரேக்க இலக்கியங்கள், லத்தீன் மொழி மீது கொண்ட ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது குடும்பச் சூழல் காரணமாகப் படித்து முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தை ஒரு குடிகாரர். தாயும் சகோதரியும் நோயாளிகள். ஆசிரியராகப் பணியைத் துவங்கி …

எடித் ஹாமில்டன் Read More »

பயனற்றதன் பயன்கள்

பெல்ஜிய-ஆஸ்திரேலிய எழுத்தாளரான சைமன் லீஸ் சீன கலை மற்றும் இலக்கியத்தில் புகழ்பெற்ற அறிஞர். அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது கலை, இலக்கியம், வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே The Hall of Uselessness: Collected Essays சீன பண்பாட்டிலிருந்து அவர் கற்றுக் கொண்ட உண்மையின் அடையாளமாகவே இந்த நூலின் தலைப்பும் வைக்கபட்டிருக்கிறது. பயனற்றதன் பயன்பாடு பற்றிய பார்வைகளை முன்வைக்கிறார். பிரெஞ்சு இலக்கியம் குறித்த கட்டுரைகளில் பால்சாக் பற்றியது சிறப்பாகவுள்ளது. பால்சாக்கின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்தவிரிவான …

பயனற்றதன் பயன்கள் Read More »

ஸ்தானிஸ்லாவ் திகாத்

போலந்து எழுத்தாளர் ஸ்தானிஸ்லாவ் திகாத் (Stanisław Dygat) எழுதிய தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற சிறுகதையைக் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் இக்கதை வெளியாகியுள்ளது. இந்தக் கதை வெளியான நாட்களிலே தஸ்தாயெவ்ஸ்கியை இவ்வளவு வியந்து எழுதியுள்ள திகாத் வேறு என்ன சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஏதேனும் கட்டுரை அல்லது நூல் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. An Unknown Fragment from Dostoevsky’s Life என்ற திகாத்தின் …

ஸ்தானிஸ்லாவ் திகாத் Read More »

நிசார் கப்பானியின் காதல் கவிதைகள்

கவிஞர் நிசார் கப்பானியின் (Nizar Qabbani) அராபிய காதல்கவிதைகள் தொகுப்பினை வாசித்தேன். மிகச்சிறந்த காதல்கவிதைகள். காதலிப்பவர்களுக்கு வழக்கிலுள்ள சொற்கள் போதுமானதாகயில்லை. புதிய சொற்களை தேடுவதை விடவும் சொற்கள் இல்லாமல் காதலிக்க முயலுகிறார்கள் என்கிறார் கப்பானி. இவரது கவிதைகள் எளிமையானவை. ஆனால் வியப்பூட்டுபவை. காதலின் பித்து கவிதையாக மலருகிறது. குறிப்பாக முட்டாள் பெண்ணின் கடிதம் போன்ற கவிதையில் வரலாற்று நினைவுகளின் வழியே காதலைப் பேசுகிறார். விளக்கை விடவும் வெளிச்சம் முக்கியம், குறிப்பேடினை விடவும் அதில் எழுதப்பட்ட கவிதை முக்கியம், …

நிசார் கப்பானியின் காதல் கவிதைகள் Read More »

காதலின் சாவி.

கிரேக்கத் தொன்மத்தில் வரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் (Pyramus and Thisbe) காதல் கதையின் பாதிப்பில் தான் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டும் பகையான குடும்பத்திற்குள் நடக்கும் காதலையே பேசுகின்றன. ரோமானிய கவிஞர் ஓவிட் இக்கதையைத் தனது மெட்டாமார்போசிஸில் சிறப்பாக எழுதியிருக்கிறார். கிழக்குப் பாபிலோனில், ராணி செமிராமிஸ் நகரத்தில், அடுத்தடுத்த வீட்டில் வசித்துவரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் பெற்றோர்கள் நீண்டகாலமாக வெறுப்பும் பகையும் கொண்டிருந்தார்கள். ஆனால் காதலர்களான பிரமிஸ் மற்றும் திஸ்பே இரண்டு வீட்டிற்கும் …

காதலின் சாவி. Read More »

பிறப்பின் பின்னால்

அகோதா கிறிஸ்டோஃப் ஒரு ஹங்கேரிய எழுத்தாளர். இவரது The Illiterate, என்ற கட்டுரை நூல் வாசிப்பின் மீதான அவரது ஆர்வம் மற்றும் எழுத துவங்கிய நாட்கள் பற்றியது. I read. It is like a disease என்ற நூலின் முதல் வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாசிப்பில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பொருந்தக்கூடிய வரியது. இதில் அவர் சிறுவயதில் கையில் கிடைத்த எல்லாவற்றையும் படித்த நாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அப்போது அவர் மீது வீட்டில் வைக்கபட்ட …

பிறப்பின் பின்னால் Read More »

ரிக்யூவின் தேநீர்

ஜப்பானிய தேநீர் கலையின் மாஸ்டராகக் கருதப்படுகிறவர் சென் ரிக்யூ. துறவியான இவர் தேநீர் தயாரிப்பதையும் பகிர்வதையும் கலையின் நிலைக்கு உயர்த்தினார். உலகெங்கும் தேநீர் உற்சாகம் தரும் பானமாக அருந்தப்பட்ட போதும் ஜப்பானில் தான் அது கலையாக மாறியது. 16 ஆம் நூற்றாண்டில் இந்த மாற்றம் ஏற்பட்டது. ரிக்யூவின் காலத்தில் தேநீர் என்பது சாமானியர்கள் குடித்த பானமில்லை. தேநீர் குடிப்பது அரசின் உயர் அதிகாரிகளும், பௌத்த மதகுருக்களுக்கும் மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. அதுவும் அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள் கௌரவிக்கப்படுவதற்காகத் …

ரிக்யூவின் தேநீர் Read More »

குளிர்மலைக்குச் செல்லும் வழி

மலையை நோக்கிச் செல்லும் பாதைகள் வசீகரமானவை. அவை அறியாத உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்பவை. தொலைவிலிருந்து மலைப் பாதையைக் காணும் போது அது மலையின் நாக்கை போலவேயிருக்கிறது. உண்மையில் பாதைகள் காத்திருக்கின்றன. மனிதர்களைப் போலவே பாதைகளுக்கும் வாழ்நாளிருக்கிறது. சில பாதைகள் அற்ப ஆண்டுகளில் மறைந்து விடுகின்றன. பழைய பாதைகள் கதை சொல்லக் கூடியது என்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். அது உண்மையே. பாதையை நம்முடைய தலை மறந்துவிடும் கடந்து சென்ற பாதங்கள் மறக்காது என்றொரு சீனப்பழமொழி இருக்கிறது. …

குளிர்மலைக்குச் செல்லும் வழி Read More »

உளவாளியின் மனசாட்சி

மாக்சிம் கார்க்கியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு The Fall of a Titan என்ற நாவலை எழுதியிருக்கிறார் ரஷ்ய எழுத்தாளர் இகோர் கூஸெங்கோ. இரண்டாம் உலகப்போரின் போது இவர் கனடாவில் ரஷ்ய உளவாளியாகப் பணியாற்றியவர். இந்த நாவலை 1955ம் ஆண்டுத் தமிழ்சுடர் பதிப்பகம் வீழ்ச்சி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. கே.எம்.ரங்கசாமியும். ஜி. கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.. 492 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இப்போது இந்நூலின் பதிப்பு கிடைப்பதில்லை. அமெரிக்க அரசு அணுஆயுதம் தயாரிப்பதை அறிந்த …

உளவாளியின் மனசாட்சி Read More »