இலக்கியம்

ஷேக்ஸ்பியரின் நிழலில்

All men who repeat one line of Shakespeare are William Shakespeare. – Borges ஒரு எளிய வாசகன் ஷேக்ஸ்பியரை அணுகும்போது அவன் முன்பாக எண்ணிக்கையற்ற கேள்விகள் தோன்றுகின்றன. ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது முக்கிய நாடகங்கள் எவை? அந்த நாடகங்களை எப்படி நிகழ்த்தினார்கள்? அவரது வாழ்வுக்குறிப்புகள் நிஜமானவையா? ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பின்புலம் என்ன? அவரது சமகால அரசியல் கலாச்சார சூழல்கள் எப்படியிருந்தது? ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி எதிர் கொள்ளபட்டன? எதற்காக நாம் ஷேக்ஸ்பியரை …

ஷேக்ஸ்பியரின் நிழலில் Read More »

நெடுந்தனிமை

புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது என்பார்கள். இந்த இரண்டு மரங்களின் புகைப்படங்களும் எனக்கு உலகின் தொன்மையை, தனிமையை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.இரண்டும் சாதாரணமான மரங்கள் அல்ல. தன்னளவில் மிகத் தனிமையான மரங்கள். இதைப்போல இன்னொரு மரம் உலகில் இல்லை என்பதே இதன் சிறப்பு. அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள். ஒன்று ஜெனரல் ஷெர்மான் எனப்படும் உலகிலே மிக வயதான மரம். இதன் வயது 2200 வருசங்களுக்கும் மேல் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா …

நெடுந்தனிமை Read More »

இரண்டு குறுங்கதைகள்

மஞ்சள் கொக்கு பல மாதங்களாக வேலையற்றுப்போனதால் சகாதேவன் மிகுந்த மனச்சோர்வு கொண்டிருந்தான். நண்பர்களும் உறவும் கசந்து போயிருந்தார்கள். வெளிஉலகின் இரைச்சலும் பரபரப்பும் அவனைத்; தொந்தரவு செய்தது. சாப்பிடுவதற்கு கூட அவன் தயக்கம் கொள்ளத்; துவங்கினான். உலகின் மீது தீராத வன்மமும் ஆத்திரமும் மட்டுமே அவனுக்குள் இருந்தது. யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறைக்கதவை சாத்திக் கொண்டு செய்வதறியாமல் தன்னிடமிருந்த தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து விளையாட்டாக உரசி உரசி போட்டபடியே இருந்தான். அது ஒன்று தான் அவனது ஒரே பொழுது …

இரண்டு குறுங்கதைகள் Read More »

இலக்கிய வேதாளம்

எழுதத் துவங்கிய நாள் முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நானே நிறையக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது. சில வருடங்களின் முன்பாக திண்டுக்கல்லில் உள்ள தன்னார்வ அமைப்பு லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து பேசுவதற்காக ஒரு முறை என்னை அழைத்திருந்தார்கள்.ஒரு வார …

இலக்கிய வேதாளம் Read More »

பழகிய பாரதி

பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர …

பழகிய பாரதி Read More »

யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை.

பள்ளிப்பாடப்புத்தகங்களில் பலரும் படித்து மறந்து போன  நூறு பெயர்களில் ஒன்று யுவான் சுவாங். சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி. பருத்து வீங்கிய கழுத்து, வட்டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடலமைப்பு கொண்ட யுவான்சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் யுவான்சுவாங் பற்றிய அறிவு ஐந்து மார்க் கேள்விக்கான விடை மட்டுமே. ஆனால் இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளத் துவங்கிய போது எளிதில் …

யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை. Read More »

மறந்து போன மௌனி

2007 ஆண்டு மௌனியின் நூற்றாண்டுவிழா. ஆனால் புதுமைப்பித்தன் போல மௌனி பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. ஒரு வேளை மௌனி எந்த இலக்கியக் குழுவையும் சேராமலிருந்தது இதற்கு காரணமாக இருந்திருக்க கூடும். மௌனியின் படைப்புலகம் குறித்து சமகாலப் பார்வைகளுடன் கூடிய விமர்சனம் இன்று தேவையாக உள்ளது. ஒரு முறை ஜெயகாந்தனிடம் அவருக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக சொன்னபோது அவர் மௌனியின் கதையைத் தேர்வு செய்ததோடு, தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி என்று குறிப்பிட்டுள்ளார். தனது சக எழுத்தாளர்கள் …

மறந்து போன மௌனி Read More »

அலன் ராபே கிரியே

கதையைக் கடந்து செல்லும் காட்சிகள். சமகால பிரெஞ்சு இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படும் அலன் ராபே கிரியே(Alain Robbe-Grillet) தனது எண்பத்தைந்தாவது வயதில் நேற்று மரணமடைந்தார். பிரெஞ்சு நவீன இலக்கிய உலகில் ராபே கிரியேவின் பெயர் தனித்துவமானது. கதை சொல்லலில் அவர் நிகழ்த்திய மாற்றங்களே இன்றைய பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. ராபே கிரியேவின் சிறுகதை ஒன்றை கல்குதிரை வெளியிட்ட உலகச்சிறுகதை தொகுதிக்காக நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு இலக்கியத்தில் தொடர்ந்து …

அலன் ராபே கிரியே Read More »

அவமானத்தின் முன் மண்டியிடல்

எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதை தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து துஷிக்கபட்டும் கடுமையான வசைகளும் ஏளனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளான ஒரு எழுத்தாளன் அவர். …

அவமானத்தின் முன் மண்டியிடல் Read More »

எழுதுவது ஏன்?

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில். எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார் 1) எழுதுவதற்கான …

எழுதுவது ஏன்? Read More »